🌺 இராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திற்கும் அந்த நிகழ்வுகளை மையமாக கொண்டே பெயர்கள் அமைகின்றன ஆனால் விதிவிலக்காக அமைந்தது சுந்தர காண்டமே
🍁 இங்கு வானர சிரேஷ்டனான சொல்லின் செல்வன் அனுமந்தனின் புத்திகூர்மை மற்றும் வீரசாகசங்கள் தெளிவாக உள்ளன அச்சுந்தர காண்டம் பற்றி காண்போம்
🌼 அனுமந்தன் அஞ்சனை தேசத்தின் இளவரசன் ஆவார் அவரது தந்தை கேசரி இராமாயண யுத்தத்தில் பங்குபெற்றார் ஆனால் அனுமந்தன் தன் குருவான சூரிய தேவரின் கட்டளைப்படி சுக்ரீவனிடம் அமைச்சனாக இருந்தார்
🍁 இராவணன் ராகவன் பத்தினி ஜானகியை வனவாசம் வந்தபோது கடத்தி சென்றார் இதனால் சுக்ரீவனனின் நட்பை பெற்று அவருக்கு சகாயம் புரிந்ததால் சுக்ரீவனனின் வானரசேனை நாற்புறமும் சீதா தேவியை தேடிச்செல்கின்றனர்
☁ கோடிக்கணக்கான வானர வீரர்கள் மைதிலியை தேட சென்றாலும் சுக்ரீவரின் நம்பிக்கைக்கு உரியவராய் திகழ்ந்தது அனுமானே இதனாலே அனுமானுக்கு மட்டும் சிறப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன
🍃 இதனால் இராமபிரானும் சீதா தேவியை கண்டால் தனது நிமித்தம் காரணமாக வந்ததை தெரிவிக்க தனது கணையாழியை தருகிறார்
🌼 நாற்புறமும் ஜானகியை தேடச்சென்ற படைகளனைத்திலும் தென்திசை தவிர மற்ற படைகள் திரும்புகின்றன ஆனால் தென்திசை சென்ற படைகளில் காலக்கெடுவான ஒரு மாதம் கடந்தபின்னும் சீதா தேவியை காண முடியாததால் தங்கள் உயிரை மாய்க்க துணிகின்றன
🍁 அந்த நேரத்தில் சூரியனின் தேரோட்டியான அருணனின் மூத்த மகனும் ஜடாயுவின் தமயனும் சூரிய கதிர்களினால் தனது இறக்கையை இழந்தவனுமான சம்பாதியை காண்கின்றனர்
🍁 சம்பாதி அவர் இனத்திற்கே உரிய திவ்ய பார்வையை கொண்டு சீதை இருக்கும் இடத்தையும் தனது மகன் புஷ்பக விமானத்தில் இராவணன் சீதையை கடத்தி சென்றதை கண்டதையும் உரைக்கிறார்
🌼 அப்பொழுது ஆச்சாரியத்தின் உச்சமாக நிசாகர முனிவரின் சொல்லின்படி அனைத்து வானரங்களின் முன்பாக சம்பாதியின் சிறகுகள் நொடிப்பொழுதில் வளர்ந்தன இதைகண்ட வானரர்களுக்கு புதுத்தெம்பு கிட்டியது அவர்கள் சீதா தேவியை கண்டுவிட்டது போலவே உணர்ந்தன
🌹 இதனால் சம்பாதி கூறியதுபோலவே அவர்கள் சமுத்திரத்தின் அருகே வந்தன ஆனால் சமுத்திரத்தை தாண்டி அக்கரை சேர்வது மிகவும் கடினம் என அப்போதே அவர்கள் உணர்ந்தனர்
🌺 எதிர் இருக்கும் நூறு யோஜனை சமுத்திரத்தை தாண்டுவது பெருங்காரியமாக இருந்தது வானர சேனையில் வயதாகிவிட்டதால் ஜாம்பவான் 90 யோஜனை தாண்டுவேன் என்றும் அங்கதன் 100 யோஜனை தாண்டுவேன் ஆனால் திரும்ப வருவது என்னால் இயலாது என்கிறார் அப்போதே சிறுவயது முதல் அனுமனை அறிந்தவரான ஜாம்பவான் இக்காரியம் ஒருவனால் எளிதாக முடியும் ஆனால் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும் அவ்வளவே என அனுமானை ஊக்கப்படுத்துகிறார்
