Tuesday, May 30, 2017

🐒 வானர சேனை



👑 தசரத நந்தர் இராமபிரானை பற்றி நாம் அனைவருமே அறிவோம் இன்று அவருக்காக உயிரையும் பெரிதாக மதிக்காமல் போராடிய வானர சேனைப்பற்றி பார்க்கலாம்

👑 இராமர் சீதா தேவியை தேடி வரும்போது மாருதி மூலம் சுக்ரீவன் நட்பை பெறுகிறார் ஸ்ரீ ராமர்

🌼 ஜானகியை தேடி அறியும் வானரசேனை இராவணனிற்கு எதிரான போரில் இராமருக்கு துணை நின்றனர்

🌹 நாம் நினைப்பது போல சுக்ரீவரின் வானர சேனை மட்டும் யுத்தத்தில் பங்கேற்கவில்லை வானரர்களிலேயே பல அரசர்கள் இருந்தனர் மஹாபாரத யுத்தத்தில் பல அரசர்கள் துணைக்கு வந்தது போல அவர்கள் இராமருக்காக தங்கள் சேனையை அளித்து போரிட்டனர்

🍁 இராவணனின் சேனை மொத்தம் 1000 வெள்ளம் (நாற்புறமும் தலா 200 வெள்ள சேனை மற்றும் கோட்டை காவலுக்கு 200 வெள்ளம்)

🍁 அதேபோல இராமபிரானின் சேனை 70 வெள்ளம் (நாற்புறமும் தல 17 வெள்ளம் மற்றும் உணவு பொருட்கள் சேகரிக்க 2 வெள்ளம்)

🍁 இனி போரிட்ட வானர சேனையின் முக்கிய  அரசர்களை பற்றி பார்க்கலாம் இவர்களின் சேனைகள் சேர்ந்ததால் தான் 70 வெள்ள வானர சேனை சேர்ந்தது

👑 இவர்களில் ஒவ்வொருத்தரும் மலையையே பெயர்த்து எடுக்க கூடியவர் மேலும் ஆயிரக்கணக்கான யானைகளின் பலத்தை கொண்டவர்கள்

🐒 சுக்ரீவன் - சூரியதேவரின் மகன் - இராம பிரானின் உற்ற தோழன் - இராவணனை முதன்முதலில் மலையில் கண்டவுடன் சென்று போரிட்டு அவன் கிரீடத்தை தட்டி விடுவார் ஆனால் ராமபிரான் இதுபோன்று உயிருக்கு ஆபத்தான காரியம் இனி வேண்டாம் என்கிறார் அதற்கு சுக்ரீவன் கூறியதை கம்பர் அழகாக கூறுவார்

“காட்டிலே கழுகின் வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்,
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்க மாட்டேன்;
கேட்டிலே நின்று கண்டு கிளிமொழி மாதராளை
மீட்டிலேன்; தலைகள் பத்தும் கொணர்ந்திலேன், வெறுங்கை வந்தேன்”

🐒 அனுமந்தர் - ஈசனின் அவதாரமாக கருதப்படும் இவர் பற்றி நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை - சிறுவயதில் சூரியனை முழுங்கிய இவரால் தீக்கிரையாக்கப்பட்ட இலங்கையில் 7 நாட்கள் அனல் அடித்ததாம் இதனால் ராவணன் 7 நாட்கள் வான்வெளியில் தங்கினான் ஆனால் இதுப்பற்றி அனுமான் தம்பட்டம் அடிக்கவில்லை இதை விபிஷணர் கூறிய பின்னே தான் அறிவார்கள்

🐒 அங்கதன் - தனியொரு ஆளாக பாற்கடலை கடைந்த வாலியின் மகன், இந்திரனின் பேரன் - இராவணனின் சபைக்கு சென்று திரும்பகூடியவர்களில் ஒருவன் - தனது தந்தையை கொன்றாலும் தர்மபாதையறிந்து இராமருக்கு சேவை செய்த உத்தமன் - தன் காலை கீழே வேகமாக வைத்தால் பூமியும் அமிழ்ந்து போகும் திறன் கொண்டவன்

🐒 ஜாம்பவான் - பிரம்ம தேவரின் அவதாரமாக கருதப்படும் இவரை சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் தவிர மற்றோரால் வீழ்த்த இயலாதவர் - தேவாசுர யுத்தத்தில் உதவிபுரிந்ததால் பல வரங்களை பெற்றவர்

🐒 நளன் - தேவசிற்பி விஸ்வகர்மாவின் மகன் - அங்கதனின் உற்ற நண்பன் - பெரும் சேனைக்கு அதிபதி - விஸ்வகர்மாவிற்கு இணையான திறன் கொண்ட இவரே ராம சேதுவை மூன்று நாளில் கட்டினார் இதனால் நள சேது என்ற பெயரும் உண்டு

🐒 நீலன் - அக்னியின் மகன் - பெரும் பலவான்

🐒 கேசரி - காஞ்சன மலைப்பிரதேசத்தின் அரசன் - வலிமையில் நிகரற்றவர் - இவரின் மகனே அனுமந்தர்

👑 கேசரிக்கு அடுத்த அரண்மனை வாரிசு அனுமந்தரே ஆனால் பக்தியினால் அதை துறந்து இராமருக்கு சேவை செய்தார்

🐒 சுவேதன் - மூவுலகங்களிலும் தன் திறனாலும் புத்திசாலித்தனத்தாலும் பெயர் பெற்று விளங்குபவன்

🐒 சரபன் - சால்விய மலைப்பிரதேசத்தின் அரசன் - அளவிட முடியாத ஆற்றலுடைய இவரை கண்டால் பயம் கொள்ளாதவர் இல்லை

🐒 பணசா - பரியாத்திர மலைப்பிரதேசத்தின் அரசன் - இந்திரனுக்கு இணையான இவர் இதுவரை தோல்வியை சந்திக்காதவர்

🐒 முந்தன் மற்றும் துவிதன் - அஸ்வினி தேவர்களின் புத்திரர்கள் - போரில் இணையற்றவர்கள் - பாரதத்தில் இராஜசூய யாகத்தின் திக் விஜயத்தின் போது சகதேவனிடம் சண்டையிடுவர் பின் பலராமரால் கொல்லப்படுவர்

🐒 தும்ரா - கரடிகளின் அரசன் ஜாம்பவானின் சகோதரர் - வருணனுக்கு இணையானவர் - ரிக்சவந்த மலைப்பிரதேசத்தின் அரசன்

🐒 சம்நாதனன் - வானரங்களிலேயே வயது முதிர்ந்தவர் - இந்திரனுக்கு இணையான இவரை யுத்தத்தில் வென்றவர் இல்லை

🐒 கிராதனா - விஸ்ரவசின் (இராவணனின் தந்தை ) மகன் - மாயமறிந்த ஒருவன் ஒரு வகையில் இராவணனுக்கு தம்பி - குபேரனுடன் வாழ்பவர் - இவருடைய வீரத்தை விளக்க வார்த்தை இல்லை

🐒 கஜன், கவாக்சன், கவாயன், சரபன், கந்தமாதனன் இவர்கள் ஐவரும் யமனின் மைந்தர்கள் இவர்கள் ஊழிக்காலத்தில் அழிக்கும் யமனை ஒத்திருப்பர்

🐒 சுவேதன் மற்றும் ஜோதிர்முகன் சூரியனின் மகன்கள்

🐒 ஹேமகுதன் வருணனின் மகன்

🐒 துர்தாரன் வசுக்களின் மகன்

🐒 சுமுக்தன், துர்முகன் மற்றும் வேகதர்சி ஆகியோர் பிரம்மதேவரால் உக்ரமாக படைக்கப்பட்டவர்கள்

🐒 சுசேனன் யமனின் மகன் மற்றும் ததிமுகன் சந்திரனின் மகன்

🐒 பிரமதிம் - காட்டு யானைகள் வானரத்தை தாக்க வந்த போது அத்தனை யானையையும் தனி ஆளாக அடக்கியவர் - மந்தர மலையில் இந்திரனும் வாழாத சுகபோக வாழ்க்கை வாழ்பவர்

🐒 குமுதன் - கோமதி நதிக்கரையில் உள்ள ரம்ய மலைப்பிரதேசத்தின் அரசன்

🐒 ரம்ப்பா - கிருஷ்ண மலை பிரதேசத்தின் அரசன்

🐒 வினாதா - வெண்ணாறு பகுதியை ஆண்ட அரசன் - மலையின் அளவு உடல் கொண்டவர்

🐒 கிராதனா - வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன்

🐒 ஹரா - சூரியனின் தேஜஸ்சை கொண்டவர்

🐒 பிரமாதி - வெல்வதற்கு முடியாதவர்

🐒 சதாபலி - புத்திசாலி தனம் வீரம், வலிமையில் சிறந்தவர்

👑 இவ்வாறு எண்ணிலடங்கா வீராதி வீரர்களை கொண்டது வானர சேனை

👑 இவ்வாறு உளவாளிகள் கூறுவதை கேட்ட இராவணனின் இதயம் அதிகமாக துடிக்க கோபத்தில் உளவாளிகளை மேலும் கூற தடை விதிக்கிறான்

( Ref : http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga29/yuddha_29_frame.htm )

🌼 இராவணன் வானர சேனையை பற்றி அறிய சுகன் மற்றும் சாரணன் என்ற இரு அசுர மாயாவிகளை உளவு பார்க்க அனுப்புகிறான் ஆனால் அவர்களை விபீஷணர் பிடிக்கிறார் ஆனால் இராமபிரானோ அவர்களை விடுவித்தது மட்டுமல்லாது அவர்களுக்கு சேனையை பற்றி அனைத்து தகவல்களையும் தரவும் ஆணையிடுகிறார்

🐒 அவர்கள் வானர சேனையை பற்றி கூறுவதே மேல் அமைந்தவை

👑 போரின் இறுதியில் இராவணனை அழித்ததால் வரம் கேட்குமாறு ஸ்ரீ ராமரை வேண்ட போரில் உயிர் துறந்த வானரங்கள் உயிர்பெற வரம் வேண்டுகிறார் இதனால் அனைவரும் உயிர்பெறுகின்றனர்

🌼 அஞ்சனை புத்திரன் பாதம் சரணம் 🌼

Sunday, May 28, 2017

பீஷ்ம - பரசுராமர் யுத்தமும் அம்பை சிகண்டியாதலும்



காசி இளவரசிகள் மூவரையும் தனது தம்பி விசித்திர வீரியனுக்காக கடத்தி வருகிறார் பீஷ்மர் இதில் மூத்தவளான அம்பை தான் மனதால் சால்வனை வரித்தவள் என்று கூறியதால் அவளை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார் ஆனால் பீஷ்மர் கடத்தி சென்றதால் அவளை ஏற்க மறுக்கிறார் சால்வன்

இதனால் தன் வாழ்க்கை நாசமானதற்கு காரணம் பீஷ்மரே என்றென்னும் அம்பை  கடும்தவம் செய்து முருகப்பெருமானை மகிழ்விக்கும் அம்பை தேவலோகத்தின் வாடாத மலர்மலையை வரமாக பெறுகிறார் அம்மாலை அணிபவர் பீஷ்மரின் மரணத்துக்கு காரணமாவர்

ஐந்து வருடகாலம் பல தேசம் சென்றும் பீஷ்மரின் மேல் கொண்ட பயத்தினால் எவரும் அந்த மாலையை ஏற்க மறுக்கின்றனர் இதனால் அந்த மாலையை துருபதனின் அரண்மனை வாயிலில் மாட்டிவிட்டு செல்கிறார்

இதனால் மன உளைச்சல் அடையும் அவள் தவமுனிகளிடம் பேசுகையில் அம்பையின் தாயுடைய தந்தையான ஹோத்திரவாகனர் வருகிறார் ராஜ ரிஷியான இவர் பரசுராமரின் நெருங்கிய நண்பராவார் அவரே அம்பையை ராமரிடம் சரணடைய சொல்கிறார்

அந்நேரத்தில் ராமருடன் வசிப்பவரான அகிருதவ்ரணர் வருகிறார் அவரிடத்தில் இதை உரைக்கும் ஹோத்திரவாகனர் பரசுராமர் பற்றி கேட்கையில் அவர் சிறிது நேரத்தில் தம்மை காண இங்கே வருவதாய் கூறுகிறார்

அவ்வாறு வரும் ராமரிடம் சரணடைகிறாள் அம்பை தனது நண்பனுக்கு நீ எவ்வாறோ அவ்வாறே எனக்கும் மகளிள் மகளாவாய் என்கிறார் ராமர் இதனால் பீஷ்மருக்கு அம்பையை ஏற்குமாறு உரைக்கிறார் இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்ய நேரிடும் என்கிறார்

ஆனால் பீஷ்மர் தனது பிரக்ஞையை மீற முடியாது என்கிறார் இதனால் குருசேத்திரத்தில் இருவருக்கும் யுத்தம் மூள்கிறது

பரசுராமரிடம் ஆசிபெற்று யுத்தத்தை தொடங்குகிறார் பீஷ்மர் ஆனால் தான் ரதத்தில் இருப்பதாகவும் ராமர் தரையில் இருப்பதாகவும் இது எவ்வாறு சரியாகும் என வினவுகிறார்

உடன் ராமர் பீஷ்ம எனக்கு பூமியானது ரதம், வேதங்களே குதிரை, வாயுவே சாரதி, காயத்ரி,சாவித்ரி,சரஸ்வதி ஆகியோரே கவசம் என்று கூறி பீஷ்மர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரதத்தில் ஏறி கவசம் பூண்டவராக இருக்கிறார் அவருடன் இருப்பவரும் வேதங்களை அறிந்தவரான அகிருதவ்ணர் சாரதியாக வருகிறார்

பீஷ்மருக்கு அஸ்வ சாஸ்திரம் நன்கறிந்த சாரதியை கொண்டு இருந்தார் யுத்தம் தொடங்கியது

ஒருவர் விஷ்ணுவின் அவதாரமும், சத்ரிய வம்சத்தையே வேரறுத்து, ஆயிரம் கைகள் உடையவனும் இராவணனையே தோற்கடித்தவனுமான கார்த்தவீர்யார்ஜுனரை கொன்றவரான பரசுராமர்

மற்றொருவர் அஷ்ட வசுக்களில் ஒருவரும் சாபத்தால் பூமியில் பிறந்தவரும் பரசுராமரின் அன்பு சீடனுமான பீஷ்மர்

கங்கை சந்தனுவிடம் பரசுராமருக்கு தெரிந்த அஸ்திரம் அனைத்தும் நமது மகனுக்கும் தெரியும் என்கிறார்

இதனால் இதைக்காண தேவர்களும் கூடுகின்றனர் இருவரும் மாவீரர்கள் என்பதால் யுத்தம் பற்பல சஸ்திரங்களில் ஆரம்பமாகி திவ்ய அஸ்திரங்களில் தொடர்கிறது

இருவரும் தலா ஒருமுறை மூர்ச்சையடைகின்றனர் மற்றும் தேரிலிருந்து விழுகின்றனர் பீஷ்மரின் சாரதியை கொல்கிறார் பரசுராமர் இதனால் கங்கையே சாரதியாகுகிறார்

இவ்வாறாக யுத்தமானது 23 நாட்கள் நடைபெறுகிறது ஒவ்வொரு நாளும் பீஷ்மர் பரசுராமரிடம் ஆசி பெற்று யுத்தத்தை தொடங்குகிறார் 22 ம் நாள் இரவு பீஷ்மருடைய கனவில் வேதியர் வடிவில் வரும் வசுக்கள் பிரவாபஸ்திரத்தை பற்றி கூறி இதை பற்றி முன் ஜென்மத்தில் உனக்கு தெரியும் பிரம்மாவை தேவதையாக கொண்ட இது ராமரை தூங்க வைத்துவிடும்

சாஸ்திரத்தில் யுத்தத்தின் போது தூங்கியவன் மரணத்தை அடைந்தவனாக கருதப்படுகிறான் இந்த அஸ்திரத்தை வேறெவரும் அறியார் என்று கூறுகின்றனர் பிறகு பீஷ்மர் தூக்கத்தில் இருந்து எழுகிறார்

வசுக்கள் இவ்வாறு செய்தது தவறானலும் யுத்தத்தில் ஒருவர் வென்றே ஆக வேண்டும் இல்லையேல் இவர்களுக்கான சண்டையில் சிருஷ்டியே பாதிக்கப்படும் எப்படியும் ஒருவர் தோற்கும் வரையோ இல்லை சாகும் வரையோ யுத்தம் தொடரும் இதனால் யுத்தத்தை நிறுத்துவதே சரியாகும்

அடுத்த நாள் யுத்தம் தொடங்குகிறது ராமர் பிரம்மாஸ்திரத்தை விடுகிறார் இதனால் பீஷ்மரும் அவ்வாறே பிரம்மாஸ்திரத்தை விடுகிறார் இருவரின் பிரம்மாஸ்திரமும் வானில் எதிர்க்கின்றனர்

இதனால் சிருஷ்டியே பாதிப்படைகிறது அந்த நேரம் பீஷ்மருக்கு பிரவாபஸ்திரத்தின் மந்திரம் நினைவில் வந்து அதை தொடுக்க ஆயத்தமாகிறார் ஆனால் நாரதர் தடுக்கிறார் குருவையே அவமதிக்கும் இச்செயலை செய்யாதே பீஷ்மா என்று இதனால் அந்த அஸ்திரத்தை திரும்பப்பெறுகிறார் பிறகு இருவரும் சிருஷ்டியின் நலனுக்காக தங்களின் பிரம்மாஸ்திரங்களை திரும்ப பெறுகின்றனர்

பீஷ்மர் அஸ்திரத்தை திரும்ப அழைத்ததை கண்டு நான் தோற்றேன் என்கிறார் பரசுராமர்.

இதைக்கண்ட தேவர்கள் பரசுராமரிடம் பீஷ்மரின் பிறப்பு பலகாரணங்களுக்காக இருக்கிறது பரசுராமரே ஆதலால் இந்த சண்டையை விட்டுவிடுங்கள் என்கின்றனர் மேலும் பரசுராமரே தாம்புரிந்த யுத்தங்கள் முடிவடைய வேண்டும் இனி தாம் எவருடனும் யுத்தம் புரிய வேண்டாம் என்கின்றனர் மேலும் தாம் தர்மம் காக்கவே ஆயுதம் ஏந்தினீர் தற்போது தாம் சாந்தம் கொள்ள வேண்டும் என்கின்றனர்

இதனால் பரசுராமர் தன்னால் பீஷ்மனை தோற்கடிக்க இயலவில்லை என அம்பையிடம் கூறுகிறார் பரசுராமரிடம் ஆசிப்பெற்று தவம் செய்ய செல்கிறாள் அம்பை

ஆறு மாதம் ஆகார இல்லாமலும் பிறகு ஒரு வருடம் யமுனை ஜலத்தினுள்ளும் பிறகு காய்ந்த இலையை மட்டும் உண்டு கட்டை விரலில் நின்று ஒரு வருடம் என 12 வருடங்கள் தவம் செய்கிறாள் ஒரு முறை 8 மாதம் வரையிலும் ஒரு முறை பத்து மாதம் வரையிலும் கூட நீரை கூட அருந்தாமல் தவம் இருந்தாள்

இதனால் காட்சியளித்த ஈசன் உன்னால் பீஷ்மன் உயிர் பிரியும் என வரம் அளிக்கிறார் ஆனால் அது அடுத்த ஜென்மம் என்கிறார் இதனால் உடனே தீ மூட்டி உயிர்விடுகிறாள்

பிறகு துருபதனுக்கு சிகண்டினி என்ற  பெண்ணாக பிறக்கும் இவர் தசார்ணராஜனுக்காக ஆண்மையை பெற விரும்புகிறார் அப்போது குபேரனின் வேலையாலான ஸ்தூர்ணனை சந்திக்கிறார்

இருவரும் ஒப்பந்தம் செய்கின்றனர் அதுப்படி ஸ்தூர்ணன் அவளுக்கு தனது ஆண்மையை கொடுத்து அவள் பெண்மையை அவன் அடைவான் தசார்ணராஜன் சென்றபிறகு அவள் அங்கு வந்து மறுபடியும் பெண்ணாவாள் இதுவே அந்த ஒப்பந்தம்

ஆனால் இதை அறிந்த குபேரன் ஸ்தூர்ணனை சபிக்கிறான் அதாவது இனி சிகண்டினி சாகும்வரை ஸ்தூர்ணனால் ஆணாக மாறமுடியாது இதுவே அந்த சாபம் இந்த சாபத்தால் சிகண்டினி கடைசி வரை ஆணாகிறாள்

சிகண்டினி என்ற பெயர் சிகண்டியாகிறது பிறகு துரோணரிடம் கல்வி கற்கும் சிகண்டி யுத்தத்தில் பாண்டவர் சேனையில் சேர்ந்து பீஷ்மரின் மரணத்திற்கு காரணமாகிறாள்

Sunday, May 21, 2017

👑 ஆலயம் ஒரு அறிவியல் பார்வை



🌺 நமது முன்னோர்கள் இறைவனுக்கு பற்பல கோவில்களை கட்டியுள்ளனர் உண்மையில் அவர்கள் மற்றவைகளுக்கு அளித்த முக்கியத்துவத்தை விட கோவில்களுக்கு அளித்த முக்கியத்துவம் அதிகம்

🌼 காலத்தை தாண்டியும் கம்பீரமாக நிற்கின்றனர்கள் கட்டப்பட்ட பல நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னும் அதன் மினுக்கை இழக்காமல்

🌼 பல கோவில்களை பார்க்கும்போது வரும் சந்தேகம் யாதெனில் அவர்கள் கோவில்கட்ட தேர்ந்தெடுத்த இடங்கள் கட்டுமானத்திற்கு சிறந்தவையாக தெரியவில்லை (ஆனாலும் அவர்கள் அற்புதமாக கட்டி முடித்தனர் என்பது வேறு)

👑 இராமேஸ்வரம் - கட்டப்பட்டது ஒரு தீவில் தற்போதே பாம்பன் பாலம் உள்ளது மேலும் ஒரு தீவில் இவ்வளவு பெரிய கட்டுமானம் ஆச்சரியமே

👑 தஞ்சை பெரிய கோவில் - காவேரி படுகையில் இப்படி ஒரு பெரிய கட்டுமானம் செய்வது அறிவியலாளர்களே வியக்கும் செயல் மேலும் இங்கு கற்கள் கிடைப்பதே கடினம்