🌼 மாருதி அதீத சக்திகளின் விளைவால் சிறுவயதில் செய்த சேட்டையால் பிருகு மற்றும் ஆங்கிரசரின் குடும்பத்தின் வழிவந்தவரும் மகாபாரதத்தில் பீஷ்மர் ஞானோபதேசம் வழங்கியபோது உடன் இருந்தவருமான மாமுனிவர் திரிணபந்து அனுமான் தன் சக்திகளை மறப்பார் என சபிக்கிறார் பிறகு விமோசனமாக மற்றொருவர் ஞாபகப்படுத்தினால் அதை திரும்ப பெறுவார் என உரைக்கிறார் இதனால் ஜாம்பவான் கூறியபின் அனுமானிற்கு தனது சக்தி ஞாபகம் வருகிறது
🌺 முன் நூறு யோஜனை தாண்ட முடியுமா என யோசித்த அனுமான் தற்போது விஸ்வரூபம் எடுக்கிறார் அப்போது அவர் முழு வேகத்தோடு செல்லும் கருடனை கூட நான் ஒரே முயற்சியில் ஆயிரம் வலம் வருவேன் என்கிறார் எனில் அவரின் வேகத்தை யூகிக்கலாம்
🍀 பறப்பது வேறு தாண்டுவது வேறு இங்கு அனுமான் நான் 16,000 யோஜனை தூரத்தை கூட தாண்டுவேன் என அவர் மனம் கூறுகிறது என்கிறார்
🌼 தான் பறக்கும்போது வரும் விசையின் காரணமாக இந்த நிலமே பாதிக்கப்படும் என்று மகேந்திர மலையின் உச்சிக்கு ஏறுகிறார்
👑 எந்நகரத்தின் பெயர் கேட்டாலே தேவர்கள் நடுங்குவார்களோ
👑 ஏந்நகரத்தில் திக்கஜங்களுடன்கூட போரிட்ட இராவணன் மற்றும் அரக்கசிரேஷ்டர்கள் 1000 வெள்ளப்படையுடன் உள்ளனரோ
👑 எந்நகரத்தின் மீது தேவர்கள்,கந்தர்வர்கள், தானவர்கள், யட்சர்கள் என அனைவரும் சேர்ந்துகூட போர்தொடுக்க அஞ்சுவார்களோ
👑 அந்நகரத்தின் மீது தன்னந்தனி ஆளாக வானரசிரேஷ்டன் வாயுபுத்திரன் சூறாவளியையும் மிஞ்சும் வேகத்தில் பாய்வதில் தொடங்குகிறது சுந்தர காண்டம்
🌹 முற்காலத்தில் மலைகள் எல்லாம் பறக்கும் திறன் கொண்டவையாக இருந்தன இதனால் முனிவர்கள் அச்சப்பட இந்திரன் அவற்றின் இறக்கை எல்லாம் வெட்டி எறிகிறார் இவற்றில் மைநாக பர்வதத்தினை மட்டும் வாயு தேவன் காப்பாற்றி கடலில் சேர்க்கிறார் அங்கு வருணன் அடைக்கலம் கொடுத்தார்
🌹 வருணனை வளர்த்தவர் சூரிய வம்சத்தின் ஸகரன் என்ற மன்னனே ஆவார் இதனால் கடமைப்பட்ட வருணன் அனுமானுக்கு உதவ மைநாக பர்வதத்திடம் இதை கூற அம்மலை அனுமான் சமுத்திரத்தை தாண்டும்போது இடையில் ஓய்வு எடுப்பதற்காக கடலின் மேல் வருகிறது இதை அனுமான் தடங்கலோ என நினைத்து தன் மார்பால் இடிக்கிறார் ஆனால் உள்ளதை எல்லாம் கூறி உபசரிப்பை ஏற்கவேண்டுகிறது
🌻 ஆனால் அனுமான் இராம காரியம் முடிக்கும் முன் ஓய்வு எடுக்கமாட்டேன் என கூறி தனது கரத்தால் தடவிகொடுத்து இதுவே நான் உன் உபசரிப்பை ஏற்றதுபோல் ஆகும் என கூறிச்செல்கிறார் இதைக்கண்டு மகிழ்ந்த இந்திரன் மைநாக பர்வதத்திற்கு இனி பயமில்லாமல் இஷ்டபடி வாழ வரமளிக்கிறார்
🌹 இம்மலையை தாண்டி அனுமந்தன் செல்கையில் நாகங்களின் தாயாகிய ஸுரசை என்பவளை அனுகிய இந்திரன் வாயுபுத்திரனை இடையில் ஒரு முகூர்த்தகாலம் தடுக்க சொல்கிறார் அவ்வாறே செல்லும் ஸுரசை பயங்கர இராட்ஷசர் உருவம் கொண்டு அனுமானை தடுக்கிறார்
🌹 இப்பாதையில் செல்லும் அனைத்தும் தனக்கு உணவாக வேண்டும் என கூறுகிறார் ஸுரசை இதைக்கேட்ட அனுமான் தான் இராம காரியம் காரணமாக செல்வதாகவும் சீதா தேவியை பார்த்துவிட்டு இராமபிரானிடம் அதை தெரிவித்து பின் தானே இங்கு வந்து உணவாவதாகவும் வாக்களிக்கிறார்
🌸 ஆனால் இவ்வழியாக செல்லும் அனைத்து உயிரினங்களும் தன் வாயில் நுழைந்தே ஆகவேண்டும் இது பிரம்மாவின் வரம் என கூற சரியென அனுமந்தரும் தனது உருவத்தை பெரிதாக்க அவ்வாறே தனது வாயை பெரிதாக திறக்கிறார் இராட்ஷசி உருவில் இருந்த ஸுரசை
🌺 இச்சமயத்தில் திடீரென தனது வடிவத்தை சுருக்கி கொண்ட மாருதி வாயினுள் புகுந்து வெளிவந்தான் இது ஆச்சரியமாக இருந்தது பின் நான் உங்கள் எண்ணப்படியும் பிரம்மாவின் வரத்தின்படியும் உள்புகுந்து வெளிவந்துவிட்டேன் எனக்கூற ஸுரசை தன் சுயரூபத்தை காட்டி ஹனுமனை ஆசிர்வதிக்கிறார்
🌺 பின் தன்பணியை துவங்கும் அனுமான் வேகமாக செல்கிறார் பிறகு நிழலை பிடித்து அசையவிடாமல் செய்து உயிரினங்களை விழுங்கும் ஹிம்சிகையென்னும் அரக்கி அனுமானின் நிழலை பிடிக்கிறார் திடீரென்று தனது வேகம் குறைவதை கண்ட அனுமான் இராட்ஷசி தன்னை விழுங்க வருவதை கண்டார்
🌺 ஏற்கனவே சுக்ரீவன் இதைப்பற்றி அறிவுறுத்தியதால் இதான் ஹிம்சிகை என வாயுபுத்திரன் அறிகிறார் இதனால் முன்போல தனது உருவத்தை பெரிதாக்கி பின் அவளது வாயினுள் செல்லும் மாருதி அவளது முக்கிய பாகங்களை அடித்து அவளை கொன்று வெளிவந்து திரும்பவும் தன்பணியை தொடர்கிறார்
🌻 இவ்வாறு வாயு வேகத்தில் செல்லும் கேசரிநந்தன் குபேரனிடம் இருந்து பிடுங்கிய நகரமும் அமராவதியை செல்வத்தில் மிஞ்சும் நகரமான இலங்கையை சென்றடைகிறார்
🍃 இலங்கை சென்றடைந்த அஞ்சனை புத்திரன் பகல் வேளையில் இலங்கையினுள் நுழைந்தால் நம்காரியம் கெட்டுவிடும் என யோசித்து அதற்கு இராத்திரியே சரியான நேரம் என எண்ணி பர்வதத்தில் ஏறி இலங்கையின் பாதுகாப்பு அம்சங்களை நோட்டமிடுகிறார் அனுமான்
🌹 தேவாசுரர்களேயாலும் நுழையமுடியாத இலங்கை காக்கப்படும் விதத்தை ஆராய்கிறார் ஏந்நேரமும் நாற்புறமும் காக்கப்படும் இலங்கையை கண்டு வானரர்கள் இங்கு எவ்வாறு வரக்கூடும் எனவும் அப்படியே வந்தாலும் அவை ஆழிகள் மற்றும் இக்கோட்டையை தாண்டி இலங்கையை எவ்வாறு வெல்லும் என யோசிக்கிறார் பின் முதலில் நான் சீதா தேவியை கண்டபிறகே இதையெல்லாம் ஆலோசிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்
🍃 ஒரு வழியாக அனுமான் காத்திருந்த இராத்திரி பொழுது வருகிறது தன் உருவத்தை ஒரு பூனையின் உருவிற்கு சுருக்கிகொண்ட இலங்கையின் வாசலை அடைகிறார்
🌹 ஆனால் அவ்வுருவத்தையும் இலங்கினி எனும் இலங்கையின் காவல்தேவதை காண்கிறாள் இலங்கினியே இலங்கையின் மொத்த ரூபமாவாள் அவள் அனுமந்தரை மிரட்டும் தோனியில் யார் எனகேட்க அவரும் கூற அவரை ஓங்கி அடிக்கிறார் இதனால் கோபம் கொண்ட பஜ்ரங்கபளி பெண் என்பதால் இடது கையால் அதுவும் முழுபலத்தை உபயோகிக்காமல் ஒரு அடி கொடுக்கிறார்
🍁 இந்த அடியிலே லங்கினி வீழ்கிறாள் அதன்பிறகே அவளுக்கு தனது சாபம் நினைவுக்கு வருகிறது முற்காலத்தில் பிரம்மாவின் வாயில்காப்பவளாக இருந்த இலங்கினி அவளது அகங்காரத்தினால் இராட்ஷசர்களின் காவலாளியாக போ என்ற சாபத்தை பிரம்மாவிடம் பெற்றார் பிறகு மனமிரங்கிய அவர் என்று நீ ஒரு வானரன் அடியால் வீழ்கிறாயோ அன்றிலிருந்து இராட்ஷசர்களின் அழிவு தொடங்கும் அப்போது உனக்கு விமோசனம் என கூறினார்