👑 திருச்செந்தூர் - கடற்கரையில் கட்டுவதும் சாமான்யம் இல்லை

👑 ஸ்ரீ ரங்கம் மற்றும் திருவானைக்காவல் - காவிரியால் உண்டான தீவில் அமைந்துள்ள கோவில்கள் அக்காலத்தில் காவிரியின் வெள்ளத்தை கடந்து கட்டப்பட்டவை

👑 நான் கூறியது மிகவும் சில எடுத்துகாட்டுகளே இன்னும் பற்பல கோவில்கள் மலையின் மேலும் ஆற்றோரங்களிலும் என பல கட்டுமானத்திற்கு ஓவ்வாத இடங்களில் உள்ளன

🌼 எனில் இறைவனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணிய அவர்கள் பல இடங்கள் இருந்தும் சில குறிப்பிட்ட இடங்களை தெரிவுசெய்து கட்டியுள்ளனர்

🌼 அந்த குறிப்பிட்ட இடங்கள் மின் மற்றும் காந்த விசைகளை தூண்டும் இடமாகவும் மேலும் அண்டவெளியில் இருந்து கதிர்கள் மற்றும் ஆற்றலை பெரும் இடமாகவும் ஆற்றல் மையங்களாகவும் திகழ்ந்தன என்பதே உண்மை

👑 பொதுவாக கோவிலானது நிர்மானிக்கப்படும்போது குறிப்பிட்ட அந்த விக்கிரகம் சலாதி வாசம் (நீர்), மற்றும் தான்ய வாசத்தில் (தான்யம்) குறிப்பிட்ட நாட்கள் இருக்கின்றனர்

 ---🌻 கும்பாபிஷேகத்தின் போது கருவறையில் யந்திரங்கள் அமைக்கப்படுகின்றன

---🌻 அதன்பிறகு பீடம் அமைப்பார்கள் பீடத்திற்கும் விக்கிரத்திற்கும் இடையில் அஷ்டபந்தனம் என்ற மருந்து கலவை இட்டு விக்கிரத்தை இணைப்பார்கள் (அஷ்டபந்தனம் = கொம்பரக்கு, குங்குலியம், காவிக்கல், வெண்மெழுகு, எருமை வெண்ணெய்,
செம்பஞ்சு, சுக்கான்தூள், சாதிலிங்கம்)

---🌻 இதே போல மேலே விமானத்தில் உள்ள கலசத்தில் தானியங்களை நிரப்புவார்கள்  (நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள்)

---🌻 பிறகு நிகழ்த்தப்படும் யாகம் மற்றும் கும்ப, பிம்ப பூஜை நடைபெறுகின்றன

---🌻 இவைகள் 12 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுவதே கும்பாபிஷேகம்

👑 கலசம் மூலம் ஈர்க்கப்படும் அண்டவெளி சக்தி கர்ப்பகிரகத்தில் உள்ள அஷ்டபந்தனம் மற்றும் யந்திரத்தால்  குவிக்கப்படுகின்றன கருவறையில் எரியும்

🌼 கருவறைகள் மூன்று பக்கமும் மூடியதாகவே இருக்கும் சிறுதுளையையும் காண முடியாது இந்த அமைப்பு சக்தியை சிதறாமல் காக்கும் ஒவ்வொரு முறை அபிஷேகம் செய்யும்போதும் சக்தியானது அபரிவிதமாக அதிகரிக்கும்

🌼 மேலும் கருவறையை அணுவின் கருவாக ஒப்பிட்டால் கருவில் புரோட்டான்கள் அதிகம் இதனால் இதனை சமன்செய்யும் விதத்தில் சுற்றுபாதையில் எலக்ட்ரான்கள் இருக்கும்

🌼 எலக்ட்ரான்கள் போல அறிவியல் விதிப்படி தானாகவே கருவறையில் உள்ள சக்தியை சமன்செய்யும் விதத்தில் பிரகாரத்தில் மின்னாற்றலானது சேரும்

🌼 காற்றில் கூட ஆற்றல் அதிக படியாக உள்ளன ஆனால் அதை பயன்படுத்தும் அளவு தொழில்நுட்பம் செல்லவில்லை இந்த ஆற்றலின் காரணமாகவே பல இடங்களில் ஆற்றலானது சமர்செய்யப்படுகிறது

🌼 அதே போல காந்த விசையும் கோவிலில்
அதிகம்
காந்த சக்தி பல அறிய விசயத்தை செய்ய வல்லது (பூமியே பெரிய காந்தமாகும் பூமியின் துருவத்தை நோக்கி நகர்வதினாலேயே காந்தமானது சரியான திசையை காட்டுகின்றனர்)

👑 மின்னூட்டம் மற்றும் காந்த விசைக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் யாதெனில்

🌼 நம் உடலில் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் மின்னூட்டத்தின் மூலமாகவே கடத்தப்படுகின்றன

🌼 ஒருவருடைய மூளையில் உள்ள தகவல்களை காந்த விசை கொண்டு அழிக்க இயலும் மேலும் சுரப்பிகளில் மாற்றத்தை ஏற்படுத்த இயலும் இது அறிவியல் உண்மை இதே போல குறிப்பிட்ட சரியான அளவு மூலம் பல நல்ல விசயங்களை நிகழ்த்தி காட்டலாம்

*** இவ்விசைகளினால் இயல்பாகவே கோவிலுக்குள் ஒருவரின் எண்ணங்கள் மற்றும் அவரின் பார்வை மாறும் தொடர்ச்சியாக கோவில் செல்பவர்கள் இதை உணரலாம்

👑 ஒவ்வொரு கோவிலிற்கும் ஒவ்வொரு மாதம் உற்சவம் அந்த நாட்களில் குறிப்பிட்ட அந்த கோவிலிற்கு அறிவியல் ரீதியாகவும் சக்திகளானது பெருகுகின்றன இந்த காரணத்தாலேயே குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட கோவில்களுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது

🌼 ஆலயத்தில் ஒலிக்கப்பட்டு எதிரொலிக்கும் மணியொலி நமது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் தூண்டிவிடக்கூடியது ஆகும்

🌼 நாம் நெற்றியில் இடும் திலம் நெற்றி சக்கரத்தை தூண்டும் இதனால் Esp (extrasensory perception) தூண்டப்படுகிறது

🌼 நாம் கூறும் ஒவ்வொரு மந்திரமும் குறிப்பிட்ட அட்சரங்களை கொண்டது  இவைகள் நல்ல அதிர்வலைகளை உருவாக்கும் நம் உடலில் ஒவ்வொரு நாடி நரம்பையும் இவைகள் புத்துணர்ச்சி ஊட்டும்

🌼 செய்வினைகள் கூட தீய அதிர்வலைகளை வைத்தே செயலாற்றுகின்றன செய்வினையை செயலற்றதாக்கவும் மந்திரங்கள் உண்டு அவைகள் கூறப்படும்போது செய்வினையே செயலற்று விடும் அதிர்வலைகளை அவை உருவாக்கும்

🌼 இவ்வாறு கோவிலில் யாகத்தில் வைத்து தரப்படும் யந்திரங்கள் அதிர்வலைகளை தரவல்லது அவ்வாறே முறையான மந்திரத்தினால் நாம் பூஜிக்கும்போது நம்மிடம் இருந்து வரும் அதிர்வலைகள் யந்திரத்தை அடையும் போது அவைகளின் சக்தி அதிகமாகும்

🌼 சில கோவில்களில் சுற்றியுள்ள சுவரில் அமைக்கப்பட்டுள்ளன விசேஷ கற்கள் நல்ல அதிர்வலைகளை உருவாக்கி பல நன்மைகளை தரவல்லது

🌼 ஆலயத்தில் தரப்படும் துளசி தீர்த்தம் கருவறையில் உள்ள சக்தி மற்றும் ஒவ்வொரு முறையும் கூறப்படும் மந்திரத்தினால் சக்தியை பெறுகின்றன
இறைவனுக்கு படைத்த பிரசாதம் உண்பதும் அவ்வாறே

🌼 தீர்த்த நீராடுதலின் போது அந்த குறிப்பிடப்படும் குளத்தில் குறிப்பிட்ட நாளில் விண்ணில் இருந்து மனிதர்களுக்கு நன்மை செய்யும் ஒளி மற்றும் ஆற்றல் விழுகின்றன (கும்பமேளா மகாமகம் மற்றும் நவகிரக கோவில்களில் இது அப்பட்டமாக நடக்கும்)

👑 இவ்வாறு பல விசயங்களில் ஆற்றல் மையமாக திகழ்கிறது மன்னர்கள் கட்டிய அக்கால கோவில்கள்

🌺 மேலும் இவைகளனைத்தும் அனைத்து கோவிலிற்கும் பொருந்த கூடியவை (இவைகள் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்கு பொருந்தும் இக்கால கோவில்களுக்கு பொருந்துவது கடினம்)

☀ இவைகளில்லாமல் தனியாக ஒவ்வொரு கோவிலிற்கும் தனித்தன்மையான பல அற்புதங்கள் உள்ளன

👑 மேலும் கோவிலில் தங்கள் கலையை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளனர் ஒவ்வொரு தூண் வரை அளவு அம்மி பிசகாமல் இன்று வரை நிற்கின்றனர் அவர்களின் சிற்பக்கலை இன்றும் வியக்க வைக்கும் சிற்பத்திற்கும் நரம்பு வைத்து உயிரூற்றி பார்த்தவன் தமிழன்

👑 அக்காலத்தில் இந்தியர்கள் அறிவியலில் உச்சம் பெற்று விளங்கினர் ஆனால் படையெடுப்பு மற்றும் ஆங்கிலேய ஆக்ரமிப்பால் பல சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன

👑 மேற்கூறியவை நான் அறிந்தவை மட்டுமே மேலும் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்

(கீழ் உள்ள படம் திருநள்ளாறு சனிஸ்வரர் கோவிலிற்கு மேல் செல்லும் செயற்கைகோள்கள் மூன்று நொடிகள் செயல் இழந்தன

இதன் காரணம் சனிப்பெயர்ச்சி என்று நாம் சொல்லும் நாளில் சரியாக மேல் இருந்து வரும் அதிகப்பட்சமான கதிர்கள் செயற்கை கோளை செயல் இழக்க வைத்தன

குறிப்பிட்ட அந்த 45 நாட்கள் அந்த கதிர்கள் வழக்கத்தை விட அதிகமாக தீர்த்தத்தில் விழுவதால் அன்று நீராடுவது சிறப்பு 👇👇👇👇 )

Monday, May 15, 2017

👑 அர்ஜுனன் பெற்றவைகள்



🌼 அர்ஜுனன் பிறந்தபோது குந்திக்கு அசரீரி மூலம் அர்ஜூனன் நிகழ்த்தபோவது அனைத்தும் தெரிய வருகிறது

🌼 பாண்டவர்கள் பிறந்தபோது பாண்டு வனவாசம் மேற்கொண்டதால் அங்கே சர்யாதியின் தமையனான சுகன் தவம் செய்து கொண்டு இருந்தான் அவன் இவ்வுலகை வென்று நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தவன் அவனிடத்தில் பாண்டவர்கள் தங்கள் அஸ்திர பயிற்சியை ஆரம்பிக்கிறார்கள்.பின்பு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையில் தேர்ச்சியடைகின்றனர்

🌼 பாண்டு இறந்தபின் அஸ்தினாபுரம் வரும் அவர்கள் சரத்வானுடைய புத்ரனும் சிரஞ்சீவியுமான கிருபரிடம் தங்கள் கல்வியை தொடர்கின்றனர். பிறகு பீஷ்மர் தனது பேரர்கள் மேலும் சிறந்த கல்வியை பெறவேண்டுமென்று எண்ணும் போது துரோணர் வருகிறார்.

🌼 துரோணரை பீஷ்மர் நல்ல குருவாக எண்ண காரணம் அவரிடம் உள்ள அஸ்திரங்களே பரசுராமர் தான் அடைந்ததையெல்லாம் தானமாக தருவதை அறிந்த துரோணர் அவரிடம் செல்கிறார் துரோணரை கண்டு மகிழ்ந்த பரசுராமர் தான் அனைத்தையும் தானம் செய்துவிட்டதாகவும் தன்னிடம் மிச்சமிருப்பது அஸ்திரம், சஸ்திரம், தன் உடல் மட்டுமே என்றும் அதில் எதை வேணாலும் கேட்கலாம் என்கிறார். துரோணர் தான் அஸ்திரத்தையே பெரிதாய் மதிப்பதாய் கூறி அனைத்து அஸ்திரங்களையும் பெற்றார்

🌼 பிரகஸ்பதியின் அவதாரமாக வியாசர் சொல்லும் துரோணரிடம் அஸ்திரப்பயிற்சி பெறும் அர்ஜுனன் சிறந்த சீடனாக விளங்குகிறான்

🌼 அர்ஜுனனுக்கு அளித்த வாக்கால் பெறும்பாதகத்தை செய்கிறார் துரோணர் அதாவது ஏகலைவனிடம் வலது பெருவிரலை குருதட்சணையாக கேட்கிறார் அதனால் அவன் மேலும் வில் வித்தை பயில இயலாது என்பது அவர் எண்ணம் ஆனால் ஏகலைவன் பெருவிரல் இல்லாமலேயே வில் வித்தையில் சிரேஷ்டன் ஆகி ருக்மியை கடத்தும்போது கிருஷ்ணரால் கொல்லப்படுகிறான் அவனே திருஷ்டத்துய்மனாக வந்தான் என சில இடங்களில் காணப்படுகிறது

🌼 பிறகு துரோணரே கிருஷ்ணரை பற்றி கூறி அவரிடம் நட்பு பூணுமாறு சொல்கிறார் அதனால் கிருஷ்ணரின் சிநேகத்தை பெறுகிறான்

🌼 திரௌபதியின் சுயம்வரத்திற்கு செல்லும்வழியில் அங்காரப்பணா என்னும் கந்தர்வனிடம் இருந்து கந்தர்வ வித்தையையும் பாண்டவர்களுக்கு நூறு நூறு குதிரைகள் தருகிறான்

🌼 சுயம்வரத்தை வென்றதால் திரௌபதியை மனைவியாக அடைகிறார் பிறகு 33 அம்சங்களும் பெற்றதனால் அர்ஜுனன் மீது காதல் கொள்ளும் நாக கன்னிகை உலூபி மற்றும் மணலூர் இளவரசி சித்ராங்கதையை மணமுடிக்கிறார் மேலும் வாசுதேவனின் தங்கையான சுபத்ரையையும் மணமுடிக்கிறார்

🌼 முறையே திரௌபதிக்கு மகாரதி என பீஷ்மர் கூறும் சுருதகீர்த்தியும்

உலூபிக்கு 33 அம்சங்களும் கொண்ட மகாரதனான மாயங்களில் சிறந்தவனான அரவானும்

சித்ராங்கதைக்கு அர்ஜுனனை மண்ணில் சாய்த்த மகாரதியான பப்ருவாகனனும்

சுபத்ரைக்கு இரண்டு மகாரதிகளுக்கு இணையான அபிமன்யுவும் பிறந்தனர்

🌼 அந்தணர் ரூபத்தில் வந்த அக்னி பகவானிடத்தில் காண்டீபம், இரண்டு வற்றாத அம்புறாத்துணிகள், பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டு கந்தர்வ குதிரைகள் பூட்டப்பட்ட தேர் ஆகியவற்றை பெற்றான்

🌼 காண்டவ பிரஸ்தத்தை எரித்ததால் அஸ்வசேனனின் பகையை பெறுகிறான்

🌼 தேவர்கள், தானவர்கள், கந்தவர்கள் என அனைவரையும் தடுத்ததால் மகிழ்ச்சியடைந்த இந்திரன் கிருஷ்ணார்ஜுனர்களுக்கு வேண்டிய வரத்தை கேட்டான் அப்போது அர்ஜுனன் தேவர்களின் அனைத்து அஸ்திரங்களையும், வாசுதேவர் அர்ஜுனனிடம் நிலைத்த சினேகத்தையும் வரமாக கேட்கின்றனர் அதற்கு இந்திரன் இறைவன் பசுபதிநாதனை சந்தித்த பிறகே இது நிகழும் என்று அதற்கு கால நிர்ணயம் செய்கிறார்

🌼 அடைக்கலம் அடைந்த மயன் தான் நிச்சயம் அர்ஜுனனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்க அடைக்கலம் புகுந்தவர்களிடம் தான் எதுவும் கேட்பதில்லை எனவும் வேண்டுமானால் வாசுதேவருக்கு அவர் வேண்டுவதை செய் என்கிறார் அர்ஜீனன் வாசுதேவரோ யுதிஷ்டிரருக்கு அகிலத்தில் இல்லாத சபையை நிர்ணயம் செய் என்கிறார்
அவ்வாறே செய்யும் மயன் நரநாராயணர்கள் மற்றும் பலர் தவம் மற்றும் யாகம் செய்த பிந்துசாரர் தடாகத்தில் இருந்து தேவதத்தமென்னும் சங்கை கொடுக்கிறார் இவரே திரிபுரங்களை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

🌼 வியாசரிடம் இருந்து யுதிஷ்டிரர் பெற்ற ப்ரதிஸ்ம்ருதி வித்தையை கற்று பாசுபத அஸ்திரம் பெற தவம் செய்கிறார்

🌼 நான்கு மாத தவத்திற்குப்பின் அர்ஜுனனின் வீரத்தை சோதிக்க வந்த ஈசன் பாசுபதத்தையும் அர்ஜுனனிடம் இருந்து பிடுங்கிய காண்டீபத்தையும் திருப்பித்தருகிறார்.அப்போது ஈசனே இந்த காண்டீபம் நீ நரனாக இருந்த போது உன்னிடம் இருந்ததே என்பார்

🌼 இந்திரன் அளித்த வரத்தின் காரணமாக குபேரன், வருணன், யமன் ஆகியோர் தமது முக்கிய அஸ்திரங்களை அர்ஜுனனுக்கு அளிக்கின்றனர்

🌼 மாதலி கொணர்ந்த தேரின் மூலம் இந்திரனின் சொர்க்கலோகத்திற்கு செல்கிறார் அர்ஜுனன் இந்திரன் அர்ஜுனனுக்கு தனக்கு சமமான ஆசனத்தையளித்து கௌரவிக்கிறான் அங்கு ஐந்து வருடங்கள் இருக்கும் அர்ஜுனன் பற்பல அறிய அஸ்திரங்களை கற்று சித்ரரதன் மூலம் நாட்டியமும் கற்கிறார்

🌼 ஊர்வசியின் ஆணும் பெண்ணும் அற்றவனாய் போவாய் என்று சாபம் பெறும் அர்ஜுனன் இந்திரனால் அதை அஞ்ஞாத வாசத்தின் போது உபயோகிப்பாய் என மாற்றப்படுகிறது

🌼 குருதட்சணையாக தேவர்கள் நுழையகூடாத இடத்தை வரமாக பெற்ற மூன்று கோடி நிவாதகவசர்களையும் கொன்று குவிக்கும் அர்ஜுனன் பாசுபத பிரயோகத்தால் ஹிரண்யபுரத்தின் வரம் பெற்ற அசுரர்களையும் அவர்களின் கோட்டையோடு சேர்த்து அழிக்கிறார்

🌼 இதனால் இந்திரன் அர்ஜுனனுக்கு புகழையுடைய கிரீடத்தை வழங்குகிறான்

🌼 யுதிஷ்டிரனை சோதிக்கும் தர்மதேவர் பாண்டவர்கள் அனைவருக்கும் அஞ்ஞாத வாசத்தின்போது நினைத்த உருவமெடுக்கும் வரம் தருகிறார்

🌼 குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணனின் சகாயத்தை பெற்று அவரையே சாரதியாக அடைகிறார் அவரின் அறிவுரைப்டி போரின் துவக்கத்தில் துர்க்கா தேவியை துதிக்கும் அர்ஜுனன் துர்க்காதேவியின் தரிசனம் பெற்று வெற்றிக்கான ஆசியும் பெறுகிறார்

🌼 புனிதத்துவம் மிகுந்த கீதையை கிருஷ்ணரிடம் இருந்து பெறுகிறார்

🌼 சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை தாக்கியதால் வசுக்களின் சாபம் பெறுகிறார்

🌼 ஜெயத்ரதனை வதைக்க சபதம் எடுத்த நாள் கிருஷ்ணனின் யோக மாயையால் அர்ஜுனன் ஈசனிடம் செல்கிறார்

🌼 18 நாள் யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெறுகின்றனர் அர்ஜுனன் மற்றும் பீமனால் காக்கப்பட்ட பாண்டவசேனையில் 16,000 காலாட் படைவீரர்களும், 5,000 குதிரைகளும், 2,000 தேர்களும், 700 யானைகள் மிச்சம் இருந்தன கௌரவ சேனையில் அவ்வாறு இருந்ததாக தெரியவில்லை

🌼 போருக்குபின் கிருஷ்ணனால் பூமி உற்பத்தி, சிவபெருமானின் மகிமை மற்றும் பீஷ்மரின் தூண்டுதலால் சிவசகஸ்ர நாமமும் மேலும் பல அற்புதங்களையும் விளக்கங்களையும் கிருஷ்ணனால் பெறுகிறார்

🌼 மேலும் கிருஷ்ணனால் அநு கீதையை உபதேசமாக பெறுகிறார்

🌼 அஸ்வமேத யாகத்தில் குதிரையின் காவலனாக படையுடன் செல்லும் அர்ஜுனன் பற்பல தேசங்களை வெற்றி கொள்கிறார் அவ்வாறாக வரும் அர்ஜுனன் மணலூரில் தனது மகனான பப்ருவாகனனை எதிர்கொள்கிறார் வசுக்களின் சாபத்தால் மார்பில் அம்பு தைத்து விழுகிறார் பிறகு நாக கன்னிகை உலூபியினால் காப்பாற்றப்படுகிறார்

🌼 காந்தாரியின் சாபத்தால் யுத்தம் முடிந்த 36 ஆண்டுகள் கழித்து விருஷ்ணி குலம் அழிந்து கிருஷ்ணரும் மரணிக்கிறார் இதனால் அவரது தந்தையான வசுதேவர் அர்ஜுனனிடம் மிஞ்சிய பெண்கள், குழந்தைகள், மற்றும் கிருஷ்ணனின் மனைவிகளை அர்ஜுனன் பொறுப்பில் விட்டு தானும் மரணிக்கிறார்

🌼 யுத்தத்தில் தேவாசுரர்களையும் எதிர்த்த அர்ஜுனன் கள்வர்களிடம் தோற்கிறார் இந்த காரணத்தை வியாசர் கூறி நீங்கள் சொர்க்கம் செல்ல நேரம் நெருங்கியது எனத்தெரிவிக்கிறார்