🌺 இது நினைவிற்கு வர லங்கினி விஜயந்திரியனை வணங்கி இலங்கையினுள் செல்ல அனுமதியளிக்கிறார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🌻 இங்கு கவனிக்க வேண்டிய விசயம் ஹனுமான் சந்தித்த மூன்று தடைகளுமே பெண்களாவர்
👑 ஸுரசையிடம் காட்டிய பணிவு லங்கினியிடம் இல்லை
👑 லங்கினியிடம் பெண் என்பதால் காட்டிய பரிதாபம் ஹம்சிகையிடம் இல்லை
👑 தான் யார் என்றும்
👑 பிரம்மாவிடம் வரம்பெற்றதால் தன்னால் இப்பாதையில் வரும் எவரையும் உண்ண முடியும் என்ற அகங்காரமில்லாமலும்
👑 ஹனுமானை உணவாக அவரிடமே கேட்டதாலும்
👑 ஸுரசையின் குணத்தை கண்டு அவருக்கு மதிப்பளித்தார் கபிசிரேஷ்டர்
👑 காவல் தேவதையாக இருந்த லங்கினி தனது கடமையை எடுத்துரைத்தாள் கொஞ்சம் கோபத்துடன்
👑 ஹனுமானிடம் தனது பலத்தை காட்ட ஒரு அடி குடுத்தாள் லங்கினி ஆனால் லங்கினியின் செயலால் பலமே இங்கு பேசப்படும் என்றாலும் அனுமான் இடக்கையால் தனது முழு பலத்தை பயன்படுத்தாமல் குறைவாக அடி கொடுத்தார்
👑 மற்ற இருவரை காட்டிலும் ஹம்சிகையின் செயல் வேறாகும் மற்ற இருவரை பற்றியும் வாயுபுத்திரன் அறியவில்லை ஆனால் ஹம்சிகை பற்றி ஹனுமானுக்கு சுக்ரீவன் தெளிவாக கூறியிருந்தார் மேலும் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை ஆஞ்சநேரை நேரடியாக முழுங்கவே செய்தார் பிறகே வீரமைந்தன் அவளை வதைப்பது அன்றி வேறுசெயல்கள் செல்லாது என பிளந்தார்
👑 இம்மூன்று நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கினால் விஜயந்திரியனின் பார்வைபுரியும்
ஸுரசையிடம் மேன்மை குணத்தையும்
இலங்கினியிடம் பெண்மையும் கண்ட மாருதி
ஹம்சிகையிடம் அரக்கதனத்தை மட்டுமே கண்டார்
👑 இராம காரியத்திற்கு செல்லும் ஹனுமானை இந்திரன் ஏன் ஸுரசை அனுப்பி சோதிக்க வேண்டும் இது அனைவருக்கும் எழும் கேள்வி
👑 முதலில் எதிர்த்தது ஸுரசை இங்கு இரண்டு காரியங்களே சாத்தியமாகும்
👑 அதாவது ஒன்று பிரம்மாவின் வரமாதலால் ஸுரசைக்கு இறையாதல்
👑 இல்லை பிரம்மாவின் வரத்தை மீறும் செயலாக ஸுரசையை சண்டையிட்டு வீழ்த்தி முன்னே செல்லவேண்டும்
👑 இந்த நேரத்தில் மாருதியின் செயல்கண்டு வியக்காதோர் இல்லை ஏனெனில் அவர் இவை இரண்டையும் செய்யவில்லை பிரம்மாவின் வரத்தை உதாசீனம் செய்யவும் இல்லை மாறாக உணவாகவும் இல்லை
👑 இதனால் அனுமானின் விவேகம் நன்கு வெளிப்பட்டது அனைவரும் வியக்கும் மூன்றாம் முடிவை அவர் எடுத்தார்
👑 கடல் கடந்து இலங்கையில் இறங்கியாகிவிட்டது ஆனால் கேசரிநந்தன் அவசரபடவில்லை இரவு வரை காத்திருந்தார் ஆனால் அந்த நேரத்தையும் விரயம் செய்யவில்லை மாறாக இலங்கையின் பாதுகாப்பை உற்று நோக்கினார்
👑 அவர் ஒவ்வொன்றையும் நோக்கி இது வானர சேனைக்கு சாத்தியமா இல்லை இதை சாதிக்க வல்லவர்கள் நம் சேனையில் யார் என யோசிக்கிறார் அவரின் பார்வையில் இராம லட்சுமணர்கள் மற்றும் 10 வானரங்களை தவிர வேறு எவராலும் இலங்கையின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முடியாது இவ்வாறு அவர் பார்வையிலேயே செய்த ஆராய்ச்சி அவரின் விவேகத்தின் உச்சியாகும்
🔰 அடுத்த பதிவில் சீதா தேவியை கண்ட ராமதூதன்
🍁 இங்கு வானர சிரேஷ்டனான சொல்லின் செல்வன் அனுமந்தனின் புத்திகூர்மை மற்றும் வீரசாகசங்கள் தெளிவாக உள்ளன அச்சுந்தர காண்டம் பற்றி காண்போம்
🌼 அனுமந்தன் அஞ்சனை தேசத்தின் இளவரசன் ஆவார் அவரது தந்தை கேசரி இராமாயண யுத்தத்தில் பங்குபெற்றார் ஆனால் அனுமந்தன் தன் குருவான சூரிய தேவரின் கட்டளைப்படி சுக்ரீவனிடம் அமைச்சனாக இருந்தார்
🍁 இராவணன் ராகவன் பத்தினி ஜானகியை வனவாசம் வந்தபோது கடத்தி சென்றார் இதனால் சுக்ரீவனனின் நட்பை பெற்று அவருக்கு சகாயம் புரிந்ததால் சுக்ரீவனனின் வானரசேனை நாற்புறமும் சீதா தேவியை தேடிச்செல்கின்றனர்
☁ கோடிக்கணக்கான வானர வீரர்கள் மைதிலியை தேட சென்றாலும் சுக்ரீவரின் நம்பிக்கைக்கு உரியவராய் திகழ்ந்தது அனுமானே இதனாலே அனுமானுக்கு மட்டும் சிறப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன
🍃 இதனால் இராமபிரானும் சீதா தேவியை கண்டால் தனது நிமித்தம் காரணமாக வந்ததை தெரிவிக்க தனது கணையாழியை தருகிறார்
🌼 நாற்புறமும் ஜானகியை தேடச்சென்ற படைகளனைத்திலும் தென்திசை தவிர மற்ற படைகள் திரும்புகின்றன ஆனால் தென்திசை சென்ற படைகளில் காலக்கெடுவான ஒரு மாதம் கடந்தபின்னும் சீதா தேவியை காண முடியாததால் தங்கள் உயிரை மாய்க்க துணிகின்றன
🍁 அந்த நேரத்தில் சூரியனின் தேரோட்டியான அருணனின் மூத்த மகனும் ஜடாயுவின் தமயனும் சூரிய கதிர்களினால் தனது இறக்கையை இழந்தவனுமான சம்பாதியை காண்கின்றனர்
🍁 சம்பாதி அவர் இனத்திற்கே உரிய திவ்ய பார்வையை கொண்டு சீதை இருக்கும் இடத்தையும் தனது மகன் புஷ்பக விமானத்தில் இராவணன் சீதையை கடத்தி சென்றதை கண்டதையும் உரைக்கிறார்
🌼 அப்பொழுது ஆச்சாரியத்தின் உச்சமாக நிசாகர முனிவரின் சொல்லின்படி அனைத்து வானரங்களின் முன்பாக சம்பாதியின் சிறகுகள் நொடிப்பொழுதில் வளர்ந்தன இதைகண்ட வானரர்களுக்கு புதுத்தெம்பு கிட்டியது அவர்கள் சீதா தேவியை கண்டுவிட்டது போலவே உணர்ந்தன
🌹 இதனால் சம்பாதி கூறியதுபோலவே அவர்கள் சமுத்திரத்தின் அருகே வந்தன ஆனால் சமுத்திரத்தை தாண்டி அக்கரை சேர்வது மிகவும் கடினம் என அப்போதே அவர்கள் உணர்ந்தனர்
🌺 எதிர் இருக்கும் நூறு யோஜனை சமுத்திரத்தை தாண்டுவது பெருங்காரியமாக இருந்தது வானர சேனையில் வயதாகிவிட்டதால் ஜாம்பவான் 90 யோஜனை தாண்டுவேன் என்றும் அங்கதன் 100 யோஜனை தாண்டுவேன் ஆனால் திரும்ப வருவது என்னால் இயலாது என்கிறார் அப்போதே சிறுவயது முதல் அனுமனை அறிந்தவரான ஜாம்பவான் இக்காரியம் ஒருவனால் எளிதாக முடியும் ஆனால் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும் அவ்வளவே என அனுமானை ஊக்கப்படுத்துகிறார்
🌼 மாருதி அதீத சக்திகளின் விளைவால் சிறுவயதில் செய்த சேட்டையால் பிருகு மற்றும் ஆங்கிரசரின் குடும்பத்தின் வழிவந்தவரும் மகாபாரதத்தில் பீஷ்மர் ஞானோபதேசம் வழங்கியபோது உடன் இருந்தவருமான மாமுனிவர் திரிணபந்து அனுமான் தன் சக்திகளை மறப்பார் என சபிக்கிறார் பிறகு விமோசனமாக மற்றொருவர் ஞாபகப்படுத்தினால் அதை திரும்ப பெறுவார் என உரைக்கிறார் இதனால் ஜாம்பவான் கூறியபின் அனுமானிற்கு தனது சக்தி ஞாபகம் வருகிறது