🌼 இதனால் பரிட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்து யாத்திரை செல்லும் பாண்டவர்களில் அர்ஜுனன் மடிந்து கீழே விழும் போது யுதிஷ்டிரர் இவன் யுத்தத்தில் அனைவரையும் தானே கொல்ல வேண்டும் என்றும் அனைத்து அஸ்திரங்களையும் அடைந்ததால் தானே சிறந்தவன் என்ற எண்ணமும் கொண்டான் என்று கூறுகிறார்

🌼 பிறகு சொர்க்கம் அடைகிறார்

👑 பிரம்மாஸ்திரம் ஒரு அறிவியல் பார்வை



🌼 இன்று இருக்கும் அணுகுண்டுகளை விட அதிக சக்தியானதாகவும் அதிக தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் பிரம்மாஸ்திரம் கருதப்படுகிறது

🌼 மன்ஹட்டான் திட்டத்தில் கண்டிபிடிக்கப்பட்டதே அணு ஆயுதங்கள் ஆனால் அதுப்பற்றி நமது புராணங்களில் ஏற்கனவே உள்ளவை என்பது வேறு

🌻 மேலும் இன்றைய அணு அயுதங்களை நமது பற்பல அஸ்திரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் சக்தி குறைவே காரணம் பிரம்மாண்ட அஸ்திரத்தை நாம் பிரயோகிப்போமானால் ஈரேழு பதினான்கு லோகங்களும் அழிக்கப்படும்

🌼 ஆனால் இன்றுள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் உபயோகிப்போமானால் நமது சூரிய குடும்பத்தின் நிலையை மட்டுமே மாற்ற இயலும் இதை கூறியவர்கள் அறிவியலாளர்களே

🌼 இது சக்தியை கொண்டு பார்க்கும் போது

🌼 மேலும் பிரம்மாஸ்திரம் இன்றைய அணு ஆயுதங்களை விட மிகவும் துல்லியமானது

🌻 ராமபிரான் இந்திரனின் மகனான ஜெயந்தன் மீது ஏவிய பிரம்மாஸ்திரம் அவனின் ஒரு கண்னை மட்டுமே சரியாக பாதித்தது மேலும் அஸ்வதாமன் உத்தரையின் கர்ப்பத்தின் மீது ஏவிய பிரம்மாஸ்திரம் பரிட்சித்தை மட்டுமே பாதித்தது உத்தரைக்கு எந்த ஒரு இன்னலும் ஏற்படவில்லை அந்த அளவிற்கு துல்லியமானது

🌼 ஆனால் ஜப்பானிலோ இன்றும் கூட அணு ஆயுதத்தின் விளைவுகளை காணமுடிகிறது

🌼 மேலும் பல திவ்ய அஸ்திரங்களுக்கு பிரம்மாஸ்திரமே தகுதி ஆகும்

🌼 கடவுளுக்கு நிகரான அஸ்திரங்களுக்கு பாசுபத அஸ்திரமும், வைஷ்ணவ அஸ்திரமும் தகுதியாகும்

🌼 இப்படிப்பட்ட அஸ்திரத்தை குருவானவர் தனது விருப்பப்பட்ட சீடர்களுக்கு மட்டுமே அளிப்பார் என பலர் கூறுகின்றனர் மேலும் அதற்கான மந்திரம் அறிந்தாலே போதும் எனவும் சொல்கின்றனர் ஆனால் உண்மை அதுவல்ல

🌼 பிரம்மாஸ்திரத்தற்கான மந்திரம் வேறு எதுவும் இல்லை நமது காயத்ரி மந்திரமே

🌼 ஆம் மந்திரங்களில் நான் காயத்ரி என்று கிருஷ்ணர் கூறீனாரே அதே காயத்ரி தான்

🌼 பிறகு ஏன் பிரம்மாஸ்திரத்தை பலராலும் அறிய இயலவில்லை என்ற கேள்வி எழுகிறது அல்லவா

🌼 ஒருவன் முதலில் தன்னிடம் உள்ள 7 சக்கரங்களையும் செயல்பட வைக்க வேண்டும்

🌼 இதற்காக காயத்ரி மந்திரத்தை பலகாலம் முயற்சி செய்ய வேண்டும்

🌼 காயத்ரி மந்திரத்தை சரியாக வாசிப்பது அனுலோமா ஆகும்

🌼 அதையே தலைகீழாக வாசிப்பது விலோமா ஆகும்

🌼 ஒருவன் முதலில் அனுலோமா முறையிலும் பிறகு விலோமா முறையிலும் சரியாக உச்சரிக்க கற்க வேண்டும் பிறகு ஆதார சக்கரமான மூல சக்கரத்திலிருந்து தலையில் உள்ள பிரம்மாந்திர சக்கரம் வரை சக்தியை திரட்டி கொண்டு வர வேண்டும் இது அவ்வளவு சாதாரணம் இல்லை பாரத காலத்தில் கூட பலர் பிரம்மாஸ்திரம் அறியாமல் இருந்ததற்கு இதுவே காரணம் மேலும் சிலர் எளிதாகவே பற்பல அஸ்திரம் பெற்றதற்கு காரணம் இதுவே.

🌼 இவ்வாறு அனுலோமா - விலோமா மந்திரத்தை தொடர்ந்து கூறி நமது சக்கரங்கள் மூலம் சக்தியை திரட்டும் போது அதனால் உண்டாகும் அதிர்வுகளால் மேல் லோகத்தில் உள்ள பிரம்மாஸ்திரத்தின் சக்தியை அவர்களால் தங்களின் பாணத்தில் கொண்டுவர இயலும்

🌼 மேலும் பற்பல அஸ்திரங்களும் அவர்களின் உடம்பிலே தேவ வடிவில் தங்கிவிடும் பிறகு அவைகள் அவர்களிடம் வந்த காரணம் முடிந்தபின் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது இது யுத்தத்திற்கு பின் அர்ஜுனனுக்கு நேரும்

🌼 இதைப்பற்றி அறிவியாலாளர்கள் கூறும்போது அவர்கள் டெலிபதியின் மூலம் மேலே இருக்கும் அஸ்திரத்திற்கு கட்டளையிடும் அளவுக்கு மன வளர்ச்சி பெற்று இருந்தனர் என்கின்றனர்

🌼 நம் கையில் இருக்கும் சாதாரண புல்லை கூட நம்மால் மந்திர பிரயோகத்தால் பிரம்மாஸ்திரமாக மாற்ற இயலும் ஆனால் பாசுபதத்திற்கோ மனமே போதும்

🌼 இவ்வளவு சக்தி வாய்ந்த அஸ்திரத்தை எவ்வாறு அவர்கள் தங்கள் கட்டுபாட்டில் வைத்து இருந்தனர் என்பது இன்றும் அறிவியலாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது

🌼 நாகாஸ்திரம் பற்றி பார்க்கையில் அன்றே பயோ ஆயுதங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது

👑 இதையெல்லாம் விட தற்போது செவ்வாய் கிரகத்தில் நடந்த ஆய்வில் மேலும் ஒரு தகவல் கிட்டியுள்ளது அதாவது செவ்வாய் கிரகத்தில் அணு ஆயுதவெடிப்பு நிகழ்ந்ததால் தான் இன்று இந்த நிலையில் அந்த கிரகம் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

🌼 ஒரு வேளை அன்று எப்பொழுதாவது அங்கு பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டிருக்குமா என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது

🌻 காரணம் நம்மையும் கிரேக்கத்தையும் தவிர வேறு எங்கும் முற்காலத்தில் இவ்வளவு இருந்ததாய் குறிப்பிடவில்லை அதே சமயம் கிரேக்கத்திலோ இவ்வளவு தெளிவான விளக்கங்கள் இல்லை மேலும் இந்த அஸ்திரங்கள் போல சக்தி கொண்டது என அறியப்படவில்லை அதனால் அவர்களுக்கு இருக்கும் வழிகளில் ஒன்று அங்கு ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் அணு ஆயுதத்தினால் அழிந்திருக்க வேண்டும் இல்லையேல் அங்கு பிரம்மாஸ்திரமானது ஏவப்பட்டு இருக்க வேண்டும் 

👑 வேதங்களில் முதன்மையானதாக அறியப்படும் ரிக் வேதம் பற்றி பார்ப்போம்



☀ நான்கு வேதங்களில் பழமையானது ரிக் வேதமே

🌻 நான்கு வேதங்களிலும் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 1,82,211 ஆகும். இதில் 1,52,222 பாடல்கள் ரிக் வேதத்திலேயே இருக்கிறது

🌼 இந்த வேதம் பத்து பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
பத்து பாகங்களும் 1028 சூத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது

🌻 இது ஒருவராலோ இல்லை சில பேர் சேர்ந்தோ உருவாக்கப்பட்டது அல்ல கிட்டத்தட்ட பல காலமாக பலரால் உருவாக்கப்பட்டது ஆகும்

🌼 தமிழிற்கு உ.வே.சா போலவே

🌼 வேதங்களுக்கு வேத வியாசர் ஆவர் இவரே இத்தனை பகுதிகளையும் தொகுத்து 10 பாகங்களாக பிரித்தார்

🌺 முதல் பாகத்தையும் கடைசி பாகமான பத்தாவது பாகத்தையும் உருவாக்கியது யார் என்று இதுவரை தெரியவில்லை. மற்ற எட்டு பாகத்தையும் உருவாக்கியவர்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

🌻 இரண்டாவது பாகத்தை பிருகு முனிவரின் வம்சத்தில் வந்தவரான கிறிதமாதாவும் அவரது சீடர்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.

🌻 மூன்றாவது பாகத்தை ரிஷிகா முனிவரின் மகனானவரும் சத்திரியரை இருந்து பிராமணராய் மாறிய பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் உருவாக்கியுள்ளார் இந்த பாகத்தில் தான் காயத்ரி மந்திரமானது உள்ளது

🌻 நான்காவது பாகத்தை கௌதம முனிவருக்கும் அகல்யா தேவிக்கும் பிறந்தவரும் தான் இந்த உடல் உயிர் இல்லை பிரம்மத்தின் அங்கமாவேன் என்று கூறிய வாமதேவர் உருவாக்கியுள்ளார்

🌻 ஐந்தாவது பாகத்தை பிரம்மாவினால் உருவாக்கப்பட்ட சப்தரிஷிகளில் ஒருவரும் தத்தாத்ரேயரின் தந்தையுமான அத்ரி மகரிஷி உருவாக்கியுள்ளார்

🌻 ஆறாவது பாகத்தை வால்மீகியின் முதன்மை சீடரும், துரோணாச்சாரியரின் தந்தையுமான பரத்வாஜர் உருவாக்கியுள்ளார்

🌻 ஏழாவது பாகத்தை ஸ்ரீராமரின் குலகுருவும் பீஷ்மரின் குருவும் விஸ்வாமித்ரரை பிரம்ம ரிஷியுமாக்கியவருமான வசிஷ்டர் உருவாக்கியுள்ளார்

🌻 எட்டாவது பாகத்தை பிரம்மாவின் மனத்திலிருந்து தோன்றியவரும் தேவகுருவான பிரகஸ்பதியின் தந்தையுமான ஆங்கிரசர் உருவாக்கியுள்ளார்

🌼 ஒன்பதாவது பாகத்தை ஆங்கிரசரின் மகனான கன்வர் உருவாக்கியுள்ளார்

👑 மனிதன் என்பவன் உயிர், உடல், மற்றும் ஆத்மா இவை மூன்றும் சேர்ந்த கலவை என ரிக் வேதம் கூறுகிறது

🍁 அதாவது ஒருவனுக்கு தந்தை உயிர் அளிக்கிறார்
தாய் உடல் அளிக்கிறாள்
இறைவன் ஆத்மா அளிக்கிறார் இதுவே ரிக் வேதத்தின் விளக்கம்

🍁 மேலும் மனிதன் என்பவன் 5 நிலைகளை கொண்டுள்ளான் என கூறுகிறது அவை
🍁 அன்னநிலை - உடம்பை குறிப்பது
🍁 பிரான நிலை - உயிரை குறிப்பது,
🍁 மனோ நிலை - ஆத்மாவை குறிப்பது
🍁 விஞ்ஞான நிலை - அறிவாகிய ஞானத்தை குறிப்பது
🍁 ஆனந்த நிலை - இறைவனோடு ஒன்றை கலந்து போவதை குறிப்பது

🌼 பகவத் கீதையை போன்றே ரிக் வேதமும் அனைத்துமே இறைவனின் அம்சம் என்று கூறுகிறது சிறிய அணுவிலிருந்து பிரம்மாண்டமான மலை வரை அனைத்தும் அவனே

🌼 ரிக்வேதம் இயற்கையையே கடவுளாக போற்றுகிறது இதில் பத்தாவது பாகத்தில் வரும் புருஷ சூத்தகம் மட்டுமே உருவ வழிபாடு பற்றி கூறுகிறது மற்ற எதிலுமே அவ்வாறு இல்லை மேலும் இன்று நாம் காணும் பற்பல மந்திரங்கள் இங்கு இருந்து எடுக்கப்பட்டவையே

☀ பலரும் கூறுவது போல அக்காலத்தில் ஜாதி பாகுபாடு இருந்ததாக தெரியவில்லை ஒருவரின் தொழில் வைத்தே அவர் அவ்வாறு அழைக்கப்பட்டார்

🌻 ஒரு சத்திரியன் கல்விகள் கற்று பிராமணனாக மாறலாம்

🌻 ஒரு பிராமணன் சூத்திரனாகவும் மாறலாம்

👑 இதற்கு விஸ்வாமித்ரரே சிறந்த எடுத்துக்காட்டு

🌻 பிரம்மம் என்பது யாது என்ற கேள்விக்கு வருண தேவன் அளித்த

🌼 எவற்றிலிருந்து அனைத்தும் தோன்றுகிறதோ

🌼 எவற்றினால் அனைத்தும் காக்கப்படுகிறதோ

🌼 எவற்றின் மூலம் அனைத்தும் அழிக்கப்படுகிறதோ

👑 அதுவே பிரம்மம்

என்னும் பதில் அருமையானது

🌻 சூரிய நமஸ்காரத்தின் பலன்களை அற்புதமாக விவரிக்கிறது ரிக் வேதம்

👑 மேலும் அறிவியல் பார்வையில் பார்த்தால் ரிக் வேதத்தில் விமானங்கள் பற்றியும் சூரியனின் வேகம் பற்றியும் மேலும் மருத்துவ முறைகள் என பற்பல விஷயங்கள் உள்ளன இவைகள் ஆராய்ச்சி செய்யப்படுமே ஆனால் இன்னும் பல உண்மைகள் வரும்

👑 பார்பாரிகன்



🌺 இவர் பீமனின் மகனான கடோற்கசனிற்கும் மௌர்வி என்றழைக்கப்பட்ட கம்கண்கடாவிற்கும் பிறந்தவர்

🌺 இவரின் தாயார் அகிலாவதி என கூறப்பட்டாலும் இவரை பற்றிய குறிப்புகள் வியாச பாரதத்திலோ இல்லை புராணங்களிலோ இல்லை ஆனால் இவருக்கு இராஜஸ்தானில் கோவில் உள்ளது இக்கோவிலின் வரலாற்றில் இவரின் தாயார் மௌர்வி என்றே இருக்கிறது வேறு இடத்தில் இவரைப்பற்றி இல்லாதலால் நாம் அதையே ஏற்போம்

🌼 பூமியின் பாரத்தை குறைக்க பகவான் விஷ்ணுவை அவதரிக்க தேவர்கள் வேண்டும்போது சூரியவசன் என்ற கந்தர்வன் அவர் எதற்கு நானே அவதரிக்கிறேன் என்று கூறியதால் பிரம்மா அவருக்கு சாபம் வழங்குகிறார் அனைத்தையும் அழிக்கும் வல்லமை பெற்றாலும் நீ எவரையும் வீழ்த்துவதற்கு முன் நீ வீழ்வாய் என்பது சாபம் இவ்வாறாகவே பார்பாரிகன் பிறந்தார்

🌼 தவத்தில் பார்வதி தேவியை மகிழ்விக்கும் இவர் சிவனின் ஆசிகளையும் பெறுகிறார் டீன் பான் என்றழைக்கப்பட்ட சிவனின் சக்தி பெற்ற அம்புகளை பெறுகிறார் இதனை கண்ட அக்னி பகவான் இவருக்கு பினாகாவிற்கு இணையான வில்லை அளிக்கிறார்

🌼 இதேபோல் பிரம்மாவின் சக்தி பெற்ற அம்புகள் உள்ளன இவைகள் பிரம்மதேவரின் ஐந்து தலையின் சக்தியையும் கொண்டதுமான பிரம்மாண்ட அஸ்திரத்தை விட அதீத சக்தி பெற்றவை

🌼 இதை அறிந்தவர்கள் இருவரே ஒன்று பிரம்மாஸ்திரத்தின் தலைவரான அகஸ்தியர்

👑 மற்றொன்று இராமர்

🌼 இராவணனின் நாபியில் இருந்த ஒரு சொட்டு அமிர்தத்தை ஆவியாக்க இராமபிரான் இந்த அம்புகளை உபயோகிப்பார்

🌼 இவைகளை வைத்து பார்க்கும்போது சிவனின் அம்புகள் அதீத சக்தி படைத்தவை என்பது தெரிகிறது

🌼 இதில் மூன்று அம்புகள் உண்டு

🌻 முதலாவது அம்பு பார்பாரிகன் சொல்வதையெல்லாம் குறித்துவிடும்

🌻 இரண்டாவது பார்பாரிகன் அழிக்க  வேண்டாம் என்று நினைப்பதையெல்லாம்
அழிவில் இருந்து காக்க முதல் அம்பு குறித்ததை அழித்துவிடும்

🌻 மூன்றாவது குறிக்கப்பட்டது அனைத்தையும் அழித்துவிடும்

🍁 இதை தடுக்கும் வல்லமை ஈசனுக்கே உண்டு

🌼 யுத்தத்தின் போது கடோற்கசனுக்கே 24 வயது தான் ஆனால் அசுரர்கள் பிறந்தவுடன் தாயின் வயதை எட்டிவிடுவர் என்றாலும் பார்பாரிகன் சிறியவன் என்பதை அறியமுடிகிறது

🌺 யுதிஷ்டிரனிடம் கிருஷ்ணர் ஒரு வேளை பார்பாரிகன் கௌரவர்களின் பக்கம் சென்றால் என்னாவது  என்று வருந்துகிறார் அதற்கு யுதிஷ்டிரன் அதான் அர்ஜுனன் மற்றும் பீமன் உள்ளார்களே அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிறார் ஆனால் கிருஷ்ணரோ ஆயிரம் அர்ஜுனர்கள் ஆயிரம் பீமன்கள் வந்தாலும் அவனை தடுக்க முடியாது என்கிறார்

🌼 தனது தாயிடம் யுத்தத்தில் பலவீனமான படையுடனேயே போரிடுடேன் என சத்தியம் செய்ததால் குருசேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் பக்கம் சேர்கிறார். இடையிலேயே கிருஷ்ணர் அவரை பிராமண வேடத்தில் சந்திக்கிறார் எங்கு செல்கிறாய் என கிருஷ்ணர் கேட்கையில் தான் பாண்டவர்களுக்கு சாதகமாக போரிட போகிறேன் என்கிறார்

🌼 பலவீனமான அந்த பக்கம் சேர்ந்து உன்னால் அவர்களை வெற்றி பெற வைக்க முடியுமா என்று கிருஷ்ணர் கூறுகிறார் அதற்கு பார்பாரிகன் ஒரே நிமிடத்தில் யுத்தத்தை முடித்து விடுவேன் என்கிறார்

🌼 அவ்வளவு சிறந்த வீரனா நீ எனில் இம்மரத்திலுள்ள இலைகளை மட்டும் உனது அம்பிற்கு இலக்காக்கு என்கிறார் கிருஷ்ணர்

🌼 இதற்காக கண்னை மூடி பார்பாரிகன் மந்திரம் சொல்லும்போது கிருஷ்ணர் அவன் அறியாமல் ஒரு இலையை எடுத்து தனது காலுக்கு கீழ் மறைத்து வைத்துவிடுகிறார் இதனால் அவனின் முதல் அம்பு கிருஷ்ணரின் காலையும் குறிக்கிறது இதைப்பற்றி கிருஷ்ணர் கேட்கையில் உங்களின் காலுக்கு கீழ் இலை உள்ளது என்கிறார் பார்பாரிகன்

🌼 சில இடங்களில் கிருஷ்ணன் காலை எடுத்துவிட்டதாக கூறினாலும் பல இடங்களில் கிருஷ்ணன் கால் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது இதனால் மூன்றாவது அம்பு கிருஷ்ணனின் காலை கிழித்து பாய்கிறது இக்காரணத்தால் தான் கிருஷ்ணனின் கால் பாகம் பலவீனமானது என கூறப்படுகிறது

🌼 இதை வைத்து பார்த்தால் கிருஷ்ணனால் கூட பார்பாரிகனிடம் இருந்து எவரையும் காக்க இயலாது என்பது தெரிகிறது

🌺 இதனால் கிருஷ்ணர் தான் யாசகம் வேண்டி வந்ததாக கூறுகிறார் அதற்கு பார்பாரிகனும் இசைந்தான் பிறகு நான் உன்னிடம் உனது தலையை யாசகமாக கேட்கிறேன் என்றவுடன் வந்திருப்பது யார் என வினவுகிறான் உடன் கிருஷ்ணர் தன் உண்மையான ரூபத்தை காட்டுகிறார்

🌼 பார்பாரிகா நீ பலவீனமான பக்கமே சேர்வாய் இதனால் நீ சேரும் பகுதி பலம் மிகுந்தது ஆகும் இதனால் நீ கடைசி வரை கட்சி மாறிக்கொண்டு மட்டுமே இருக்கமுடியும் மேலும் உன்னை தவிர எவரும் யுத்த களத்தில் மிஞ்சமாட்டார்கள் என்கிறார் இதனால் பார்பாரிகன் தனது தலை வெட்டப்பட்டாலும் முழு யுத்தத்தையும் பார்க்கும் வரத்தை கேட்கிறான் கிருஷ்ணரும் வரமளிக்கிறார்

🌼 இதனால் பங்குனி மாதத்தில் சுக்லபட்ச துவாதசியில் தனது தலையை கிருஷ்ணரிடம் தானம் அளிக்கிறார் ஆனாலும் கிருஷ்ணரின் அருளால் 18 நாட்கள் யுத்தத்தை மலையில் இருந்து பார்க்கிறார்

👑 யுத்தத்திற்கு பிறகு வெற்றிக்கு யார் காரணம் என பாண்டவர்கள் வாதம் செய்யும்போது அதை பார்பாரிகனிடம் கேட்கின்றனர் அதற்கு பார்பாரிகன் ஒவ்வொருவரின் தலையையும் சுதர்சனம் வெட்டியது மாதா காளி அனைத்து ரத்தத்தையும் குடித்தாள் என்கிறார்

👑 யுத்தத்திற்கு பிறகு பார்பாரிகனுக்கு உயிர் போகிறது இதனால் அவனின் தலையை மட்டும் புதைக்கிறார்கள் இது கலியுகத்தில் ஒரு அந்தனர்க்கு தெரிந்து அவர் பார்பரிகன் புதைத்த இடத்தை காட்ட அங்கு ஒரு மன்னர் இவருக்கு கோவில் கட்டினார் என்று கூறுகிறது இராஜஸ்தானில் உள்ள இவரது கோவிலின் வரலாறு. கிருஷ்ணனின் ஆசிகளை பெற்றதால் கிருஷ்ணரின் ஒரு நாமமான சியாம் என்று அழைக்கப்படுகிறார்

🌼 ஆனால் அவனது தாய் ஏன் இவ்வாறு செய்தார் மற்றும் கிருஷ்ணரின் செயலும் ஏன் இப்படி ??

🌼 சாபம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு வேளை பாண்டவர் பக்கம் அவன் சேர்ந்திருந்தால் கௌரவ படை நொடியில் அழிவது நிச்சயம் கிருஷ்ணனின் தந்திர பேச்சு பார்பாரிகனை கட்டுபடுத்திவிடும்

🌼 ஆனால் பாண்டவர்களின் படை அழிய வேண்டியதும் அவசியம் மேலும் யுத்தத்தில் பல விசயங்கள் நடந்தே தீர வேண்டும் இதனால் தான் இவ்வாறான காரியத்தை செய்தார் பகவான்

🌼 பலி, தலை உயிர் என்று பார்த்தால் அரவானை ஒத்ததாகவே இருந்தாலும் இது வேறு கதையாகும்

☀ இடையில் தகவல்கள் விடுபட்டிருந்தால் கூறுங்கள்

👑 மன்வந்திரம்



🌺 பலரும் கல்கி அவதாரமானது கலியின் கடைசியில் வரும் கல்கி அவதாரம் முடியும்போது அனைத்தும் அழிந்து மீண்டும் உலகம் உருவாகும் எனவும் இந்த சதுர்யுகங்கள் சுழற்சி அதாவது மீண்டும் தேவாசுர யுத்தம், ராம ராவண யுத்தம் பாரத யுத்தம் நடக்கும் எனவும் கூறுகின்றனர் இது தவறான தகவலாகும் இதுப்பற்றி நாம் முழுமையாக அறிய வேண்டுமானால் மன்வந்திரங்கள் பற்றி அறிய வேண்டியது அவசியம்

🌺 சதுர்யுகங்களான சத்ய, திரேதா, துவாபர,கலி யுகங்களின் கூடுதல்
43,20,000 வருடங்கள்

🍁 அதேபோல 71 சதுர் யுகங்கள் சேர்ந்தது 1 மன்வந்திரம் அதாவது 30,67,20,000 வருடங்கள்

🍁 இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன.

🌻 ஒவ்வொரு இரண்டு மன்வந்திரத்திற்கு இடையிலும் சந்தி என்ற காலம் இருக்கும்

🌻 அவ்வாறே 14 மன்வந்திரம் மற்றும் 14 சந்தி சேர்ந்தது ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவருக்கு ஒரு பகல்பொழுது இதே போல் ஒரு கல்பம் இரவுபொழுது

🌻 இதன்படி பார்த்தால் பிரம்மதேவருக்கு ஒரு நாள் என்பது 8,64,00,00,000 வருடங்கள் இதே போல 360 நாட்கள் கொண்டது ஒரு வருடம் இதேபோல நூறு ஆண்டுகளே பிரம்மாவின் ஆயுள் அதன்பிறகே அடுத்த பிரம்மா படைக்கப்படுவார்.

🌻 இனி மன்வந்திரத்தை பற்றி விளக்கமாக பார்ப்போம்

🌻 14 மன்வந்திரங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு மனு தலைவராவார். அது போல வாழும் ஜீவராசிகள் அனைத்திலும் வேறுபாடு இருக்கும்

🌻 மேலும் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் தனி மனு இருப்பது போல சப்தரிஷிகள், இந்திரன், தேவர்கள் என அனைவருமே மாறுவர்.அதாவது ஒரு மன்வந்திரம் முடிந்து அடுத்த மன்வந்திரம் வரும்போதே அனைத்தும் மாற்றத்தை சந்திக்கும் சிரஞ்சீவிகள் கூட ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் தனித்தனியே உள்ளனர்

🌻 இதேபோல 14 மன்வந்திரமும் முடியுமாயின் 14 லோகங்களில் 3 லோகங்கள் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்) முழுவதுமாக அழியும்.

🌼 பிரம்மதேவரின் இரவு நேரத்தில் படைப்பது இருப்பதில்லை என பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது

👑 அடுத்து 14 மன்வந்திரங்களாவன
1.ஸ்வாயம்பு
2.ஸ்வரோசிச
3.உத்தம
4.தாமஸ
5.ரைவத
6.சக்ஷூச
7.வைவஸ்வத
8.ஸாவர்ணி
9.தக்ஷ ஸாவ்ர்ணி
10.ப்ரம்ம ஸாவர்ணி
11.தர்ம ஸாவர்ணி
12.ருத்ர ஸாவர்ணி
13.ரௌச்ய ஸாவர்ணி
14.இந்திர ஸாவர்ணி

🌻 இவர்களின் மனைவி குடும்பம் என ஒவ்வொரு மன்வந்திரத்தின் ஆரம்பமும் விஷ்ணு புராணத்தில் உள்ளது.

🌼 நாம் இப்போது இருப்பது 7-வது மன்வந்திரம் அதாவது வைவஸ்வத மனுவின் மன்வந்திரத்தில் 28-வது சதுர்யுகத்தில் கலியுகத்தில் 5100 வருடங்களை தாண்டி உள்ளோம் நமது பிரம்மாவின் வயது 51 நமக்கென்று சப்தரிஷிகள் தனியாக உள்ளனர் மேலும் புரந்தரன் தற்போதுள்ள இந்திரன் ஆவார் (மகாபலி சக்ரவர்த்தி அடுத்த மன்வந்திரத்தின் இந்திரன் ஆவார்) இதுவரை இருந்த சதுர்யுகங்களுக்கும் 28 வியாசர்கள் மொத்தமாக உள்ளனர் நமது இந்த சதுர்யுகத்திற்கு பராசரரின் மகனான கிருஷ்ணத் துவைபாயனர் வேதங்களை தொகுத்த வேத வியாசர் ஆவார்

🌻 நாம் இருக்கும் இந்த மன்வந்திரம் உள்ள கல்பமானது சுவேத வராக கல்பமாகும் அதாவது மூழ்கி இருந்த நிலப்பகுதியை வராகர் தூக்கியதால் இப்பெயர் எனில் இதை வைத்து பார்த்தால் இந்த மன்வந்திரத்தில் தான் வராகர் அவதாரம் எடுத்துள்ளார் எனில் இதற்கு முன் வராகர் அல்லாத வேறு அவதாரங்கள் பல எடுத்து இருக்க வேண்டும்

🌼 இப்பொழுது நாம் கல்கி அவதாரத்திற்கு வருவோம் இன்னும் இந்த மன்வந்திரம் முடியவே 43 சதுர்யுகங்கள் மீதம் உள்ளன இதற்கு அடுத்து 7 மன்வந்திரங்கள் முடிந்தாலே பிரம்ம பிரளயம் வரும்.

🌻 மேலும் கல்கி அவதாரமானது பாரத யுத்தம் போலவே தர்மத்தை ஸ்தாபிக்கவே அதாவது தர்மம் ஒற்றை காலில் உள்ள இந்த கலியில் அதர்மத்தை வேறோடு அறுப்பார் கல்கி பெருமான் அதனால் மீண்டும் சத்ய யுகம் தொடங்கும் அதன்பிறகு ராம, கிருஷ்ணர்களை போன்ற பற்பல அவதார புருஷர்கள் வருவர்.

👑 சக்ர வியூகம்



🌻 வியூகங்கள் போரில் பயன்படுத்தப்பட்டவைகள்

🌻 இவை பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கையை வடிவமாக கொண்டு இருக்கும்

🌻 ஒவ்வொரு வியூகத்திற்கும் பலமும்,  பலவீனமும் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு வியூகத்திற்கும் எதிர் வியூகம் உண்டு

🌻 வியுகத்தை உடைப்பதே வெற்றியாகும் காரணம் சாதாரணமாக கூட்டமாக தாக்குவதற்கும் வியூகம் அமைத்து தாக்குவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு

🌻 ஆனால் வியூகங்களில் சக்ர வியூகம் முக்கியமானதாக கருதப்படுகிறது காரணம் இதை அமைப்பது கடினம் அதே போல் எதிரி இதை அமைத்தால் அதை உடைப்பதும் கடினம்

🌻 ஒரு வியூகத்தை மற்றொரு வியூகம் கொண்டு உடைக்க இயலும் ஆனால் சக்ர வியூகத்தை உடைக்க என்று ஒரு வியூகம் இல்லை

🌻 குருசேத்திரத்தில் கூட சக்ர வியூகத்தை உடைக்க கௌரவ படையில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அஸ்வதாமன் பாண்டவ படையில் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை தவிர வேறெவரும் அறியார் கிருஷ்ணரின் மகன் பிரதியும்னனும் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனும் அறிவர் ஆனால் இவர்கள் குருசேத்திர யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை விதுரர் அறிவாரா என்று தெரியவில்லை காரணம் அவர் பீஷ்மர் இருந்த காரணத்தால் எந்த பெரும் யுத்தத்திலும் பங்கு கொள்ளவில்லை குரு சேத்திர யுத்தத்திலோ கிருஷ்ணரின் வியூகத்தால் கோவர்த்தன வில்லை உடைத்து யுத்தத்தில் பங்கெடுக்கவில்லை

🌻 இதை உருவாக்குவது என்பது சாமான்யம் அல்ல குறிப்பிட்ட சிலரால் மட்டுமே உருவாக்க முடியும் மேலும் இதில் காத்தல் அழித்தல் என இரண்டு வகை உள்ளது

🌻 பாரதத்தில் விராட யுத்தத்தின்போது பீஷ்மரால் துரியனை காக்கவும்

🌻 குருசேத்திரத்தில் பதிமூன்றாம் நாள் யுதிஷ்டிரனை சிறைபிடிக்கவும்

🌻 பதினான்காம் நாள் ஜயத்ரதனை காக்க சர்ப்ப வியூகம் மற்றும் ஊசி வியூகம் உடன் கூடிய சக்ர வியூகம் உருவாக்கப்பட்டது

🌻 விராட யுத்தத்திலும் பதினான்காம் நாளும் அர்ஜுனரால் உடைக்கப்பட்டது ஆனால் பதிமூன்றாம் நாள் உள்ளே சிக்கிய அபிமன்யு அதர்மவழியில் கொல்லப்பட்டார்

🌻 அப்படி என்ன இந்த வியூகத்தில் உள்ளது பற்பல மாவீரர்கள் இருந்தும் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே உடைக்க முடியும் என்று சொல்லுமளவிற்கு ?

🌻 சக்ர வியூகம் 7 வளையங்களை கொண்டது இதில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று எதிர்திசையில் சுழன்ற வண்ணம் இருக்கும் அதாவது நாற்படைகளும் கலந்து வடிவமைக்கப்பட்டு இருக்கும் வளையமானது சுழன்ற வண்ணம் இருக்கும்

🌻 இதனால் ஒருவர் காலாட்படையுடன் சண்டையிடும்போது காலாட்படை சென்று குதிரைப்படை வரும் பின்பு தேர்ப்படை மற்றும் யானைப்படை இவ்வாறாக தொடரும் இதனால் சண்டையிடுபவர் எளிதில் வீழ்த்தப்படுவார்

🌻 இவை இல்லாமல் ஒவ்வொரு வளையத்திற்கும் ஒரு மகாரதி பொறுப்பாவார் இதனால் ஒருவர் வியூகத்தின் உள் நுழைவாரானால் ஒரு வளையத்திற்கு ஒரு மகாரதியை வீழ்த்தியாக வேண்டும்

🌻 வளையமானது சுழன்றுகொண்டே இருப்பதால் அதில் விரிசலானது விழுந்தால் உடன் அடுத்து இருப்பவர்களால் நிரப்பப்படும் இதனால் வளையத்தில் விரிசல் உண்டாக்குவது கடினம்

🌻 ஒருவர் வியூகத்தின் உள்ளே சிக்குவாரேயானால் சுழன்று கொண்டு இருக்கும் படை அவரை குழப்பும் மேலும் சோர்வு அவரை வாட்டும் இதனால் வியூகத்தை உடைக்க நினைப்பவர் அதிக திறனை கொண்டு சோர்வடையாமல் இருப்பது அவசியம்

🌻 வளையத்தில் விரிசலுண்டாக்கி நுழைய வேண்டுமானால் வளையத்தின் பலவீனமான பகுதியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் மேலும் நுழைய இருக்கும் பகுதியின் இடது மற்றும் வலது புறத்தை தாக்க வேண்டும் ஒரு இடத்தில் தாக்கினால் சிறிது நேரத்தில் அந்த இடம் முடப்படும் ஆனால் ஒரு இடத்தின் இருபுறம் தாக்கப்படுமேயானால் நுழைய அவகாசமானது கிட்டும்

🌻 தேர்ப்படையின் மீதோ இல்லை ரதம் வரும்போதோ தாக்கினால் உள் நுழைவது கடினம் இதனால் அபிமன்யு யானைப்படை வரும் நேரம் சரியாக தாக்கி உள்நுழைவார்

🌻 உள்நுழைவது பற்றி கூறப்பட்டு இருந்தாலும் வியூகத்தை உடைப்பது பற்றி வியாசர் குறிப்பிடவில்லை ரகசியமானது கடைசிவரை கூறப்படவில்லை

🌻 சிறந்த வீரர்களுக்கே வயிற்றில் புளியை கரைப்பதாக இருந்தது சக்ர வியூகம் என்று சொன்னால் மிகையாகாது

👑 இதனாலே இன்றுவரை கூட பல சிக்கல் மிகுந்த விசயங்களுக்கும் திறன் மிகுந்த ஒருவரின் செய்கைக்கும் சக்ர வியூகம் என்ற பெயர் உள்ளது

Sunday, May 14, 2017

👑 கடோற்கசன்



🌸 பீமனுக்கும் ஹிடிம்பிக்கும் பிறந்தவன் தான் கடோற்கசன்

🌸 தந்தை அதிபராக்ரமசாலி
தாயோ மனிதர்களை கொன்று சாப்பிடும் அரக்கி இதனால் பலத்தில் சிறந்த கடோற்கசன் மாயைகளிலும் வல்லவனாகிறான்

🌸 ஆனால் ஹிடிம்பி தன்னை அரக்கி இல்லையென்றும் சாலக்கடங்கடி என்னும் ஈசுவரி என்றும் கூறுகிறாள் அவ்வாறே ஹிடும்பியை துர்கா தேவியுன் அம்சமாக கருதி அவளுக்கு நேபாளத்தில் ஒரு கோவில் உள்ளது

🌸 ஹிடும்பி பீமனை தன் மணாளனாக வேண்டினாலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களை விட்டு விலகுவதாக வாக்களிக்கிறார் அதே போல் பீமனுடன் பகல் முழுதும் நீ சுற்றலாம் ஆனால் இரவு எங்களுடன் தான் பீமன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு பாண்டவர்கள் சம்மதிக்கின்றனர்

🌸 சாலிஹோத்ர மகரிஷியின் தவத்தினால் உண்டுபண்ணப்பட்டதும், அந்த நீரை பருகினாலே பசி தாகம் என அனைத்தும் போக்குவதுமான தடாகம் இருந்தது அங்கே பாண்டவர்களை தங்க வைத்தால் ஹிடிம்பி

🌸 இவ்வாறாக 7 மாதங்கள் சென்ற பின் கருவுற்றாள் ஹிடிம்பி. அசுரர்களை பொறுத்தவரையில் குழந்தை பிறந்தவுடனே தாயின் வயதை எட்டி விடும் அவ்வாறு பிறந்த குழந்தையின் தலை சட்டி போல் இருந்ததால் கடோற்கசன் என்ற நாமம் சூட்டினர்

🌸 குந்தி மற்றும் பாண்டவர்கள் தன்னை நினைத்து அழைத்தால் அவர்களுக்கு சேவை செய்ய உடனே தான் அங்கு வருவதை ஹிடும்பி மற்றும் கடோற்கசன் சொல்லிவிட்டு செல்கின்றனர் உண்மையில் கடோற்கசனே வம்சத்தில் மூத்தவன் அவனே அரியணைக்கு வரவேண்டியவன் ஆனால் அப்படி எதையும் கேட்கவில்லை

🌸 கிருஷ்ணரிடம் இந்த உலகத்தில் மாயத்தில் உன்னை மிஞ்ச எவரும் இல்லை என்ற வரத்தை பெற்றவர் கடோற்கசன் இக்காரணத்தால் மாயத்தில் மேகநாதனுக்கு இணையான ஒருவராக மாறினார்

🌸 நாக கன்னிகையான அகிலாவதியை வாதத்தில் வென்று திருமணம் செய்தார் இவர் ஈசனின் கழுத்தில் இருக்கும் நாகமான வாசுகியின் பெண் எனவும் சாபத்தின் காரணமாக கடோற்கசனை மணக்க வேண்டியது வந்ததாகவும் கூறுவர்

🌸 இராஜசூய யாகத்தின் போது தென்பக்கம் எல்லை வரை செல்லும் சகாதேவன் அதன்பிறகு கடோற்கசனை அழைத்து விபிஷணருக்கு தூது அனுப்புகிறான் அவரும் யாகம் நடத்த கூறியது கிருஷ்ணன் என்பதால் சம்மதிக்கிறார்

🌸 வனவாசத்தின்போது மலை உச்சியில் இருந்த நாராயணாஸ்ரமம் செல்லும்போது பாஞ்சாலி நடக்கமுடியாமல் மயங்கி விழுகிறாள் இதனால் வருத்தமடைந்த பாண்டவர்கள் கடோற்கசனை அழைக்கின்றனர் கடோற்கசனுடன் நூற்றுக்கணக்கான அசுரர்கள் தோன்றி பாண்டவர்கள், தௌமியர் மற்றும் அவர்களுடன் இருந்த பிராமணர்களை எல்லாம் தூக்கி செல்கின்றனர்

🌸 கடோற்கசனைப்பற்றி அறிந்து வைத்திருந்த பீஷ்மர் எக்காரணத்தை கொண்டும் அஸ்தமனத்திற்கு பின்னர் யுத்தம் போக கூடாது என்று உறுதியாய் இருந்தார் போரில் கடோற்கசனின் தேரைப்பற்றி குறிப்பிடும்போது கரடியின் தோலால் போர்த்தப்பட்ட அந்த தேரின் உள் நீளம் மட்டுமே 400 முழம் அதில் இல்லாத ஆயுதம் இல்லை அதை இழுக்கும் உயிரினம் குதிரை இல்லை அது யானையின் அளவை ஒத்ததாகவும், சிறகுகள் கொண்டதாகவும் இருந்த விசித்திர உயிரினம்

🌸 யுத்தத்தில் நான்காம் நாளில் பீமனை பகதத்தன் அம்புகளால் மூடுவான் பலர் சென்றும் அவனை தடுக்கமுடியாது அப்போது கடோற்கசன் அரை நிமிடத்தில் மாயையினால் ஐராவதத்தை உண்டுபண்ணி அதில் பகதத்தனை கொல்லும் முடிவோடு ஏறுகிறான் அந்த யானை கூடவே அஷ்டதிக்கஜங்களான அஞ்சனம், வாமனம், மகாபத்மம் என்றழைக்கப்பட்ட மூன்று யானைகளில் அசுரர்கள் ஏறி பகதத்தனை நாற்பக்கமும் முற்றுகையிடுகின்றனர் சூரியனும் அஸ்தமணமாகிறது இதை கண்ட பீஷ்மர் இனிமேல் யுத்தம் நடக்க கூடாது அது பெரிய அழிவை ஏற்படுத்தும் என முடிக்கிறார்

🌸 துரியன் யுத்தத்தில் கடோற்கசனால் தோற்கடிக்கப்பட்டான் அப்போது பீஷ்மர் கடோற்கசன் அவன் தந்தையின் பலத்தை பெற்றவன் மேலும் மாயங்களில் வல்லவன் ஆவனை பகதத்தனால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார். பகதத்தனும் அதே போல வெல்கிறார் ஆனால் கடோற்கசன் தற்போது மாயத்தை பிரயோகிக்கவில்லை

🌸 ஜயத்ரதனை வதைத்த நாளில் யுத்தம் இரவிலும் நடக்கிறது அன்று அஸ்வதாமனிற்கும் கடோற்கசனிற்கும் பெரும்யுத்தம் நடக்கிறது இதில் கடோற்கசனின் மகனான அஞ்சனபர்வாவை அஸ்வதாமன் கொல்கிறான் தொடரும் யுத்தத்தில் அஸ்வதாமன் மூர்ச்சையடைந்ததால் அவ்விடம் விட்டு செல்கிறார்

🌸 கடோற்கசனை அழைக்கும் கிருஷ்ணன் கர்ணனை எதிர்க்கும் திறன் பெற்றவர்கள் ஒன்று அர்ஜுனன் மற்றொன்று கடோற்கசன் ஆதலால் கர்ணனை எதிர்ப்பாய் என்கிறார் இதனால் கர்ணனை எதிர்க்கும் கடோற்கசனின் உடலில் இரண்டு அங்குலம் கூட இடைவெளி இல்லாத அளவிற்கு அம்புகளால் அடிக்கிறான் கர்ணன் இதனால் கடோற்கசன் முள்ளம்பன்றி போலிருந்தார்

🌸 இதுவரை மாய யுத்தத்தை செய்யாத கடோற்கசன் மாயயுத்தத்தில் இறங்குகிறார் பர்வதத்தின் அளவில் பற்பல முகங்கள் கொண்ட ரூபத்திலிருந்து கட்டை விரல் அளவேயான ருபம் வரை அனைத்து மாயங்களையும் புரிகிறார்

🌸 பீமன் வனவாசத்தில் கொன்றவனான ஜடாசுரனின் புத்திரனான அலம்பலன் பீமன் மீது கொண்ட பகையால் கடோற்கசனை கொல்ல வருகிறான் அவன் தலையை கொய்யும் கடோற்கசன் துரியனிடம் சென்று "பெண்கள், அந்தணர்கள் மற்றும் அரசர்களை பார்க்க போகும்போது வெறும் கையோடு போககூடாது ஆதலால் இந்த தலையை கொண்டு வந்தேன் என்று கூறி அலம்பலனின் தலையை தருகிறார்"

🌸 மீண்டும் கர்ணனுடன் யுத்தம் இப்போது அஞ்சாலிகா அஸ்திரம் மூலம் கர்ணனின் வில்லை உடைக்கிறார்.