🌺 முன் நூறு யோஜனை தாண்ட முடியுமா என யோசித்த அனுமான் தற்போது விஸ்வரூபம் எடுக்கிறார் அப்போது அவர் முழு வேகத்தோடு செல்லும் கருடனை கூட நான் ஒரே முயற்சியில் ஆயிரம் வலம் வருவேன் என்கிறார் எனில் அவரின் வேகத்தை யூகிக்கலாம்
🍀 பறப்பது வேறு தாண்டுவது வேறு இங்கு அனுமான் நான் 16,000 யோஜனை தூரத்தை கூட தாண்டுவேன் என அவர் மனம் கூறுகிறது என்கிறார்
🌼 தான் பறக்கும்போது வரும் விசையின் காரணமாக இந்த நிலமே பாதிக்கப்படும் என்று மகேந்திர மலையின் உச்சிக்கு ஏறுகிறார்
👑 எந்நகரத்தின் பெயர் கேட்டாலே தேவர்கள் நடுங்குவார்களோ
👑 ஏந்நகரத்தில் திக்கஜங்களுடன்கூட போரிட்ட இராவணன் மற்றும் அரக்கசிரேஷ்டர்கள் 1000 வெள்ளப்படையுடன் உள்ளனரோ
👑 எந்நகரத்தின் மீது தேவர்கள்,கந்தர்வர்கள், தானவர்கள், யட்சர்கள் என அனைவரும் சேர்ந்துகூட போர்தொடுக்க அஞ்சுவார்களோ
👑 அந்நகரத்தின் மீது தன்னந்தனி ஆளாக வானரசிரேஷ்டன் வாயுபுத்திரன் சூறாவளியையும் மிஞ்சும் வேகத்தில் பாய்வதில் தொடங்குகிறது சுந்தர காண்டம்
🌹 முற்காலத்தில் மலைகள் எல்லாம் பறக்கும் திறன் கொண்டவையாக இருந்தன இதனால் முனிவர்கள் அச்சப்பட இந்திரன் அவற்றின் இறக்கை எல்லாம் வெட்டி எறிகிறார் இவற்றில் மைநாக பர்வதத்தினை மட்டும் வாயு தேவன் காப்பாற்றி கடலில் சேர்க்கிறார் அங்கு வருணன் அடைக்கலம் கொடுத்தார்
🌹 வருணனை வளர்த்தவர் சூரிய வம்சத்தின் ஸகரன் என்ற மன்னனே ஆவார் இதனால் கடமைப்பட்ட வருணன் அனுமானுக்கு உதவ மைநாக பர்வதத்திடம் இதை கூற அம்மலை அனுமான் சமுத்திரத்தை தாண்டும்போது இடையில் ஓய்வு எடுப்பதற்காக கடலின் மேல் வருகிறது இதை அனுமான் தடங்கலோ என நினைத்து தன் மார்பால் இடிக்கிறார் ஆனால் உள்ளதை எல்லாம் கூறி உபசரிப்பை ஏற்கவேண்டுகிறது
🌻 ஆனால் அனுமான் இராம காரியம் முடிக்கும் முன் ஓய்வு எடுக்கமாட்டேன் என கூறி தனது கரத்தால் தடவிகொடுத்து இதுவே நான் உன் உபசரிப்பை ஏற்றதுபோல் ஆகும் என கூறிச்செல்கிறார் இதைக்கண்டு மகிழ்ந்த இந்திரன் மைநாக பர்வதத்திற்கு இனி பயமில்லாமல் இஷ்டபடி வாழ வரமளிக்கிறார்
🌹 இம்மலையை தாண்டி அனுமந்தன் செல்கையில் நாகங்களின் தாயாகிய ஸுரசை என்பவளை அனுகிய இந்திரன் வாயுபுத்திரனை இடையில் ஒரு முகூர்த்தகாலம் தடுக்க சொல்கிறார் அவ்வாறே செல்லும் ஸுரசை பயங்கர இராட்ஷசர் உருவம் கொண்டு அனுமானை தடுக்கிறார்
🌹 இப்பாதையில் செல்லும் அனைத்தும் தனக்கு உணவாக வேண்டும் என கூறுகிறார் ஸுரசை இதைக்கேட்ட அனுமான் தான் இராம காரியம் காரணமாக செல்வதாகவும் சீதா தேவியை பார்த்துவிட்டு இராமபிரானிடம் அதை தெரிவித்து பின் தானே இங்கு வந்து உணவாவதாகவும் வாக்களிக்கிறார்
🌸 ஆனால் இவ்வழியாக செல்லும் அனைத்து உயிரினங்களும் தன் வாயில் நுழைந்தே ஆகவேண்டும் இது பிரம்மாவின் வரம் என கூற சரியென அனுமந்தரும் தனது உருவத்தை பெரிதாக்க அவ்வாறே தனது வாயை பெரிதாக திறக்கிறார் இராட்ஷசி உருவில் இருந்த ஸுரசை