🌸 பிறகு பகாசுரனின் தம்பியான அலாயுதன் பீமனை எதிர்க்கிறான் பீமனே அவனின் மாயையால் திண்டாடுகிறான் இதையறிந்த கடோற்கசன் அலாயுதனையும் கொல்கிறான்

🌸 பிறகு கடோற்கசனை சார்ந்த அசுரர்கள் பற்பல ஆயுதங்களையும் கற்களையும் மழையாக பொழிகின்றனர். இதைக்கண்ட கௌரவ சேனை பாண்டவர்களுக்கு ஆதாரவாக தேவர்களே யுத்தத்தில் வந்துவிட்டதாக கூறி சிதறுகின்றனர் பிறகு துரியன் கர்ணனிடம் இவன் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் வேலை இல்லாமல் செய்துவிடுவான் அதனால் இந்திரனின் சக்தியாயுதத்தை பிரயோகி என்கிறார்

🌸 இதனால் வைஜயந்தி எனப்பட்ட சக்தியாயுதத்தை கடோற்கசன் மீது எவுகிறார் கர்ணன் இதையறிந்த கடோற்கசன் பெரிய உருவமெடுத்து ஒடுகிறார் சக்தியாயுதம் கடோற்கசனை வீழ்த்தி நட்சத்திரத்தில் சேருகிறது கடோற்கசன் சரியாக கௌரவ சேனை மீது விழுகிறார்

🌸 அவர் சாகும்போது கூட லட்சக்கணக்கில் வீரர்களை சாய்த்தே வீழ்ந்தார் கடோற்கசனுக்காக பாண்டவ சேனையில் அனைவருமே வருந்தும்போது கிருஷ்ணர் மட்டும் ஆனந்த கூத்தாடுகிறார் காரணம் கர்ணனின் சக்தியாஸ்திரத்தை பறித்தாயிற்று இனி அர்ஜுனனுக்கு ஆபத்து இல்லை என்று

🌸 ஆனால் மாவீரனும் பாண்டவ குமாரர்களில் மூத்தவனுமான கடோற்கசன் வீழ்த்தப்பட்டதற்கு காரணம் என்ன? ?

💐 ஒன்று அசுரர்களை அழிக்க குரு சேத்திர யுத்தம் ஒன்றே வழி

💐 இரண்டு கடோற்கசன் ஒரு முறை வேதத்தையே அவமதித்து இருந்தார் மேலும் வேள்விகளை நடத்தவிடாமல் அந்தணர்களை துன்புறுத்தி வந்தார் அதற்கான தண்டனையும் வேண்டும் (கிருஷ்ணரே கடோற்கசனை கர்ணன் கொல்லாமல் இருந்து இருந்தால் நானே கொன்று இருப்பேன் என உரைப்பார்)

💐 மூன்று ஒரு வேளை யுத்தத்திற்கு பிறகு கடோற்கசன் இருந்தால் கலியின் கொடுமை மேலும் அதிகரிக்கும் காரணம் அசுரர்கள் பல்கி பெறுகுவர்

💐 நான்கு கர்ணனின் சக்தியாஸ்திரத்தை பறிக்க வேண்டும்

👑 இவைகள் பாரதத்தில் அறிந்தது மட்டுமே அனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது இவைகள் இல்லாமல் வேறு தகவல்கள் இருந்தால் கூறுங்கள்.

👑 பாண்டவர்களின் கொடிகள், சஸ்திரங்கள் மற்றும் தனித்திறன்


👑 பிறக்கப்போகிறவனே அடுத்த அரசன் இதனால் அவன் தர்மத்தை பின்பற்றுபவனாக இருக்கவேண்டும் என்பதால் யுதிஷ்டிரனை பெற்றார் பாண்டு

👑 யுதிஷ்டிரன் தர்மப்படி ஆண்டாலும் தர்மத்தை காக்க யுதிஷ்டிரனுக்கு துணைபுரிய வீரம் நிறைந்தவர்கள் வேண்டும் என பீமார்ஜுனர்களை பெறும் பாண்டு
அரசனுக்கு ஆலோசனை கூற ஞானிகளாய் விளங்கும் அமைச்சர்களும் தேவை இதனால் நகுலசகாதேவர்களை பெறுவார்

🌼 இதனால் முறையே யுதிஷ்டிரன் தர்மத்தை பின்பற்றுபவனாகவும்

🌼 பீமார்ஜுனர்கள் வீரத்தில் சிறந்தவர்களாகவும்

🌼 நகுலசகாதேவர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாவும் விளங்கினர்

☀ தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கேற்றவாறு நான்கு தம்பிகளை கொண்ட யுதிஷ்டிரன் சிறந்து விளங்கினான் நால்வரும் நாற்பக்கமும் வென்று இராஜசூய யாகம் நடத்தி காட்டினர்

🌺 பாண்டு வனவாசத்தில் இருக்கும்போதே நூறு அஸ்வமேத யாகங்களை செய்தவரும் ராஜ்யத்தை துறந்து தவமிருந்தவருமான சுகரிடம் தன் மகன்களை கல்வி கற்க வைத்தார் இதனால் அவர்களின் தனித்திறனை அறிந்தனர் இதனால் கிருபர் மற்றும் துரோணரிடம் கல்வி கற்கும்போதும் அந்தந்த ஆயுதப்பிரயோகத்தில் சிறந்து விளங்கினர்

🌼 பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது தங்கள் விற்களின் நாண்களை தளர்த்தி மயானத்தில் வன்னி மரத்தில் வைத்து ஒரு சடலமாக கட்டி யாரும் அதை அண்டாதவாறு வைக்கின்றனர்

🌼 யுதிஷ்டிரன்

🍁 கிரகங்கள் சூழ்ந்த சந்திரன் கொடி

🍁 மஹேந்திரனை தேவதையாக கொண்ட மஹேந்திர வில்

🍁 ஈட்டியிலும் தேர்போரிலும் யுதிஷ்டிரனின் திறன் அபாரமானது ஈட்டி கொண்டு கல்லையும் காகிதம் போன்று கிழிக்கும் திறன் கொண்டவர்

🍁 பெரும் ராஜதந்திரி ஞானியும் கூட யக்ஷன் மற்றும் நகுஷன் கேட்ட கேள்விகளுக்கு சிறந்த பதிலை வழங்கியவர் போரில் சமாதனத்தை விரும்பியவர் கிருஷ்ணரிடம் சமாதனத்தையே வேண்டினார்

🍁 விராடத்தில் இவர் இந்திரனின் ஆசனத்திலும் அமர தகுதியுடையவர் என அர்ஜுனன் கூறுவார்

🍁 நந்தம், உபநந்தம் என்ற இரு திவ்ய மிருதங்கங்கள் யுதிஷ்டிரன் ரதத்தில் இருந்தன இவைகள் இயந்திரமயமானவை அதுவே இயங்கி லயிக்க வைக்கும் இசையை தரும்

🍁 துரோண வதத்திற்கு முன்பு வரை யுதிஷ்டிரனின் ரதம் தரையில் படவில்லை தரைக்கும் தேருக்கும் நான்கு விரல் இடைவெளி இருந்தது

🍁 பூதவுடலுடன் சொர்க்கம் சென்றவர் அது எவ்வளவு கடினம் என்பதை திரி சங்கு கதையில் அறியலாம்

🌼 பீமன்

🍁 வைடூரியத்தை கண்களை கொண்ட மகாசிம்மமே கொடி

🍁 வாயுவை தேவதையாக கொண்ட வாயவ்யம் என்ற வில்

🍁 ஒரே அடியில் யானையை கொல்லும் திறன் பெற்றவன்

🍁 பீமன் குழந்தையாய் இருக்கும்போதே சாதசிரங்க மலையிலிருந்து தவறி விழுவான் ஆனால் அவன் விழுந்த பாறை சுக்குநூறாகும்

🍁 பீமனின் கதாயுதம் மயன் பிந்துசாரத்திலிருந்து எடுத்துவந்தது மயன் அர்ஜுனனுக்கு காண்டீபம் போல பீமனுக்கு இக்கதாயுதம் என்று கூறுவான் முன்பு அசுரர்களை அழிக்க உருவாக்கப்பட்ட இது பீமனை போன்ற புஜங்களில் கஜங்களின் பலத்தை பெற்றவனை தவிர மற்றவரால் அசைக்கவும் முடியாது

🍁 யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் தோற்று திரௌபதி மானபங்க படுத்தப்பட்டதால் யுதிஷ்டிரனின் கையை எரித்தவர் அர்ஜுனன் தடுக்கபோகும்போது தமயனின் தவறை திருத்த வேண்டியது தம்பிகளின் கடமை என உரைத்தவர்

🍁 பீமனை மல்யுத்ததில் வீழ்த்துவது நடவாத ஒன்று பகாசுரனிலிருந்து ஹிடும்பன், ஜராசந்தன், கிர்மிரன், ஜடாசுரன், கீச்சகன் என அனைவரையும் மல்யுத்தத்திலேயே வீழ்த்துவான் ஆனால் கதாயுத்தத்தில் துரியனுக்கு அடுத்தவனே பீமன்

🍁 சமையலில் பீமன் தேர்ச்சியடைந்தவன் இதனால் இன்றும் பீமபாகம் என்ற சொல் உள்ளது விராடனனிடம் செல்லும் பீமன் தான் ஒவ்வொரு காய்களிலும் ஐந்து வகை செய்வதாகவும் அவையனைத்தும் அறுசுவையும் உள்ளதாய் கூறுகிறான் சித்தமருத்துவப்படி பீமபாகமே சிறந்ததாக கருதப்படுகிறது

🍁 பீமன் என்றவுடன் குண்டு உருவம், தொப்பை, அசைந்து வரும் உருவம் எனவே பலரும் நினைக்கின்றனர் ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒடுவதிலும் மற்றும் நிச்சலிலும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களில்
பீமனே முதலாமிடம் மேலும் அக்காலத்திலேயே Six pack வைத்தவன் பீமன் இக்காரணங்களால்தான் பீமன் மல்யுத்தத்தில் சிறந்தவனாக இருந்து இருப்பார் போல

🌼 அர்ஜுனன்

🍁 அனுமக்கொடியுடைய எத்தனை ஆயுதத்தை வேணாலும் தாங்கி காற்றின் வேகத்தில் செல்லும் தேவ ரதம்

🍁 பிரம்மனின் தர்மபரிபாலனதிற்காக உருவாக்கப்பட்ட காண்டீப வில்

🍁 இரண்டு அட்சய அம்பறாத்துணிகள்

🍁 இவை மூன்றும் சந்திரன் அசுரர்களை அழிக்க பயன்படுத்தியது அது வருணனிடம் இருந்தது பிறகு அக்னி மூலமாக பார்த்தனிடம் வந்தது

🍁 அர்ஜுனன் ஒரு மாதம் வரை கூட தூங்காமல் இருப்பான், களைப்பு இன்றி தொடர்ந்து யுத்தம் செய்வான் மேலும் இரவிலும் அம்பெய்யும் திறன் பெற்றவன் இது இல்லாமல் இரு கைகளிலும் அம்பெய்யும் திறன் பெற்றவன் இக்காரணங்களால் அர்ஜுனன் ஒரு மாதம் கூட யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் வல்லமை பெறவன்

🍁 33 லட்சணங்கலும் பொருந்தியவன் மகாதேவரோடு யுத்தம் செய்யும் கட்டி புரண்டதால் அனைத்து அங்க தோஷமும் நீங்கி புது பலம் பெற்றவன்

🍁 வீணை வாசிப்பதில் அர்ஜுனன் நிகரற்றவன் மேலும் நாட்டியத்திலும் வல்லமை பெற்றவன்
                          ~~~~~~~~~~
நகுலசகாதரர்களை பொறுத்தவரை இருவருமே மருத்துவத்தில் சிறந்தவர்கள்

சல்லியன் இருவரையும் தன் அரியணை வாரிசாக அறிவித்தார் அவர் இவர்கள் குந்தியின் புத்திரர்கள் அல்லாததால் இவர்களை குந்தி சரியாக கவனிக்க மாட்டாள் ஆகையால் அஸ்தினாபுரம் விட்டு இங்கு வந்து அரசாளுங்கள் எனக்கூறினார் ஆனால் இவர்கள் அதை மறுத்து மாதாவை குறை கூறியதற்கு கண்டனம் தெரிவித்து மாதா குந்தியை பற்றி இவ்வாறு பேசாதீர்கள் என எச்சரிக்கை செய்தனர்

🌼 நகுலன்

🍁 தங்கத்திலான முதுகையுடைய சரப கொடி

🍁 விஷ்ணுவை தேவதையாக கொண்ட வைஷ்ணவ வில்

🍁 நகுலன் மிகுந்த அழகானவன் மேலும் குதிரை சாஸ்திரத்தை கிருஷ்ணரிடம் கற்றவன் ஆனால் அனைத்து விலங்குகளிடமும் பேசும் திறனை பெற்று இருந்தார்

🍁 வாள்வீச்சில் சிறந்தவன் மழை பெய்யும் போது குதிரையேறி கையில் வாளேந்தி செல்லும் போது விழும் ஒவ்வொரு துளியையும் வாளால் தடுத்து தன்மேல் ஒரு சொட்டு நீரும் படாது வெளிவரும் அளவிற்கு வாள்வீச்சில் சிறந்தவன்

🍁 நகுலனும் வரும்காலத்தை கூறுவான் ஆனால் மிகவும் அரிதாக மேலும் கூறியவுடன் மறந்தும் விடுவான் இவ்வாறே மரணத்தை நோக்கி யாத்திரை செல்லும்போதும் நாம் உச்சி போகும்வரை இருக்கமாட்டோம் என கூறுவான் அதுபோல யுதிஷ்டிரர் மட்டுமே செல்வார்

🌼 சகாதேவன்
🍁 வெள்ளிமயமான அன்னப்பறவையே கொடி

🍁 அஸ்வினி தேவர்களை தேவதையாய் கொண்ட அஸ்வின வில்

🍁 சாஸ்திரங்களில் வல்லவன்

🍁 கிருஷ்ணரின் செயல்களை புரிந்துகொள்வது இயலாத காரியம் என்றாலும் தூது செல்லும்போது கிருஷ்ணரின் செயலை தெரிந்து அவரை அன்பினால் கட்டி போட்டவன் தங்களின் எதிரி என்றாலும் துரியனுக்கு பூஜைக்குரிய நாளை குறித்து குடுத்தவன்

🍁 விராடனிடம் செல்லும்போது பத்து யோசனை தூரத்திற்குள் இருக்கும் பசுவின் காலத்தை அறிந்து என்னால் அறிய இயலும் என்கிறான் சகாதேவன் அவ்வகையில் மனிதர்களுக்கும் பொறுந்தும்

🍁 நகுலனுக்கு இணையான வாள்வீச்சு திறன் கொண்டவர் சாஸ்திரத்தில் உயர்ந்தவர் என்றாலும் வீரத்திலும் உயர்ந்தவராக கருதப்படுகிறார்

🍁 யுத்தத்திற்கு பின் யுதிஷ்டிரனின் அமைச்சராவார் பிரகஸ்பதியிடம் இருந்து நீதி சாஸ்திரத்தை பெற்ற இவர் பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் கூறியதை கொண்ட நீதி சாஸ்திர நூலை வடிவமைத்ததாய் கூறுவர்

🌼 பாண்டவர்களின் புதல்வர்கள்

🍁 கடோற்கசனின் கொடி கழுகு கொடி கிருஷ்ணருடையதும் கழுகு கொடியே என்றாலும் கடோற்கசனுடையது இரத்தம் தோய்ந்த கொடுறமாக காணப்படும் கழுகாகும்

🍁 புலஸ்தியரை தேவதையாக கொண்ட புலஸ்திய வில் இதுவே இராவணனின் வில் என கூறப்படுகிறது

🍁 கடோற்கசன் மாயத்தில் இந்த்ரஜித்திற்கு இணையாக கருதப்படுகிறார்

🍁 தங்கத்தால் ஆன மயிலை கொடியாய் கொண்டவன் அபிமன்யு பலராமர் வைத்திருந்த ருத்ர வில்லை பிரியத்துடன் அபிமன்யுவிற்கு கொடுத்தார்

🍁 வியாசர் அர்ஜுனனுக்கும் அரைமடங்கு கூடியவன் சுபத்ரா புத்ரன் என்கிறார்

🍁 உப பாண்டவர்கள் தங்களின் கொடியில் தங்களின் தாத்தாக்களான எமன், வாயு, இந்திரன் மற்றும் அசுவினி தேவர்களை கொடியாய் கொண்டனர்

🍁 பீஷ்மரால் மகாரதியென கருதப்பட்ட இவர்கள் முறையே ரௌத்ரம் {ருத்திரன்}, ஆக்னேயம் {அக்னி}, கௌபேரயம் {குபேரன்}, யமயம் {யமன்}, கிரிசம் {கிரிசன்} ஆகிய விற்களை ஏந்தினர்

👑 கர்ணன் அசுரனா? ?

👑 சகஸ்ர கவசன் ஆயிரம் கவசங்களை பெற்றவன் அவன் ஒரு கவசம் அறுக்காமல் மிஞ்சி இருக்கும் வேளையில் பிரம்ம பிரளயம் வர அடுத்த பிறவியில் அவனே கர்ணனாக பிறந்தான் இவ்வாறாக ஒரு கதை உள்ளது

👑 ஆனால் இது முற்றிலும் புனையப்பட்ட கதையே

🌼 இதுப்பற்றி அறிய நாம் ஆராய வேண்டிய விசயங்கள்

1. நர - நாராயண அவதாரம்
      சகஸ்ர கவசனை அழிக்கவே இந்த அவதாரம் நிகழ்ந்தது என எங்குமே கூறப்படுவதில்லை அவர்கள் அவதார நோக்கம் தர்ம ஸ்தாபனம் மட்டுமே துஷ்ட நிக்ரஹத்திற்கு அவதரித்தவர்கள் ஆனால் சகஸ்ர கவசனுக்காக அவதரித்தவர்கள் என்று இல்லை

2. சகஸ்ர கவசனுக்காக அவதாரம்
              அனைத்தும் அறிந்த பகவானுக்கு 1000 கவசம் அறுக்கும் முன் பிரளயம் வரும் என்று அறியாத ஒன்றா?

3.பிரம்ம பிரளயம்
               14 மன்வந்திரங்கள் அதாவது பிரம்மதேவரின் ஒரு பகலான கல்ப காலம் முடிந்த பின்னே பிரம்ம பிரளயம் வரும் இந்த பிரளயம் சிரஞ்சீவிகளுக்கே முடிவை தரும் ஒன்று

இவை இல்லாமல் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் பிரளயம் வரும் அதே போல் ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் தேவர்கள் முதல் சப்தரிஷிகளும் மாறுவர் அதாவது சூரியன் உட்பட

எனில் பிரளயம் ஏற்பட்டபோது எவ்வாறு சகஸ்ரகவசன் சூரியலோகத்தில் தஞ்சம் அடைந்து இருக்க முடியும்....?

4.மறுபிறப்பில் கவசத்துடன் பிறப்பு
                   முற்பிறப்பில் பெற்ற கவசத்துடன் ஒருவன் அடுத்த பிறப்பில் பிறப்பது என்பது நடவாத ஒன்று

காரணம் சகஸ்ர கவசன் பிரளயத்திற்கு அடுத்து நேராக பூமிக்கு வந்தானேயானால் இது சாத்தியமே ஆனால் அடுத்த பிறவியில் முன் பிறப்பில் கொண்ட கவசத்துடன் பிறப்பது என்பது அவதார புருஷர்களுக்கே நடக்கவில்லை

எனில் கர்ணனுக்கு எவ்வாறு கவசம் கிட்டியது? ??

அமிர்தம் கடையும் போது தோன்றிய பொருட்களில் அமிர்த கவசமும் ஒன்றாகும்

அக்கவசம் தேவர்களின் தாயான அதிதி தேவிக்கும் பிறகு சூரிய தேவருக்கும் செல்லும் சூரிய தேவர் கர்ணனின் பாதுகாப்பிற்காக இக்கவசத்தை அளிப்பார்

இவ்வளவு இருக்கையில் எவ்வாறு இக்கதை உண்மை என நான் அறியேன் மேலும் எந்த ஒரு புராணத்திலும் இக்கதை இல்லை

இவ்வாறு இருக்கையில் உண்மையில் கர்ணன் என்பவன் யார் இதற்கு விடை வியாச பாரத்தில் உள்ளது

வியாச பாரதத்தில் கர்ணனே சகஸ்ர கவசன் என்று ஒரு இடத்திலும் இல்லை

தம்போத்பவன் கதையே பாரத களத்தில் ஒரு முறை அதுவும் பரசுராமர் கூறுகிறார் ஆனால் கர்ணனே அந்த அசுரன் என்று இல்லை

கர்ணன் உண்மையில் சூரிய தேவரின் அம்சம்

இந்த உண்மை வியாச பாரதத்தில் வரும் இடங்கள்

1.முதன் முதலாக அனைவரை பற்றியும் அறிமுகம் செய்யும்போது வைசம்பாயனர் சொல்வார்

2.கர்ணன் இறந்தபின் அவரின் தேஜஸ் சூரியனில் கலக்கிறது

3.வனத்தில் வியாசர் திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி, யுதிஷ்டிரன் முதலியோர்க்கு கூறுவார்

4.யுதிஷ்டிரன் சொர்க்கம் சென்றபோது இந்திரன் கூறுவார்

5.இறுதியாக கர்ணன் சூரியனோடு இரண்டற கலக்கிறார் 

👑 பாரத போரில் பங்கெடுத்த பாண்டிய மன்னர்


👑 மகாரதி மலையத்துவச பாண்டியன்

🌼 மீனாட்சி தேவியின் தந்தையான மலையத்துவச பாண்டியன் வேறு இவர் வேறு

🌼 சாரங்கத்துவசன் என்பது இவர் பெயராகும் ஆனால் மலய பர்வதத்தின் பெயரால் இவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார் இவரை பற்றி குறிப்பிடும் போது மலய பர்வதத்தின் சந்தனத்தை பூசியவர் என குறிப்பிடப்படுகிறது மேலும் இராஜசூய யாகத்தின் போது கூட மலய பர்வதத்தின் அற்புத பொருட்களை பாண்டியன் தருவதாக உள்ளது இந்த மலய பர்வதமானது நமது குமரி கண்டத்தில் இன்றும் உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையோடு தொடர்ந்து இன்றும் கடலுக்கடியில் உள்ளது

🌼 குமரிகண்டம் பற்றி அனைவரும் அறிவர் மேலும் இடை சங்கமான கபாடபுரத்தில் இவரது பிதா ஆண்டு வந்தார். கிருஷ்ணர் கபாடபுரம் நோக்கி போர்தொடுத்து அவரை போரில் கொன்றதாய் குறிப்புகள் உள்ளன.