🌺 இச்சமயத்தில் திடீரென தனது வடிவத்தை சுருக்கி கொண்ட மாருதி வாயினுள் புகுந்து வெளிவந்தான் இது ஆச்சரியமாக இருந்தது பின் நான் உங்கள் எண்ணப்படியும் பிரம்மாவின் வரத்தின்படியும் உள்புகுந்து வெளிவந்துவிட்டேன் எனக்கூற ஸுரசை தன் சுயரூபத்தை காட்டி ஹனுமனை ஆசிர்வதிக்கிறார்
🌺 பின் தன்பணியை துவங்கும் அனுமான் வேகமாக செல்கிறார் பிறகு நிழலை பிடித்து அசையவிடாமல் செய்து உயிரினங்களை விழுங்கும் ஹிம்சிகையென்னும் அரக்கி அனுமானின் நிழலை பிடிக்கிறார் திடீரென்று தனது வேகம் குறைவதை கண்ட அனுமான் இராட்ஷசி தன்னை விழுங்க வருவதை கண்டார்
🌺 ஏற்கனவே சுக்ரீவன் இதைப்பற்றி அறிவுறுத்தியதால் இதான் ஹிம்சிகை என வாயுபுத்திரன் அறிகிறார் இதனால் முன்போல தனது உருவத்தை பெரிதாக்கி பின் அவளது வாயினுள் செல்லும் மாருதி அவளது முக்கிய பாகங்களை அடித்து அவளை கொன்று வெளிவந்து திரும்பவும் தன்பணியை தொடர்கிறார்
🌻 இவ்வாறு வாயு வேகத்தில் செல்லும் கேசரிநந்தன் குபேரனிடம் இருந்து பிடுங்கிய நகரமும் அமராவதியை செல்வத்தில் மிஞ்சும் நகரமான இலங்கையை சென்றடைகிறார்
🍃 இலங்கை சென்றடைந்த அஞ்சனை புத்திரன் பகல் வேளையில் இலங்கையினுள் நுழைந்தால் நம்காரியம் கெட்டுவிடும் என யோசித்து அதற்கு இராத்திரியே சரியான நேரம் என எண்ணி பர்வதத்தில் ஏறி இலங்கையின் பாதுகாப்பு அம்சங்களை நோட்டமிடுகிறார் அனுமான்
🌹 தேவாசுரர்களேயாலும் நுழையமுடியாத இலங்கை காக்கப்படும் விதத்தை ஆராய்கிறார் ஏந்நேரமும் நாற்புறமும் காக்கப்படும் இலங்கையை கண்டு வானரர்கள் இங்கு எவ்வாறு வரக்கூடும் எனவும் அப்படியே வந்தாலும் அவை ஆழிகள் மற்றும் இக்கோட்டையை தாண்டி இலங்கையை எவ்வாறு வெல்லும் என யோசிக்கிறார் பின் முதலில் நான் சீதா தேவியை கண்டபிறகே இதையெல்லாம் ஆலோசிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்
🍃 ஒரு வழியாக அனுமான் காத்திருந்த இராத்திரி பொழுது வருகிறது தன் உருவத்தை ஒரு பூனையின் உருவிற்கு சுருக்கிகொண்ட இலங்கையின் வாசலை அடைகிறார்
🌹 ஆனால் அவ்வுருவத்தையும் இலங்கினி எனும் இலங்கையின் காவல்தேவதை காண்கிறாள் இலங்கினியே இலங்கையின் மொத்த ரூபமாவாள் அவள் அனுமந்தரை மிரட்டும் தோனியில் யார் எனகேட்க அவரும் கூற அவரை ஓங்கி அடிக்கிறார் இதனால் கோபம் கொண்ட பஜ்ரங்கபளி பெண் என்பதால் இடது கையால் அதுவும் முழுபலத்தை உபயோகிக்காமல் ஒரு அடி கொடுக்கிறார்
🍁 இந்த அடியிலே லங்கினி வீழ்கிறாள் அதன்பிறகே அவளுக்கு தனது சாபம் நினைவுக்கு வருகிறது முற்காலத்தில் பிரம்மாவின் வாயில்காப்பவளாக இருந்த இலங்கினி அவளது அகங்காரத்தினால் இராட்ஷசர்களின் காவலாளியாக போ என்ற சாபத்தை பிரம்மாவிடம் பெற்றார் பிறகு மனமிரங்கிய அவர் என்று நீ ஒரு வானரன் அடியால் வீழ்கிறாயோ அன்றிலிருந்து இராட்ஷசர்களின் அழிவு தொடங்கும் அப்போது உனக்கு விமோசனம் என கூறினார்