🌼 அக்காலத்தில் கபாடபுரம் கோட்டையை தாண்டி எவராலும் செல்லமுடியாது அந்த அளவிற்கு போர்த்திறம் கொண்டிருந்தனர் அக்கால பாண்டியர்கள் ஆனால் எக்காரணத்திற்காக கிருஷ்ணன் போர்தொடுத்தார் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை

🌼 ஆனால் பிதாவின் மரணத்திற்கு கிருஷ்ணரை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கும் பாண்டியனை ஆலோசனை கூறி தடுக்கின்றனர் அவனின் நண்பர்கள் மற்றும் அமைச்சர்கள் தடுக்கின்றனர் இங்கு துரியன் போன்று இல்லாமல் பாண்டியன் ஆலோசித்து போர்தொடுக்கவில்லை

🌼 ஆனால் பரசுராமர், பீஷ்மர், துரோணர், கிருபர் என அனைவரிடம் இருந்து அஸ்திரங்களை பெற்று ருக்மி, கர்ணன், அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணருக்கு இணையான வீரராகிறார்

🌼 இராஜசூய யாகத்தில் கிருஷ்ணனுக்கு முதன்மை மரியாதை செய்வதை கண்டித்த சிசுபாலன் கிருஷ்ணன் மேல் இருந்த பகையின் காரணமாக சிலரை கூறி அவர்களை விடவா கிருஷ்ணன் பெரியவன் என்று வாதிக்கிறான் அப்படி பட்ட சிலரில் பாண்டியனும் ஒருவர்

🌼 வீரர்களின் வரிசைப்பற்றி பீஷ்மர் கூறுகையில் பாண்டியன் ஒரு மகாரதி என்கிறார் அதாவது 7,20,000 பேரை ஒரே நேரத்தில் சமாளிக்க கூடியவர்

🌼 சஞ்சயன் கூறும்போது தனுர் வித்தையில் சிறந்தவரும் இந்திரனுக்கு இணையானவர் என்றும் கூறுகிறார்

🌼 வைடூரிய கற்கலாலான கவசத்தை உடையவர் அவருடைய குதிரை கூட வைடூரியங்களால் முழுவதும் மூடப்பட்டிருந்தது

🌼 துரோண வதத்தில் முக்கிய பங்காற்றினார் தன்னுடன் 1,40,000 பேர் கொண்ட படையை திரட்டிக்கொண்டு திருஷ்ட துய்மனுடன் சென்றார் துரோணருடன் வந்த படைகளை துவம்சம் செய்து தடுத்து நிறுத்தினார் கிட்டத்தட்ட ஜெயத்ரதன் பாண்டவர்களை தடுத்தது போல இதனால் துரோணரிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது எளிதானது

🌼 இதையறிந்த அஸ்வதாமன் திருஷ்டத்துய்மன் மீது கொண்ட கோபம் போல பாண்டியன் மீதும் தணியாத கோபம் கொள்கிறான்

🌼 சஞ்சயன் போரை விவரிக்கும்போது பாசக்கயிறு ஏந்திய எமன் போல கர்ணன் படையினை நாசம் செய்து பிரவேசித்தான் பாண்டியன் என்கிறார் மேலும் மேகங்களை வாயு கிழித்துக்கொண்டு செல்வது போல் பாண்டியன் செல்கிறான் என்றும் கூறுகிறார்

🌼 ஏற்கனவே பாண்டியன் மீது கோபம் கொண்ட அஸ்வதாமன் பாண்டினை எதிர்க்க வருகிறார்

🌼 அஸ்வதாமனுக்கும் பாண்டியனுக்கும் யுத்தம் தொடங்குகிறது. அஸ்வதாமனின் தேர்க்குதிரை பாண்டியன் கொல்கிறார் மீண்டும் குதிரைகளை அடையும் அஸ்வதாமன் ஆயிரம் பாணங்களை தொடுக்கிறார் அனைத்தையும் தடுக்கிறார் பாண்டியன்

🌼 சஞ்சயன் இதுப்பற்றி கூறும்போது எட்டு எட்டுக் காளைகள் கட்டின எட்டு வண்டிகள் சுமக்கும் அம்புகளை எல்லாம் அஸ்வதாமன் மூன்றே முக்கால் நாழிகையில் அதாவது 90 நிமிடத்தில் பாண்டியன் மீது பிரயோகித்தார் என்கிறார்

🌼 பாண்டியன் உடனான யுத்தத்தில் அஸ்வதாமன் கோபம் கொண்ட ஈசன் போல் இருந்தார் என பாண்டவ படை நினைக்கும் அளவிற்கு அஸ்வதாமன் செயல்பட்டார்

🌼 பிறகு அஸ்வதாமன் பாண்டியனின் தேர்க்குதிரைகள் மற்றும் சாரதியையும் கொல்கிறார் பிறகு பாண்டியன் யானைமீது ஏறி யுத்தம் செய்கிறார் அஸ்வதாமனின் கிரீடத்தை பிளக்கிறார் இதனால் கொதித்தெழும் அஸ்வதாமன் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்த பாண்டியனை வதைத்து தனது பழியை தீர்த்துக் கொள்கிறார்

😢 இவைகள் பாரத கதையில் உள்ளவையே இன்று சுருக்கப்பட்ட கதைகளால் பலர் அறியாமல் போய்விட்டது 

👑 உக்கிரவர்ம பாண்டியன் (முருக பெருமானின் திரு அவதாரம்)



🌼 பிரம்மதேவர் மதுரையம்பதியையும் கைலாயத்தையும் தராசில் வைக்க மதுரையம்பதியே சிறந்ததென அறிகிறார் இந்த மதுரை நகரில் மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் பிறந்தவர் மீனாட்சி தேவி

🌼 திக் விஜயத்தில் ஈசனின் மேல் காதல் கொண்டு அவரையே மணக்கிறார் மீனாட்சி தேவி

🌼 மீனாட்சி தேவி மற்றும் மாமியார் காஞ்சனமாலையின் வேண்டுகோளிற்கிணங்க ஈசனே சுந்தரேச பாண்டியனாக மதுரையை சிறிது காலம் ஆண்டு வருகிறார்

🌼 இதற்கிடையே தனக்கு பிறகு இந்த தேசத்தை ஆள வாரிசு இல்லையே என மீனாட்சி தேவி வருத்தம் கொள்ள அதை உணர்ந்த ஈசன் முருகப்பெருமானை மகனாக அவதரிக்க அறிவுறுத்துகிறார்

🌼 ஏறுமயில் ஏறி விளையாடும் முருகன் தாய் மீனாட்சி தேவியின் கருவிலிருந்து நிறைந்த திங்களில் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார்

🌼 மகனுக்கு உக்கிரவர்மன் என்ற பெயர் சூட்டுகின்றனர் மீனாட்சி தேவியும் சுந்தரேச பாண்டியனும்

🌼 பெயர்சூட்டு விழாவிற்கு தாய்மாமன் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராகவும் பிரம்மதேவர் சரஸ்வதி தேவியுடனும் வருகிறார்

🌼 தேவகுரு பிரகஸ்பதி குருவாகிறார் உக்கிரவர்மனுக்கு எட்டு வயதாகும் போது சகல கலையிலும் வல்லவனாகிறார் சுந்தரேச பாண்டியன் தனது மகனுக்கு பாசுபதாஸ்திரத்தை அளிக்கிறார்

🌼 16 வயது வந்தவுடன் தன் மகனுக்கு நல்லதொரு பெண்பார்த்து முடிக்க முடிவு செய்கின்றனர் பெற்றோர்கள். அதன்படி மணவூர் அரசன் சோமசேகரனின் மகள் காந்திமதியை உக்கிர பாண்டியனுக்கு மணமுடிக்கின்றனர்

🌼 தாங்கள் பூமிக்கு வந்த நோக்கம் முடிந்ததால் கைலாயம் செல்ல விரும்புகின்றனர் சுந்தரேசரும் மீனாட்சி தேவியும் இதை மகனிடம் கூறி மகனுக்கு பட்டாபிஷேகம் செய்கின்றனர்

🌼 உக்கிரவர்ம பாண்டியனை அழைத்து வேல், வளை மற்றும் செண்டு இம்மூன்றும் அளித்து பிற்காலத்தில் மதுரையம்பதியை காக்க பயன்படுத்து என அறிவுறுத்தி தாய் மீனாட்சி தேவியும் சோமசுந்தரரும் கோவியிலினுள் சிலையாகின்றனர் ( மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாறு இதுவே )

🌼 உக்கிர பாண்டியன் நல்லாட்சி செலுத்தி 96 யாகங்களை முடிக்கிறார் இதைக்கண்ட இந்திரன் உக்கிரபாண்டியனால் தன் பதவிக்கு ஆபத்து என எண்ணி வருணனை அழைத்து
  🌻 " ஈசன் மீனாட்சி தேவியின் தாய் காஞ்சனமாலையின் விருப்பத்திற்கிணங்க மதுரைக்கு வரவழைத்த ஏழுகடல்கள் அங்கு இருப்பதாகவும் அவற்றை பொங்கி எழச்செய்து மதுரையை இரவோடு இரவாக அழிக்க சொல்கிறான் "

🌼 உக்கிர பாண்டியனின் கனவில் வந்த ஈசன் அவருக்கு இதை தெரிவிக்கிறார் இதனால் பொங்கி வரும் கடல்களின் மீது உக்கிரபாண்டியன் தனது தந்தை அளித்த வேலை வீசுகிறார் இதனால் ஏழு கடல்களும் துளி நீரின்றி வற்றுகிறது
(இந்த இடம் இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலருகில் ஏழுகடல் தெரு என அழைக்கப்படுகிறது)

🌼 இதன்பிறகு சேர, சோழ பாண்டிய நாட்டிற்கு பஞ்சம் வந்தது இதனால் அகத்திய முனியின் ஆலோசனை படி மூவேந்தர்களும் சோமவார விரதத்தை பின்பற்றினர் இதன் பலனாக இந்திரன் விமானத்தை அனுப்பி மூவரையும் இந்திரலோகம் வரவழைத்தான்

🌼 சேர, சோழருக்கு விரதத்தின் பலனாக மழை பெய்விப்பதாக தெரிவித்த இந்திரன் உக்கிர பாண்டியனுக்கு முத்துமாலை ஒன்றை பரிசளிக்க விரும்புனான் உண்மையில் உக்கிரவர்மனை அவமதிக்கவே அந்த மாலையை இந்திரன் அளிக்க எண்ணினான்

🌼 காரணம் அந்த முத்துமாலை தனியொருவரால் அசைக்கவும் முடியாது இந்திரன் அதை எடுத்துவர கூறியவுடன் 10 பேர்க்கு மேல் அதை எடுத்து வருவர் ஆனால் அதை உக்கிரவர்ம பாண்டியன் இடது கையால் எடுத்து அழகாக அணிந்து கொள்கிறார்

🌼 சேர, சோழ நாட்டிற்கு மழை சரியாக பெய்கிறது ஆனால் இந்திரனின் செய்கையால் பாண்டிய தேசத்தில் மழை பெய்யவில்லை ஆனால் உக்கிரப்பாண்டியன் சோமவார விரதத்தை நிறுத்தாமல் கடைபிடித்தான்

🌼 இதற்கிடையில் உக்கிரபாண்டியன் வேட்டைக்கு செல்லும்போது இந்திரனின் ஏவல் ஏற்று மழை பெய்விக்கும் மேகத்தின் அதிபதிகளை காண்கிறார் இதனால் அவர்களை சிறைபிடிக்கிறார்

🌼 மேகாதிபதிகளை சிறைபிடித்ததால் இந்திரனே உக்கிர பாண்டியன் மீது போர்தொடுத்து வருகிறார் போர் மிகவும் உக்கிரமாக நடக்க இந்திரன் வேறு வழியில்லாமல் வஜ்ரத்தை பாண்டியன் மீது வீச உக்கிரவர்மன் ஈசன் அளித்த வளையை வீசுகிறார்

🌼 உக்கிரவர்மனின் வளை இந்திரனின் வஜ்ரத்தை தூளாக்கி இந்திரனின் கீரிடத்தை சாய்க்கிறது பிறகு உக்கிரவர்மன் இந்திரனை மனித்துவிடுகிறார் உலக நன்மைக்காக மேகாதிபதிகளை விடுவிக்க பாண்டிய நாட்டில் மும்மாரி பெய்கிறது

🌼 அடுத்த பிரச்சனை மேரு மலையின் மூலம் வருகிறது மேரு மலையின் அகங்காரத்தால் மேகங்கள் தடுக்கப்பட்டு மீண்டும் வறட்சியை சந்திக்கிறது மதுரையம்பதி வறட்சியினால் அரசின் கஜானா தீர்கிறது

🌼 இந்த வேளையில் ஈசன் உக்கிரவர்மனின் கனவில் தோன்றி மேரு மலையில் செல்வ குவியல் இருப்பதாகவும் அதை எடுத்துவந்தால் நல்லது எனக்கூற உக்கிரவர்மரும் அவ்வாறே செல்கிறார்

🌼 ஆனால் மேருமலையின் கர்வத்தால் உக்கிரவர்மரை எதிர்க்க உக்கிரவர்மர் ஈசன் அளித்த செண்டை வீசுகிறார் இதனால் கர்வம் அழிந்து செல்வத்தை அளிக்கிறது மேருமலை மேலும் மழையும் பெய்து வறட்சி நீங்குகிறது

🌼 இவ்வாறு பலகாலம் ஆண்ட உக்கிரவர்ம பாண்டியன் வீரத்திலும் ஞானத்திலும் தனக்கு நிகரான தனது மகன் வீரபாண்டியனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து சொக்கநாதரின் திருவடி நிழலில் கலந்தார்

🌺 மேற்கூறப்பட்டவை திருவிளையாடல் புராணத்தில் உள்ள தகவலின் சுருக்கம் மட்டுமே

👑தாய் மீனாட்சிதேவி, எம்பெருமான் ஈசன், மற்றும் முருகப்பெருமான் ஆட்சி செலுத்தி அவர்களின் வழிவந்தவர்கள் ஆண்ட புண்ணிய தேசம் தமிழகம்

Thursday, May 11, 2017

🌺 வாமன அவதாரம்


🌹 ராமபிரான் பிறந்த தினமான இன்று பகவானின் மற்றொரு அவதாரமான வாமன அவதாரம் பற்றி பதிவிடுகிறேன்

🌹 அஷ்டமி, நவமி திதிகள் பெருமாளிடம் தங்களை மக்கள் வெறுத்து ஒதுக்குவதாக கூற ராமர் நவமியிலும், கிருஷ்ணர் அஷ்டமியிலும் அவதரித்தனர் என்பது நமக்கு பலவற்றை உரைக்கிறது

🌹 ராமபிரான் அவதரித்த திரேதா யுகத்தில் நிகழ்ந்ததே வாமன அவதாரம்

🌹 பிரகலாதனின் மகனான பிரசோனனின் மகனே பலிச்சக்ரவர்த்தி, தாத்தா மற்றும் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்ததால் வேதம் கற்ற வித்தகனாய், ஞானியாய், பெரும் பக்தனாய் விளங்குகிறார் பலி

🌹 பிறகு அசுரகுருவான சுக்கிராச்சாரியரிடம் கல்வி கற்க செல்கிறார் பலி அவரிடம் அனைத்தையும் கற்று தேரும் பலி குரு ஆணையாலும் அசுர குலத்தின் நன்மைக்காகவும் தவம் செய்ய புறப்படுகிறார்

🌹 தவம் இருந்து பிரம்மாவை மகிழ்விக்கும் பலிச்சக்ரவர்த்தி பிரம்ம தேவரிடம் " அசுரர்களை கண்டு அனைவரும் அஞ்சிகின்றனர் இதனால் அரசனாய் இருந்தும் என்னால் நன்மை செய்ய முடியவில்லை அதனால் இந்திரனுக்கு சமமான நிலைவேண்டும் எனகேட்கும் இவர் யுத்தத்தில் எவராலும் வெல்ல முடியாத வரத்தையும் கேட்டு பெறுகிறார்

🌹 சுக்ராச்சாரியார் விக்ரஜீத் என்ற யாகத்தில் வில், குதிரை மற்றும் கணக்கற்ற ஆயுதங்களையுடைய பொன் ரதத்தை  பெற்றுத்தர பலிச்சக்ரவர்த்தி  மூவுலங்களையும் வெல்கிறார் தேவர்களையும் வென்று இந்திர பதவியை கைப்பற்றுகிறார் இதனால் பிரகஸ்பதியிடம் செல்கிறான் இந்திரன். பிரகஸ்பதியோ இதை திருமாலே பார்த்துக்கொள்வார் என்கிறார்

🌹 இதனால் மனவருத்தம் அடையும் தேவர்களின் தாயான அதிதி இதுப்பற்றி தனது கணவரான கசியப்பரிடம் கேட்க பங்குனி மாதத்தில் வெறும் பால் மட்டும் அருந்தி இருக்கும் விரதமான பயோ விரதத்தை கூறி இவ்விரதத்தை இருந்தால் உன் கஷ்டம் தீர்ப்பான் மாலவன் என்கிறார்

🌹 அதே போல் அதிதி தேவி 12 நாட்கள் விரதம் இருக்க 13 - ம் நாள் நாள் மாலவன் தோன்றி தாம் அவருக்கு மகனாய் தோன்றி அவர் மகன் இந்திரன் இழந்த லோகத்தை திரும்ப இந்திரனுக்கே தருவதாக ஆசி கூறி மறைகிறார்

🌹 இதனால் புரட்டாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் அவதரிக்கிறார். உபேந்திரன் என்ற பெயர் சூட்டினார்கள் ஆனால் குட்டையாக இருந்ததால் வாமனன் என்ற பெயர் பெற்றார்

🌹 பிரம்மா  வாமனனுக்கு  மான்தோல்   அளித்தார்.  வியாழ  பகவான்  பூணூலும், மரீசி  தண்டமும், வசிஷ்டர்  கமண்டழமும்  அளித்தார்.  ஆங்கீரசர் தர்ப்பை, ஆடைகள் கொடுத்தார்.  பிரணவத்துடன்  கூடிய தவங்கள் அவ்வாறே வந்தடைந்தன  பரத்துவாஜர்  அவருக்கு  உபநயனம் செய்வித்தார் பரத்வாஜரிடம் வாமனர்  அத்யயனம் செய்தார் ஆங்கீரசர் சாம வேதத்தையும் சங்கீதத்தையும் கற்பித்தார் என்று வாமன புராணம் கூறுகிறது

🌹 இந்திர பதவியை பெற்றதால் அது நிலைத்து இருக்க 100 அசுவமேத யாகங்களை நடத்துமாறு சுக்ராச்சாரியார் கூறுகிறார் இதனால் பலிச்சக்ரவர்த்தியும் அசுவமேத யாகங்களை செய்கிறார் யாகத்தை பொறுத்த வரையில் வேதம் கற்ற அந்தணர்களுக்கு வேண்டியவற்றை தானம் வழங்க வேண்டும்

🌹 பலிச்சக்ரவர்த்தி யாகம் நடத்திய இடத்திற்கு வருகிறார் வாமனர் அவர் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் வருவது சூரியனா இல்லை அக்னியா என்று சொல்லுமளவிற்கு அவரின் தேஜஸ் இருந்தது ஆனால் சுக்ராச்சாரியாருக்கு வந்து இருப்பவர் விஷ்ணுவே என்று தெரிந்துவிட்டது

🌹 யாகத்தில் பங்கெடுக்க வந்த வேதம் கற்ற அந்தணர்களின் கால்களை அரசன் கழுவுவது வழக்கம் அதனால் வாமனரின் பிஞ்சு கால்களை கழுவும் பலி அதனை தீர்த்தம் போல் தனது தலையிலும் தனது மனைவி தலையிலும் தெளிக்கிறான்

🌹 இதை கண்ட சுக்ராச்சாரியார் பலியை தனியாக அழைத்து வந்திருப்பவர் விஷ்ணு என்றும் அதனால் அவர் கேட்பதை தர வேண்டாம் என்று எச்சரிக்கிறார் ஆனால் பலியோ விஷ்ணுவே தன் யாகத்திற்கு அதுவும் தானம் கேட்க வந்து உள்ளார் என்றார் தான் எவ்வளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என பூரித்து நிச்சயம் தான் தரப்போவதாக தானம் தர செல்கிறார் பலிச்சக்ரவர்த்தி

🌹 வாமனரோ பலியிடம் தாம் யாகம் செய்ய போவதாகவும் அதற்கு தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என கேட்கிறார் இதைகேட்ட பலி தாம் பற்பல தேசங்களும் கேட்டாலே நான் தர தயாராக இருக்கிறேன் ஆனால் மூன்றடி நிலத்தை வைத்து என்ன செய்வீர்கள் எனக்கேட்கிறார்

🌹 ஆனால் வாமனரோ தனக்கு மூன்றடி நிலம் போதுமென்று கூறுகிறார் இதனால் கமண்டலத்தில் நீர் வார்த்து தானம் தர முயலுகையில் சுக்ராச்சாரியார் வண்டு ரூபமெடுத்து கமண்டலத்தின் பாதையை அடைக்கிறார் இதனால் வாமனர் தர்ப்பையை வைத்து குத்த சுக்ராச்சாரியாரின் கண் பறிபோகிறது

🌹 பலிச்சக்ரவர்த்தி நீர்வார்த்து தந்த மறுகணமே ஒங்கி வளர்கிறார் திரிவிக்ரமனாய் முதல் அடியில் ஏழு  மேலோகங்களையும் இரண்டாம் அடியில் கீழ் ஏழு லோகங்களையும் அளக்கிறார்

🌹 மூன்றாம் அடி எங்கு எனகேட்கையில் தன் தலையை மூன்றாம் அடியாக ஏற்க வேண்டும் என கூறிகிறார் பலிச்சக்ரவர்த்தி இதனால் அவ்வாறே செய்கிறார் திரிவிக்ரமர் பெருமாளின் பாதகமலம் பட்டதால் மேலும் புனிதத்துவம் பெறுகிறார் பலிச்சக்ரவர்த்தி

🌹 பலிச்சக்ரவர்த்தி அசுரகுலத்தில் பிறந்தாலும் உன்னதமானவர் உத்தமர் இதனால் அவருக்கு சிரஞ்சீவி நிலையினை அளிக்கும் பெருமாள் அவரை கீழ் லோகமான ஸ்தல லோகத்திற்கு அரசாள அனுப்புகிறார் அடுத்த மன்வந்திரத்தில் அவரே இந்திரன் பிறகு தனது தாத்தா பிரகலாதனை போல் பெருமாளை அடைவார் என்று ஆசி வழங்குகிறார் வாமனர் பிறகு பெற்ற லோகங்களை மறுபடியும் இந்திரனுக்கே வழங்குகிறார் யாகத்தை முடிக்காதவன் பெரும்பாவத்தையடைவான் என்பதால் யாகத்தை முறையாக முடித்துவிட்டு பாதாள லோகமான சுதல லோகம் சென்று ஆண்டு வருகிறார் பலிச்சக்ரவர்த்தி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

🌹 ஓரடியால் மேலோகங்களை அளந்தார் என்று கூறப்பட்டாலும் உச்சியில் இருக்கும் பிரம்மா வாழும் சத்திய லோகத்தில் கூட திருவிக்ரமனின் கால் கட்டை விரல் மட்டுமே இருந்தது எனில் தாமே யூகியுங்கள் திரிவிக்ரமனின் வடிவத்தை

🌹 தனது லோகத்தில் பதிந்த விஷ்ணுவின் கட்டை விரலுக்கு பிரம்மா தனது கமண்டலத்தில் உள்ள நீரால் அபிஷேகம் செய்கிறார் அதுவே கங்கை என்பது குறிப்பிடத்தக்கது

🌹 மற்ற அவதாரங்களை போல சம்கார நோக்கத்திற்காக எடுக்கப்படவில்லை என்பதால் வாமன அவதாரத்தை உத்தம அவதாரம் என்கின்றனர் இதனாலே ஆண்டாள் கூட " ஓங்கி உலகளந்த உத்தமன் " என்று பாடியுள்ளார்

🌹 மகாபலி கொண்ட ஆணவத்தை அடக்க பெருமாள் வாமன அவதாரம் புரிந்தார் என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்ல இந்திரனின் நிலையை காக்கவே அவர் அவதரித்தார் மேலும் பலி நற்குணங்கள் நிறைந்தவரானாலும் அவர் ஆட்சியில் தீய குணம் கொண்ட அசுரர்களின் கை ஓங்க துவங்கியது

🌹 பெருமாளே பலிச்சக்ரவர்த்தியின் பக்தியால் அவரின் வாயிற்காப்பாளனாக சென்றார் எனவும்

🌹 யுதிஷ்டிரரின் கர்வத்தை போக்க பலியிடம் கிருஷ்ணர் அவரை அழைத்து சென்றார் எனவும் இருக்கும் கதைகள் பலியின் உயர்ந்த குணத்தை காட்டுகின்றன

🌹 வாமன அவதாரம் இதற்காகவே எடுக்கப்பட்டது என விஷ்ணு புராணத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டாலும் வாமன புராணத்தில் விஷ்ணு வாமனராக வந்தது இரண்டாம் தடவை என்கிறது

🌹 வாமன புராணத்தின் படி ஏற்கனவே துந்து எனும் அரக்கனை அழிக்க வாமனராக பகவான் வந்துள்ளார் என்று கூறப்பட்டு உள்ளது

🌹 சிவ அவதாரி அஸ்வதாமன்



🌼 மாவீரன், நல்ல நண்பன் மற்றும் சிறந்த ஞானியும் கூட

🌼 ஆனால் இன்று பலரின் தவறான பார்வையால் கொடுமைக்காரன், பொறாமை குணம் மற்றும் பேராசைக்காரன் என்று சொல்லப்படும் உத்தமன்

🌼 சப்தரிஷியான ஆங்கிரசரின் வம்சத்தில் வந்தவர் பரத்வாஜர் அவருக்கு தேவர்களின் குருவான பிரகஸ்பதியே குரு துரோணராக அவதரிக்கிறார்

🌼 தனது மகனுக்கு கௌதமரின் வம்சத்தில் வந்த சரத்வானரின் புத்ரியும் ருத்ரர்களின் அவதாரமான கிருபரின் தங்கையுமான  கிருபியை மணமுடித்து வைக்கிறார்

🌼 துரோணரின் தவத்தினாலும் அவரின் முன்னோர்களின் புண்ணியத்தாலும் ஈசனிடம் சர்வேஸ்வரரே தனக்கு சிரஞ்சீவியாய் பிறக்க வேண்டும் என்ற வரத்தை பெறுகிறார் ஈசனும் வரம் அளிக்கிறார்

🌼 இதனால் ஈசனின் காமம் மற்றும் கோபம் அஸ்வதாமனாய் தலையில் மணியுடன் பிறக்கிறார் அந்த மணி இருப்பவருக்கு பசி, தாகம், வியாதி, சஸ்திரங்களினால் பாதிப்பு வராது மேலும் தேவர்கள் ,அசுரர்கள், நாகர்கள், ராட்சஸ கனங்களினால் தீங்கேதும் வராது

🌼 ஈசனின் கோபமே வடிவமாய் பிறந்ததால் அஸ்வதாமன் கோபம் கொண்டாரேயானால் அவரை தடுக்க எவரேலும் இயலாது

🌼 அஸ்வதாமனின் சிறுவயதில் வறுமை வாட்டுகிறது அனைத்து சிறுவர்களும் பால் குடிப்பதை பார்த்து அழுகும் தனது மகனுக்கு பால் கூட வாங்கித்தர இயலாத நிலை இந்நிலை எவருக்கும் வரக்கூடாது என பிற்காலத்தில் பீஷ்மரிடம் துரோணரே கூறியுள்ளார்

🌼 பால் வேண்டும் என அழும் சிறுவன் மாவுக்கரைசலை குடித்துவிட்டு தான் பால் அருந்திவிட்டதாக மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் கூறுகிறான் ஆனால் இதை கண்ட சிறுவர்கள் அஸ்வதாமனை கேலி செய்கின்றனர் இதை கண்ட துரோணரின் மனம் நோகுகிறார் உண்மையில் இந்நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாத நிலை

🌼 இந்நிலையில் தனது சிறு வயது நண்பனான துருபதனை தேடி செல்கிறார் துருபதன் சிறுவயதில் துரோணருக்கு பாதி ராஜ்யத்தையே தருவதாக கூறியவன் ஆனால் துரோணர் துருபதனிடம் வேண்ட நினைத்தது என்னவோ தனது மகனுக்காக ஒரு காராம் பசு மட்டுமே

🌼 ஆனால் உயிராய் பழகிய நண்பனே துரோணரை அவமதிக்கிறான் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஒருவனுக்கு அரசன் எப்படி நண்பனாவான் என்று ஏளனம் செய்கிறான் (ஒரு பசு தராமல் விட்ட துருபதனே பின்னாளில் துரோணரை அழிக்க பத்து கோடி பசுக்கள் அளித்து யாகம் செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது)

🌼 இதனால் மனம் நோகும் துரோணர் வேறு வழியில்லாமல் தனது மனைவியின் தமயனான கிருபர் வீட்டிற்கு செல்கிறார் மனம் நொந்ததால் அவர் யாரிடமும் பேசாமல் காலத்தை கழிக்கிறார் இந்த நேரத்தில் அஸ்வதாமன் தனது அடையாளத்தை மறைத்து கிருபரின் குரு குலத்தில் ஆயுதங்களை பற்றி விளக்குபவனாக வேலை பார்க்கிறார்

🌼 காலம் கணிந்து அஸ்தினாபுர இளவரசர்களுக்கு குருவாகிறார் துரோணர் ஆனாலும் துருபதனை நினைத்து வருந்துகிறார் இதனால் துருபதனை யார் எனக்காக வெல்வீர்கள் என கேட்கையில் மற்றவர்கள் சும்மா இருக்கையில் அர்ஜுனன் மட்டும் துரோணர் சொல்வதையெல்லாம் நிறைவேற்றுவதாய் வாக்களிக்கிறான்

🌼 காயத்தில் இருந்த துரோணருக்கு அர்ஜுனனின் வார்த்தைகள் மருந்தாக அவனை உச்சி மோந்து அஸ்வதாமனிடம் இவனை உன் நண்பனாக ஏற்பாய் என உரைக்கிறார் தந்தையில் மேல் அதிக பாசம் கொண்ட அஸ்வதாமன் அர்ஜுனனின் வார்த்தையில் மகிழ்ந்து அவனை அணைத்து கொள்கிறார் அப்போது ஆரம்பமாகிறது அர்ஜுனன் - அஸ்வதாமன் நட்பு

🌼 அர்ஜுனனுக்கு மட்டும் இல்லாமல் பீமன், துரியன் மற்றும் கர்ணனுக்கும் சிறந்த நண்பனாவார் அஸ்வதாமன் மேலும் தாய்மாமனான கிருபர் மேல் தந்தைக்கு இணையான பாசம் கொண்டு இருந்தார் கிருபரும் அவ்வாறே அஸ்வதாமனை தன் மகனாகவே பார்த்தார்

🌼 இளவரசர்களை தண்ணீர் எடுக்க அனுப்பும் துரோணர் அவர்களுக்கு வாய் குறுகிய பாத்திரத்தை குடுத்து தாமதமாக வர சொல்லுவார் ஆனால் அஸ்வதாமன் சிறிதுநேரத்திலே வந்து விடுவான் இதனால் அவனுக்கு பல இரகசியங்களை கற்று தருவார் இதை அறிந்த அர்ஜுனன் வருணாஸ்திரத்தால் பாத்திரத்தை நிரப்பி அஸ்வதாமனுடன் வந்து சேர்ந்து அவனும் அந்த கலைகளை கற்பான்

🌼 இதனாலும் அர்ஜுனனுக்கு இஷ்ட சீடனாக பற்பல வித்தைகள் அளித்ததாலும் அர்ஜுனன் மீது அஸ்வதாமன் பொறாமை கொண்டார் என்று பலர் கூறுகின்றனர் ஆனால் உண்மை அதுவல்ல அஸ்வதாமன் சிறிதும் பொறாமை கொல்லவில்லை ஒரு இடத்தில் இஷ்ட சீடனும் குருவிற்கு மகன் போன்றவன் என அஸ்வதாமரே உரைத்து உள்ளார்

🌼 கற்ற கலையை வெளிப்படுத்தும் இடத்தில் துரியனும் பீமனும் குரோதத்தினால் சண்டையிடுகின்றனர் இந்நிலையில் இவர்களை நிறுத்துவது சாதாரணம் இல்லை இருவரையும் பற்றியும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை அப்படி இருக்கும் போது இருவரின் ஒங்கிய கதாயுதங்களை வாயுவை மலை தடுப்பது போல் தடுத்து நிறுத்துகிறார் எனில் இவரின் பலத்தை அறியலாம்

🌼 பாண்டவர்கள் துருபதனை வென்றபிறகு பாஞ்சாலத்தின் பாதி தேசத்திற்கு அரசராகிறார்

🌼 பாண்டவர்களின் வனவாசத்தின்போது கிருஷ்ணரிடம் செல்லும் அஸ்வதாமன் அவரின் சுதர்சனத்தை குருசேத்திர யுத்தத்தில் வெல்ல கேட்கிறார் ஆனால் அவரால் சுதர்சனத்தை அசைக்கவும் இயலவில்லை இதனால் அஸ்வதாமனை பாராட்டும் கிருஷ்ணர் அவருக்கு நாராயணாஸ்திரத்தை தருகிறார்

🌼 விராட யுத்தத்தில் " வீரத்தினால் தேசமானது கைப்பற்றப்பட வேண்டும் வஞ்சகத்தால் அல்ல என்றும் அதோ வந்துவிட்டான் அர்ஜுனன் அவனின் காண்டீபம் பகடை காய்களை வீசாது துரியோதனா காண்டீபத்தின் அம்புகளுக்கு இன்று நீயும் சகுனியும் பதிலளித்தே ஆக வேண்டும்" என கோபம் கொள்கிறார் பிறகு பீஷ்மர் அஸ்வதாமனை தணித்து துரியனை காக்க வேண்டும் என சமாதானம் செய்கிறார் விராடயுத்தத்தில் கூட அர்ஜுனன் இரண்டு வற்றாத அம்புறாத்துணிகளை கொண்டவன் ஆனால் அஸ்வதாமனிடம் அம்புகள் தீர்ந்துவிடும் தோற்கமாட்டார்

🌼 ஆச்சாரியமான உண்மை என்னவெனில் அஸ்வதாமன் போரை விரும்பவில்லை மாறாக பீஷ்மர், துரோணர் போல துரியனுக்கு அறிவுரை வழங்கினார் பாண்டவர்களிடம் சமாதானத்தை பேசுமாறும் யுத்தம் நாசத்தையும் தருமென்றும் உரைத்தார்

🌼 பலர் அஸ்வதாமனாலேயே துரோணர் கௌரவர்கள் பக்கம் இருந்தார் என்று கூறுகின்றனர் ஆனால் துரோணர் அடைக்கலம் குடுத்ததற்காக அஸ்தினாபுரத்தின் பக்கம் நின்றார் தந்தைக்காகவே அஸ்வதாமர் கௌரவர் பக்கம் நின்றார்

🌼 வீரர்களை பற்றி விளக்கும் பீஷ்மர் அஸ்வதாமனை கணக்கிடமுடியாதவர் என்று உரைக்கிறார் ஒரே தேரில் மூவுலகத்தையும் எரிக்க வல்லவர் என்றும் 33 கோடி தேவர்களையும் யுத்தத்தில் தனி ஒருவரை வெல்வார் என்றும் உரைக்கிறார் இவர் கோபப்பட்டாரேயானால் இரண்டாம் சிவனை நீ காண்பாய் துரியோதனா!! இரு சேனையிலும் இவருக்கு நிகரானவர் இல்லை என்றும் கூறுவார்


🌼 கடோத்கஜன் மாயத்தில் சிறந்தவன் பகதத்தன் பீமனை எதிர்த்தான் என்பதற்காக அவனின் யானையையும் அவனையும் கொல்ல லோகங்களை தாங்கும் அஷ்டதிக்கஜங்களையே மாயத்தினால் கொண்டு வந்து எதிர்த்தவன் இது நடந்தது பகலில்

🌻 ஆனால் ஜெயத்ரதனை கொன்றதால் இரவிலும் தொடர்ந்த யுத்தத்தில் கடோற்கசன், அவனின் மகன் மற்றும் அரக்கப்படை மாயத்தினால் வெகுவாக கௌரவ படையை நாசம் செய்கிறது எவராலும் எதிர்த்து நிற்க முடியாத நிலையில் அஸ்வதாமன் அரக்க படையையும் கடோற்கசனின் மகனான அஞ்சனபர்வாவையும் கொல்கிறார்

🌻 இதனால் கோபம் கொல்லும் கடோற்கசன் அஸ்வதாமனை கொல்லாமல் விட மாட்டேன் என்று கிளம்புகிறார் ஆனால் அஸ்வதாமன் ஹிடும்பையின் புத்திரனே நீ எனக்கு புதல்வனுக்கு சமமாவாய் அதனால் சென்றுவிடு என எச்சரிக்கிறார் ஆனால் கடோற்கசனும் அவனின் படையும் மாய யுத்தத்தில் சண்டையிடுகின்றனர் படையையும் அழிக்கிறார் அஸ்வதாமன் ஆனால் கிருஷ்ணர் அழைத்ததால் கடோற்கசன் சென்றுவிடுகிறார்

🌼 அடுத்த நாள் யுத்தத்தில் கோபம் கொண்ட துரியன் அர்ஜுனனை நோக்கி செல்கிறான் இதை கண்ட கிருபர் அஸ்வதாமனிடம் துரியனை காக்குமாறு கூறுகிறார் அப்போது துரியன் காக்க வரும் அஸ்வதாமனிடம் நீ தனியாக பாண்டவ படையை அழிக்கும் சக்தி கொண்டவன் ஆனால் நீயும் உன் தந்தை போல பாரபட்சம் காட்டுகிறாய் என குற்றம் சுமத்துகிறான் துரியன் ஆனால் அதை மறுக்கும் அஸ்வதாமன் துரியனிடம் அனைவரையும் சந்தேகிக்காதே துரியா அனைவரும் உனக்காக உயிரையும் குடுக்க யுத்தகளம் புகுந்தோம் என எடுத்துரைக்கிறார்

🌼 துரோணரின் வதத்தை கேட்ட அஸ்வதாமன் பெரும் துயருற்றார் "மகன் இறந்தான் என்று பொய் கூறி ஒரு தந்தையை வேதனையில் விழச்செய்து அவர் ஆயுதத்தை துறந்து தவம் செய்கையில் கொல்ல பட்டார் என்பதை தந்தை மீது உயிரையே வைத்து அஸ்வதாமன் கேட்ட போது பெரும் கோபம் கொண்டார்

🌼 துரோணரின் வதத்தினால் சிதறி ஓடிய படை மீண்டும் புது உற்சாகத்துடன் வருவதை பார்த்த யுதிஷ்டிரர் அர்ஜுனனிடம் என்ன இது இவர்களின் உற்சாகத்திற்கு காரணம் யார்? ? என கேட்கிறார்

🌼 அதற்கு அர்ஜுனன் மகாரதிகளுள் சிறந்தவர் மூவுலகையையும் ஜெயிக்கும் திறன் கொண்ட குருபுத்திரரான அஸ்வதாமனே காரணம் என்கிறார் பின் கிருஷ்ணர் அஸ்வதாமனை தற்போது வெல்லுவது நடவாது என்கிறார்

🌼 அப்போது அஸ்வதாமனை எவராலும் வெல்ல முடியவில்லை திருட்டதுய்மனை கொல்லும் நேரத்தில் பீமன் காப்பான் இல்லையேல் அப்போதே திருட்டத்துய்மன் மரணித்து இருப்பார் அப்போது மட்டும் நான்கு மகாரதிகளை கொல்வார் மேலும் பீமன், சாத்யகி முதற்கொண்டு எவராலும் அஸ்வதாமனை வெல்ல இயலவில்லை

🌼இந்த சமயத்தில் கிருஷ்ணரிடம் பெற்ற நாராயணாஸ்திரத்தை பாண்டவ சேனையின் மீது விடுகிறார்
 நாராயணாஸ்திரமானது படையின் மீது பிரயோகிக்கப்படுமேயானால் படையில் எத்தனை பேர் உள்ளனரோ அத்தனை அஸ்திரமாக மாறி ஒவ்வொருவரின் சக்திக்கு ஏற்ப அவர்களை வதைக்கும் சக்தியை ஒவ்வொரு அஸ்திரமும் பெறும்

 🌻 இந்த அஸ்திரத்தை தடுக்க இயலாது ஆனால் சரணடைந்தால் மட்டும் தப்பிக்க இயலும் ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு மனதால் எதிர்த்தாலும் கூட 14 லோகங்களில் எங்கு சென்றாலும் இந்த அஸ்திரம் விடாது

🌼 இதை கிருஷ்ணர் அறிவார் அதனால் அனைவரையும் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு வணங்க சொல்லுவார் அனைவரும் அவ்வாறே செய்வர் ஆனால் பீமன் மட்டும் ஆயுதத்துடன் நிற்பான் ஒரு வழியாக கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் பீமனை அவன் ஆயுதத்தை பிடுங்கி சமர்ப்பணம் செய்ய வைத்து காப்பர்

🌼 பின்னர் அக்நேய அஸ்திரமானது அஸ்வதாமனால் விடப்படும் ஆனால் அர்ஜுனன் பிரம்மாஸ்திரம் கொண்டு தடுத்து விடுவான்

🌼 இதனால் விரக்தி அடையும் அவர் சோகத்தில் வில்லை போட்டுவிட்டு செல்கிறார் அப்போது வியாசர் தோன்றி கிருஷ்ணார்ஜுனர்கள் நர-நாராயணர்கள் அவர்களை வெல்ல இயலாது என்கிறார்

🌻 கர்ணனையும் சல்லியனையும் சேனாபதியாக்க கூறியது அஸ்வதாமரே

🌼 துச்சாதனன் கொல்லப்பட்ட பிறகு கூட யுத்தத்தை விட சொல்லி துரியனை வேண்டுகிறார் துரியோதனனிடம்
" தனஞ்செயன் நான் தடுத்தால் நிற்பான்

கிருஷ்ணரும் விரோதத்தை விரும்பவில்லை

யுதிஷ்டிரனும் இந்த நாசத்தை விரும்பவில்லை

பீமன் மற்றும் நகுல சகாதேவர்கள் யுதிஷ்டிரனுக்கு கட்டுப்பட்டவர்களே

ஆதலால் பாண்டவர்களின் இராஜ்யத்தை அவர்களுக்கு அளித்துவிடு நீயும் கர்ணனும் பல ஆண்டுகள் ஆட்சிபுரிந்து நல்வாழ்வு வாழ வேண்டும் " என உரைக்கிறார் ஆனால் துரியன் கேட்கவில்லை

🌼 கடைசியாக துரியன் தொடை பிளக்கப்பட்டு கொல்லப்படுகிறான் கிருபர்  கிருதவர்மா மற்றும் அஸ்வதாமன் மூவர் மட்டுமே மிஞ்சினார் இதனால் அஸ்வதாமரை சேனாதிபதியாக்குகிறார் துரியன் அதர்ம வழியில் கொல்லப்பட்டதால் கிருபர் பலமுறை கூறியும் அஸ்வதாமன் கேளாமல் இரவு நேரத்தில் கூடாரத்தை தாக்க செல்கிறார்