🌺 இது நினைவிற்கு வர லங்கினி விஜயந்திரியனை வணங்கி இலங்கையினுள் செல்ல அனுமதியளிக்கிறார்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🌻 இங்கு கவனிக்க வேண்டிய விசயம் ஹனுமான் சந்தித்த மூன்று தடைகளுமே பெண்களாவர்
👑 ஸுரசையிடம் காட்டிய பணிவு லங்கினியிடம் இல்லை
👑 லங்கினியிடம் பெண் என்பதால் காட்டிய பரிதாபம் ஹம்சிகையிடம் இல்லை
👑 தான் யார் என்றும்
👑 பிரம்மாவிடம் வரம்பெற்றதால் தன்னால் இப்பாதையில் வரும் எவரையும் உண்ண முடியும் என்ற அகங்காரமில்லாமலும்
👑 ஹனுமானை உணவாக அவரிடமே கேட்டதாலும்
👑 ஸுரசையின் குணத்தை கண்டு அவருக்கு மதிப்பளித்தார் கபிசிரேஷ்டர்
👑 காவல் தேவதையாக இருந்த லங்கினி தனது கடமையை எடுத்துரைத்தாள் கொஞ்சம் கோபத்துடன்
👑 ஹனுமானிடம் தனது பலத்தை காட்ட ஒரு அடி குடுத்தாள் லங்கினி ஆனால் லங்கினியின் செயலால் பலமே இங்கு பேசப்படும் என்றாலும் அனுமான் இடக்கையால் தனது முழு பலத்தை பயன்படுத்தாமல் குறைவாக அடி கொடுத்தார்
👑 மற்ற இருவரை காட்டிலும் ஹம்சிகையின் செயல் வேறாகும் மற்ற இருவரை பற்றியும் வாயுபுத்திரன் அறியவில்லை ஆனால் ஹம்சிகை பற்றி ஹனுமானுக்கு சுக்ரீவன் தெளிவாக கூறியிருந்தார் மேலும் அவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை ஆஞ்சநேரை நேரடியாக முழுங்கவே செய்தார் பிறகே வீரமைந்தன் அவளை வதைப்பது அன்றி வேறுசெயல்கள் செல்லாது என பிளந்தார்
👑 இம்மூன்று நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கினால் விஜயந்திரியனின் பார்வைபுரியும்
ஸுரசையிடம் மேன்மை குணத்தையும்
இலங்கினியிடம் பெண்மையும் கண்ட மாருதி
ஹம்சிகையிடம் அரக்கதனத்தை மட்டுமே கண்டார்
👑 இராம காரியத்திற்கு செல்லும் ஹனுமானை இந்திரன் ஏன் ஸுரசை அனுப்பி சோதிக்க வேண்டும் இது அனைவருக்கும் எழும் கேள்வி
👑 முதலில் எதிர்த்தது ஸுரசை இங்கு இரண்டு காரியங்களே சாத்தியமாகும்
👑 அதாவது ஒன்று பிரம்மாவின் வரமாதலால் ஸுரசைக்கு இறையாதல்
👑 இல்லை பிரம்மாவின் வரத்தை மீறும் செயலாக ஸுரசையை சண்டையிட்டு வீழ்த்தி முன்னே செல்லவேண்டும்
👑 இந்த நேரத்தில் மாருதியின் செயல்கண்டு வியக்காதோர் இல்லை ஏனெனில் அவர் இவை இரண்டையும் செய்யவில்லை பிரம்மாவின் வரத்தை உதாசீனம் செய்யவும் இல்லை மாறாக உணவாகவும் இல்லை
👑 இதனால் அனுமானின் விவேகம் நன்கு வெளிப்பட்டது அனைவரும் வியக்கும் மூன்றாம் முடிவை அவர் எடுத்தார்
👑 கடல் கடந்து இலங்கையில் இறங்கியாகிவிட்டது ஆனால் கேசரிநந்தன் அவசரபடவில்லை இரவு வரை காத்திருந்தார் ஆனால் அந்த நேரத்தையும் விரயம் செய்யவில்லை மாறாக இலங்கையின் பாதுகாப்பை உற்று நோக்கினார்
👑 அவர் ஒவ்வொன்றையும் நோக்கி இது வானர சேனைக்கு சாத்தியமா இல்லை இதை சாதிக்க வல்லவர்கள் நம் சேனையில் யார் என யோசிக்கிறார் அவரின் பார்வையில் இராம லட்சுமணர்கள் மற்றும் 10 வானரங்களை தவிர வேறு எவராலும் இலங்கையின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முடியாது இவ்வாறு அவர் பார்வையிலேயே செய்த ஆராய்ச்சி அவரின் விவேகத்தின் உச்சியாகும்
🔰 அடுத்த பதிவில் சீதா தேவியை கண்ட ராமதூதன்