🌻 ஆனால் கிருஷ்ணர் இதை அறிந்து இருப்பார் என்றே தோன்றுகிறது காரணம் அவர் பாண்டவர்களை இன்று இரவு ஓகவதி நதிக்கரையில் மங்களத்திற்காக தங்குங்கள் என்று கூறி வெற்றி செய்தியை கூற சாத்யகியோடு  அஸ்தினாபுரம் சென்றார்

🌼 இரவில் கூடாரத்தினுள் புகுந்த அஸ்வதாமன் தனது தந்தையை கொன்றவரான திருட்டதுய்மனை மார்பில் மிதித்து எழுப்புகிறார் பிறகு நடந்த யுத்தத்தில் அவனை கொல்கிறார் இதனால் அனைவரும் விழிக்கின்றனர் பிறகு சிகண்டி மற்றும் பாண்டவர்களின் புத்திரர்களை கொல்கிறார்

🌼 18 நாள் யுத்தத்தில் துரியனின் தரப்பில் இருந்த படைகள் முழுவதும் அழிந்தன ஆனால் பாண்டவர் தரப்பில் 700 யானைகள், 2000 ரதங்கள், 5000 குதிரைகள் (இவை மூன்றிலும் இருந்து யுத்தம் செய்பவர்களின் கணக்கீடு) மற்றும் 16,000 காலாட் வீரர்கள் மீதம் இருந்தன ஆனால் அஸ்வதாமனால் இவையனைத்தும் சிறிது நேரத்தில் அழிக்கப்பட்டது இதை துரியன் இறக்கும் முன்னர் அவனிடம் சொல்கிறான் அஸ்வதாமன்

🌼 திருட்டத்துய்மனின் சாரதி தப்பி பிழைத்து இந்த செய்தியை பாண்டவர்களுக்கு சேர்க்கிறார் இதனால் கிருஷ்ணர் மற்றும் பாண்டவர்கள் அஸ்வதாமனை தேடி செல்கின்றனர்

🌼 பீமன் தன்னை கொல்ல வருவதை கண்ட அஸ்வதாமன் 4 பிரம்மாஸ்தித்திற்கு இணையான பிரம்மசிரா அஸ்திரத்தை பாண்டவர்களை நோக்கி விடுகிறார் இதனால் அர்ஜுனனும் அதை எதிர்த்து பிரம்மசிரா அஸ்திரத்தை விடுகிறார்

🌼 இரு பிரம்மசிரா அஸ்திரமானது நேருக்கு நேர் மோதுமானால் சிருஷ்டியே அழிந்துவிடும் இதனால் நாரதர் மற்றும் வியாசர் தோன்றி இருவரையும் அஸ்திரங்களை பின்வாங்க சொல்கிறார் அர்ஜுனன் பின்வாங்குகிறார்

🌼 அஸ்வத்தாமனுக்கு பின்வாங்க தெரியாது என்று கூறுகின்றனர் ஆனால் உண்மை அதுவல்ல பிரம்மசிரா அஸ்திரத்தை பின்வாங்குவது சாதாரணம் இல்லை அர்ஜுனன் மனத்திடம் கொண்டு இருந்தான் ஆனால் அஸ்வத்தாமன் குழப்பத்தில் இருந்ததால் அவரால் திரும்பி அழைக்க முடியவில்லை இதனால் அதன் இலக்கை உத்தரையின் கர்ப்பத்திற்கு மாற்றுகிறார்

🌼 உத்தரையின் கருவில் இருந்த குழந்தை இதனால் அழிகிறது இதனால் கிருஷ்ணர் அஸ்வதாமனுடன் பிறந்த மணியை வாங்குகிறார் அதனால் உண்டான காயம் ஆறாது எனவும் எவரும் அஸ்வதாமனுக்கு அன்போ சகாயமோ அளிக்க மாட்டார்கள் எனவும் உடல் துர்னாற்றம் எடுத்து 3000 வருடம் காட்டில் திரிவாய் என சாபம் அளிக்கிறார்

🌼 ஆனால் வியாசர் கிருஷ்ணர் சொன்ன நிலை உலகம் உள்ளவரை நீடிக்கும் என சபிக்கிறார் அஸ்வதாமனால் கொல்லப்பட்ட சிசுவை கிருஷ்ணர் உயிர்ப்பிக்கிறார்

🌼 அஸ்வதாமன் ஒருவனால் எவ்வாறு அத்தனை பேரை கொல்ல முடிந்தது என யுதிஷ்டிரன் வினவ கிருஷ்ணர் அஸ்வதாமன் சிவ ரூபி ஆதலால் இது சாத்தியமாயிற்று என்று கூறுகிறார்

🌼 இன்று பலரும் அஸ்வதாமனை பார்த்ததாக கூறுகின்றனர் அவருக்கு விமோசனம் கல்கி பகவானால் கிட்டும் என்பது நம்பிக்கை

🌼 விஷ்ணு புராணத்தில் அஸ்வதாமனே அடுத்த வியாசர் என்றும் அடுத்த மன்வந்திரத்தில் அவரே சப்தரிஷிகளுள் ஒருவர் என்றும் கூறப்பட்டுள்ளது

👑 அஸ்வதாமன் பாண்டவர்களை கொல்லவே சென்றார் ஆனால் அவர்கள் இல்லாததால் மற்றவர்களை போரிட்டு கொன்றார்

👑 பாண்டவர்கள் மீது விட்ட அஸ்திரத்தை வேறு வழி இல்லாமலே பரிட்சித் மீது திருப்பினார் மேலும் அதற்கான தண்டனையும் பெற்றார்

🌷சிரஞ்சீவிகள் 🌺



🌹பல அசுரர்களும் வேண்டி நின்ற வரம் இது இன்றும் பலரை இவ்வாறு நமது பெரியோர்கள் ஆசிவழங்குவதை பார்த்து உள்ளோம்

🌹சிரஞ்சீவி என்ற நிலையினை அடைவது சாமான்யம் அல்ல அவர்களை பற்றி இன்று பார்ப்போம்

🌹அஸ்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹனுமான்ச விபீஷண:
க்ருப: பரசுராமஸ்ச சப்தைதே சிரஜீவின:

🌹மேற்கண்ட ஸ்லோகத்தை பலர் அறிவர் இந்த ஸ்லோகமானது அஸ்வத்தாமா, பலிச்சக்ரவர்த்தி, வியாசர், அனுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர், ஆகிய ஏழுபேரும் சிரஞ்சீவிகள் என கூறுகிறது

🌹இந்த ஸ்லோகமானது புராணங்களில் இருப்பதாய் தெரியவில்லை ஆனால் சமஸ்கிருதத்தில் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது

🌹சிரஞ்சீவிகள் இத்தனை பேர் தான் என்றால் இங்கே மார்க்கண்டேயரை காணவில்லை என்று தேடியபோதே கண்டேன் மேற்கூறிய ஸ்லோகமானது நாம் இருக்கும் இந்த சதுர்யுகத்தில் உள்ளவர்கள் மட்டுமே

🌹ஆம் வாமன அவதாரம், பரசுராமர் மற்றும் ராம அவதாரம் என மூன்று அவதாரங்களுமே திரேதா யுகத்திலும் கிருஷ்ணவதாரம் துவாபார யுகத்திலும்  நிகழ்ந்தவையே என குறிப்புகள் உள்ளன மேற்கூறிய ஏழு பேரும் இந்த நான்கு அவதாரங்களுடனும் சம்பந்த பட்டவர்களே

🌹வாமன அவதாரம் திரேதா யுகத்தில் தான் நடந்தது இதை பலரும் அறியோம்

🌹இராவணன் பலிச்சக்ரவர்த்தியிடம் யுத்தம் செய்ய முடிவெடுத்து சென்றதும்

🌹பலியின் மூத்த மகனான பாணாசுரனிடம் கிருஷ்ணர் யுத்தம் புரிந்ததும் வாமன அவதாரம் திரேதா யுகத்தில் நடந்ததே என்பதை காட்டுகின்றன

🌹இவர்கள் பிரம்மாவின் ஒரு பகலாக கருதப்படும் கல்ப காலம் வரை உயிரோடு இந்த பூமியில் இருப்பர்

🌹மேற்கண்ட ஸ்லோகத்தின்படி இவர்கள் சிரஞ்சீவி என்றால் இங்கு மார்க்கண்டேயர் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுகிறது

🌹நான் முன்பே கூறியது போல நாம் வாழும் இந்த சதுர்யுகத்திலே ஏழு பேர் சிரஞ்சீவிகள்

🌹நாம் வாழும் நமது சுவேத வராக கல்பத்தில் இதற்கு முன் 453 சதுர்யுகங்கள் கடந்துவிட்டன அதாவது 1812 யுகங்கள் தாண்டி அடுத்த சதுர்யுகத்தில் நாம் இருக்கிறோம் எனில் யுகத்திற்கு ஒருவர் சிரஞ்சீவி என்று நாம் எடுத்துக்கொண்டாலும் தற்போது 1812 சிரஞ்சீவிகள் உள்ளன

🌹இங்கு முதல் மன்வந்திரத்தில் பிறந்தவரே மார்க்கண்டேயர் எனக்குறிப்புகள் கூறுகின்றன அவ்வகையில் மொத்தம் ஏழு பேர் அல்ல பற்பல சிரஞ்சீவிகள் இங்கு உள்ளனர் ஆனால் இதுப்பற்றி நாம் அறியோம்

🌹முக்காலமும் உணர்ந்த நாரதருக்கு என சில கடமைகள் இருப்பதுபோல இவர்களுக்கு என சில வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன

🌹பலிச்சக்ரவர்த்தி அடுத்த இந்திரன், அஸ்வதாமன் அடுத்த வியாசர் மேலும்  பரசுராமர், அஸ்வதாமன், கிருபர், வியாசர் ஆகியோர் அடுத்த மன்வந்திரத்தில் சப்தரிஷிகள் என்பதும் இதற்கு ஆதாரம்


🌹ஆனால் மேற்கூறிய ஏழுபேரில் விபீஷணர் சிரஞ்சீவி என ஆனதற்கு காரணம் அறியவில்லை சில இடங்களில் அவருக்கு பதிலாக பிரம்மதேவரின் அவதாரமான ஜாம்பவான் சொல்லப்பட்டு உள்ளார்

🌹ராமாயணத்தில் இலங்கை அரசனாக முடிசூட்டப்படும் விபீஷணர் மகாபாரதத்திலும் இலங்கையின் அரசனாகவே இருந்துள்ளார்

🌹இராஜசூய யாகத்திற்கு தென்திசை நோக்கி படையெடுத்து வரும் சகாதேவன் கடோற்கசனை விபீஷணரிடம் தூது அனுப்புகிறான் அவனுக்கு தக்க மரியாதை அளித்து விவரம் கேட்கிறார்

🌹அப்போது ராஜசூயம் நடத்த கூறியது கிருஷ்ணர் என்பதை அறிந்தவுடன் கப்பங்கட்டுவதாய் கூறிய விபீஷணர் பல அறிய பரிசுப்பொருட்களை தருகிறார் அனுமந்தர் மற்றும் ஜாம்பவானிடம் சந்திப்பு நிகழ்ந்ததை போல விபீஷணரிடம் கிருஷ்ணரின் சந்திப்பு நிகழ்ந்து இருக்க வேண்டும்

🌹பலிச்சக்ரவர்த்தியை பொறுத்தவரை அசுர குலத்தில் பிறந்தாலும் தர்ம பாதையில் செல்பவர் இதனாலே அடுத்த இந்திரனாக மாறும் பாக்கியம் பெற்றார்

🌹இவரது மகன் பாணாசுரன் தந்தையை மிஞ்சிய தனயனாய் இருக்கிறார் இவர் பூதவுடலுடன் சிவபெருமானின் கைலைக்கு சென்று அவருடன் வாழும் பேறு பெற்றார் ஒரு வேளை பூமியில் இருந்து இருந்தால் அவரும் சிரஞ்சீவியே

🌹மேற்கூறியவர்கள் இல்லாமல் சந்திர வம்சத்தை சேர்ந்த தேவாபி என்ற அரசனும்

🌹சூரிய வம்சத்தை சேர்ந்த மரு என்ற அரசனும் கூட நம்மிடையே உள்ளனர் கலியின் கொடுமையை அடக்கப்போகும் கல்கி பகவான் பூமியை இவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வைகுண்டம் செல்வார் பிறகு சத்ய யுகம் தொடங்கும் என கல்கி புராணம் கூறுகிறது

🌹சிரஞ்சீவி எனப்போற்றப்படும் அனைவருமே சிறந்த பக்தர்களும் கூட (அஸ்வதாமனும் கூட)

🌹இவர்களை நாம் நினைத்தாலே புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம் மேலும் நாம் பயம் கொல்லும் இடங்களில் இவர்ளை நினைத்தால் அவர்கள் நம்மை காப்பார்கள் என முன்னோர்கள் கூறியுள்ளனர்

🌹 கந்தபுராணம் 🌼



🌹 தட்சனின் யாகத்திற்கு சென்றதால் தேவர்களின் சக்தி குறைந்து இருந்தது இந்த சமயத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணினார் அசுரகுரு சுக்ராச்சாரியார் இதனால் 66 கோடி அசுரர்களில் மூத்தவனான அசுரேந்திரன் மகள் சுரஸிடம் கசியப்பரை மயக்கி பிள்ளைகள் பெறுமாறு ஆலோசனை கூறுகிறார்

🌹 இந்த சுரஸானவள் சுக்ரரிடம் மாயத்தை கற்று அதில் சிறந்து விளங்கியதால் மாயை என்ற பெயர் பெற்றாள் பிரம்மாவின் பேரனான கசியப்பரே இந்த மாயத்தை நிகழ்த்த மாலவனால் மட்டுமே முடியும் என சொல்லும் அளவிற்கு

🌹 அவர்கள் அழகு பொருந்திய தேவர் மற்றும் அப்சரஸாக மாறி சேர்ந்த போது பத்மாசுரனும் சிங்கமாக மாறியபோது ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகாசுரனும் யானையாக மாறியபோது தாரகனும் ஆடை மாறி சேர்ந்தபோது அசமுகியும் இவை இல்லாமல் இரண்டு லட்சம் வடிவங்களில் மாறி சேர்ந்ததால் இரண்டு லட்சம் பிள்ளைகள் பிறந்தன இவர்கள் பிறக்கும்போது வெளிவந்த வேர்வையில் இருந்து ஆயிரக்கணக்கான அரக்கர்கள் பிறந்தனர் சூரபத்மன், சிங்கமுகாசுரன் மற்றும் கஜமுகாசுரன் பிறந்த போது வந்த வியர்வையில் ஜெனித்தவர்கள் மட்டுமே 200 ஆயிரம் வெள்ள அசுரர்கள் எனில் மற்றவர்கள் பிறக்கும்போது தோன்றியவர்களின் எண்ணிக்கையை யூகிக்கலாம்

🌹 மாயை மற்றும் சுக்ராச்சாரியாரின் அறிவுரைப்படி ஈசனை மகிழ்வித்து 1008 அண்டங்களையும் 108 யுகம் ஆள்வாய் என்ற வரம் பெற்றனர் ஆனால் சூரன் தங்களின் சக்தியால் மட்டுமே மரணம் என்ற வரத்தை கேட்டு பெற்றான் இந்த வரத்தால் விஷ்ணு மற்றும் பிரம்மாவினால் கூட வெல்ல முடியாத நிலையை அடைந்தனர் மாயையின் புத்திரர்கள்

🌹 பற்பல தூரமுடைய ரதங்கள் மற்றும் நினைத்தவுடன் எங்கும் செல்லும் திறன்கூட அவர்களுக்கு இருந்தது இதனால் 1008 அண்டங்களையும் வென்று அதற்கு பிரதிநிதிகளை நிர்ணயித்து கடலுக்கு நடுவில் வீரமகேந்திரபுரம் என்னும் நாடை அமைத்து ஆண்டு வந்தான் சூரபத்மன்

🌹 ஈசானம் தவிர அவன் வெல்லாத லோகம் இல்லை பொதுவாக அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் ஆகாது இதனால் தேவர்களை சிறைபிடித்தான் சூரன் இந்திரன் ஓடி மறைந்தான் இதனால் அவனது மகனான ஜயந்தனை சிறைபிடித்தான்

🌹 சிவனின் மைந்தனால் மட்டுமே சூரனை கொல்ல முடியும் ஆனால் சிவனோ தவத்தில் இருந்தார் சக்தி தேவியோ தட்சனின் யாகத்தில் உயிர்விட்டு பார்வதியாய் பிறந்து ஈசனை நோக்கி தவம்புரிந்து கொண்டு இருந்தார் இதனால் பிரம்மா முதலானோர் ஈசனின் தவத்தை கலைக்க மன்மதனை அனுப்புகின்றனர்

🌹 வந்தது யார் என பார்க்க ஈசனின் கண் சிறிதளவே திறக்க மன்மதன் சாம்பலாய் போகிறான் இதனை இன்றும் காம தகனம் என பல இடங்களில் கொண்டாடப்படுகிறது பின்பு சிவனுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடக்கிறது

🌹 ஈசனிடம் இருந்து தோன்றிய தீச்சுவாலையை வாயு மற்றும் அக்னி சரவண பொய்கையில் சேர்க்க அறுவராய் பிறந்த முருகனை பார்வதி தேவி ஒருவராக்குகிறார்

🌹 இவ்வாறு ஈசனிடம் இருந்து தீப்பொறி தோன்றியபோது பார்வதி தேவி அஞ்சி நகர்கிறார் அப்போது அவர் ஆபாரணங்களில் இருந்து விழுந்த நவரத்தினங்களும் நவதேவிகளாக அவர்களுக்கு பிறந்தவர்களே வீரபாகு முதலிய ஒன்பது பேர்

🌹 காலம் கணிந்த போது சிவபெருமான் 2000 வெள்ள சேனையுடன் சூரனின் கொடுமை அடக்க முருகனுக்கு ஆணையிடுகிறார் தாய் பார்வதியிடம் வேல் வாங்கி ருத்திரர்களையே படைக்கலமாக்கி  போர்தொடுத்து செல்கிறார் வேலவன்

🌹 சூர பத்மன் வீரத்தில் சிறந்தவன்

நல்ல மனமுடைய சிங்கமுகாசுரன் ஆயிரம் தலை கொண்டவன்
கஜமுகாசுரனோ அனைத்து லோகங்களையும் வென்றவன் இவர்கள் பிறக்கும்போது உருவாகிய அசுரர்களின் எண்ணிக்கையை முன்பே குறிப்பிட்டு உள்ளேன்

🌹 சூரனுக்கு சேஷனின் மகள் பதுமகோளையிடம் இருந்து நான்கு பிள்ளைகள் மேலும் அவன் கவர்ந்த தேவலோக கன்னிகளிடம் இருந்து 3000 மகன்கள் இவர்களில் பானுகோபன் சிறந்த வீரத்தையுடையவன் இவன் வயதில் முருகனுக்கும் இளையவன் ஆதலால் இவனை கொல்லும் பொறுப்பை வீரபாகுவிடம் அளித்தார் கந்தன்

🌹 இவனுக்கு இப்பெயர் வர காரணம் பெயர் வைக்காத குழந்தையாக இவன் தொட்டிலில் உறங்கி கொண்டு இருந்தபோது சூரிய கதிர்கள் இவன்மேல் விழ கோபமடைந்த குழந்தை சூரியனை சிறைபிடித்து தனது தொட்டிலின் அடியில் கட்டி விட்டு மறுபடியும் உறங்குகிறான் இதனால் சூரியனை சிறைபிடித்தவன் என்ற பொருளுடைய பானுகோபன் என்ற நாமம் பெற்றான்

🌹 கந்தனின் படை கஜமுகாசுரனை வெல்கிறது ஆனால் கிரவுஞ்சம் என்ற மலைவடிவில் உள்ள அசுரனின் உள் செல்லும் கஜமுகாசுரனை தொடர்ந்ததால் கந்தனின் படைகள் மூர்ச்சையாகின்றனர் பிறகு கந்தனின் வேல் மலையை பிளந்து அவனையும் கொல்கிறது

🌹 பிறகு சிங்கமுகாசுரனையும் கொல்கிறார் கந்தன்

🌻 சிங்கமுகாசுரனை பொறுத்தவரையில் நல்ல மனம் கொண்டவன் ஆனால் தமயனை காக்க மண்ணில் வீழ்ந்தார்  பலமுறை தமயனுக்கு அறிவுரை வழங்கினார் வந்திருப்பது சிவனே என்று ஆனால் சூரன் ஏற்கவில்லை அவனின் விதி அவனை இழுத்து சென்றது

🌹 ஆனால் சூரனையே வாகனமாக ஏற்ற கார்த்திகேயன் சிங்கமுகாசுரனை தனது சிம்ம வாகனமாக ஏற்றார் என சில இடங்களில் உள்ளது

🌹 சூரனின் அனைத்து மகன்களையும் வீரபாகு கொல்கிறார் இதனால் பானுகோபன் யுத்தகளம் வந்து முருகனுடன் போரிட்டு தோற்கிறார் இதனால் சூரனே யுத்தகளம் போக எண்ணுகையில் பானுகோபன் முன் சென்று வீரபாகுவால் மடிகிறான்

🌹 எண்ணிலடங்கா வீரர்கள் மற்றும் தனது சொந்தங்கள் கந்தனின் படைகளால் அழிக்கப்பட்டதால் சூரனே யுத்தகளம் புகுகிறார் வரமாக பெற்ற அனைத்து ஆபத்தான ஆயுதங்களும் முருகபெருமானுக்கு முன் செயல் இழக்கின்றன

🌹 இதனால் மாய யுத்தம் புரிகிறான் சூரன் சிவனின் மைந்தனிடம் பலிக்கவில்லை கடைசியாக மாமரமாக மாறி நிற்கிறான் இறுதியாக முருகபெருமானின் வேலுக்கு இரையாகிறான் சூரன் ஆனால் ஈசனின் மைந்தன் சூரனை தனது மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் ஏற்கிறார்

🌹 சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்த முருகனை அடைய அவரின் தாய்மாமனான விஷ்ணுவின் இரு கண்களில் இருந்து தோன்றியவர்களே அமுதவல்லி மற்றும் சுந்தர வல்லி

🌹 இவர்களை திருவிளையாடல் புரிந்து மனம் புரிகிறார் முருகப்பெருமான்


🌹 படையில் வெள்ளம் என்பதன் விளக்கம்

http://muthurama007.blogspot.in/2017/04/5-3-1-1-1.html?m=1


🙏🙏🙏மேற்கூறியது வெறும் சுருக்கமே

நன்றி