Wednesday, April 26, 2017

நமது இதிகாசங்கள் மற்றும் கந்த புராணத்தில் உள்ள படை அளவுகள் பற்றிய பதிவு இது



5 காலாட்கள், 3 குதிரைகள், 1 தேர், 1 யானை, சேர்ந்தது 1 பத்தி.

3 பத்தி ஒன்று சேர்ந்தது 1 சேனாமுகம்.

3 சேனாமுகம் ஒன்று சேர்ந்தது 1 குல்மம்.

3 குல்மம் ஒன்று சேர்ந்தது 1 கணம்.

3 கணங்கள் ஒன்று சேர்ந்தது 1 வாகினி.

3 வாகினி ஒன்று சேர்ந்தது
1 பிருதனை.

3 பிருதனை ஒன்று சேர்ந்தது
1 சழூ

3 சழூ ஒன்று சேர்ந்தது
1 அனீகினி.

10 அனீகினிகள் ஒன்று சேர்ந்தது
1 அக்ரோணி

8 அக்ரோனி ஒன்று சேர்ந்தது
1 ஏகம்

8 ஏகம் ஒன்று சேர்ந்தது
1 கோடி

8 கோடி ஒன்று சேர்ந்தது
1 சங்கம்

8 சங்கம் ஒன்று சேர்ந்தது
1 விந்தம்

8 விந்தம் ஒன்று சேர்ந்தது
1 குமுகம்

8 குமுகம் ஒன்று சேர்ந்தது
1 பதுமம்

8 பதுமம் ஒன்று சேர்ந்தது
1 நாடு

8 நாடு ஒன்று சேர்ந்தது
1 சமுத்திரம்

8 சமுத்திரம் ஒன்று சேர்ந்தது
1 வெள்ளம்

எனில் ஒரு அக்ரோனி என்பது

21,870 - யானைகள் மற்றும் தேர்கள்
65,610 - குதிரைகள்
1,09,350 - காலாட் வீரர்கள்

ஒரு வெள்ளம் என்பது

29353261711360 - யானைகள் மற்றும் தேர்கள்
88059785134080 - குதிரைகள்
146766308556800 - காலாட் வீரர்கள்

மகாபாரதம்

பாண்டவர்கள் பக்கம் 7 அக்ரோனிகளும்

கௌரவர்கள் பக்கம் 11 அக்ரோனிகளும் இருந்தன

இராமாயணம்

ராம பிரானின் பக்கம் 70 வெள்ளமும்

இராவணனின் பக்கம் 1000 வெள்ளமும் இருந்தன

கந்தபுராணம்

முருகப்பெருமானின் பக்கம் 2000 வெள்ளமும்

சூரபத்மன் மற்றும் அவனது தம்பிகளின் படைகள் சேர்த்து மொத்தம் 200000 வெள்ளமும்(இவைகள் சூர பத்மன் மற்றும் அவன் தம்பிகள் பிறந்த போது உருவானவர்களே இது இல்லாமல் பலர் துணை நின்றனர்) இருந்தன

👑 சிவ-தனுசு, விஷ்ணு-தனுசு மற்றும் பிரம்ம-தனுசு



🌺 கன்வ முனிவர் பரமபிதா பிரம்மதேவரை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார் நீண்ட காலம் அசையாமல் தவம் இருந்ததால் அவரின் மேல் மண் புற்று வளர்ந்தது இதனால் அவரின் தலையிலேயே ஒரு மூங்கில் முளைக்க துவங்கியது கன்வரின் தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர் அவர்முன் தோன்றி வேண்டிய வரத்தை அளித்தார்

🌺 அவரின் பார்வையில் கன்வரின் மேல் வளர்ந்த மூங்கில்கள் சாமான்யமாக தெரியவில்லை காரணம் கன்வமுனியின் கோர தவம் அவ்வாறு இதனால் அவரின் தலைமேல் வளர்ந்த மூங்கில்கள் பெரும் சக்தி கொண்டவையாக இருந்தன

🌼 இதனால் பிரம்மதேவர் அந்த மூங்கிலில் பெரும் சக்தி கொண்ட பிநாகம் மற்றும் சாரங்கம் என்ற இரு விற்களை உருவாக்கி ஈசன் மற்றும் விஷ்ணுவிடம் வழங்கினார்

🌻 பிநாகத்தை ஏந்தியதால் ஈசன் பிநாகபாணி என்றும்

🌻 சாரங்கத்தை ஏந்தியதால் விஷ்ணு சாரங்கபாணி என்றும் அழைக்கப்படுகின்றனர்

🌼 இவ்விரண்டு விற்களும் எப்போதும் ஈசன் மற்றும் விஷ்ணு கையிலேயே இருக்கும்

<< மேற்கூறிய கதை மஹாபாரதத்தில் அநுசாசன பர்வத்தில் பார்வதி தேவியின் சந்தேகத்திற்கு ஈசனே கூறிய விடையாகும் >>

🌺 ஆனால் இராமாயணத்தில் தேவேந்திரன்,  ஈசன் மற்றும் விஷ்ணு இருவரில் யார் வில் வித்தையில் சிறந்தவர் என அறிய பிரம்மதேவரிடம் செல்கிறான் பிரம்மதேவர் இதன் பின்விளைவு அறிந்தும் தேவேந்திரனுக்கு புத்தி புகட்ட இரு பெரும் சம சக்தி கொண்ட தனுசை உருவாக்கி இருவரிடமும் தருகிறார் இதனால் இருவருக்கும் யுத்தம் மூள்கிறது

🌺 இவர்களின் யுத்தம் நீடித்தால் சிருஷ்டிக்கே ஆபத்து வரும் என யுத்தத்தை நிறுத்துகின்றனர் ஆனால் யுத்தத்தில் ஈசனின் தனுசு சேதம் அடைகிறது

🌺 யுத்தம் முடிந்த பிறகு இவ்விரு விற்களும் ஜனகரின் முன்னோருக்கும் மற்றும் பரசு ராமரின் முன்னோருக்கும் செல்கின்றன

🌻 அதாவது பகவான் விஷ்ணுவின் தனுசு பரசுராமரின் தாத்தாவான ரிச்சக முனிவருக்கும்

🌻 சிவபெருமானின் தனுசு வருணன் மூலமாக ஜனகரின் முன்னோரான தேவரதருக்கும் செல்கின்றன

🌺 இராமபிரானால் சுயம்வரத்தின் போது சிவ தனுசு உடைக்கப்படுகிறது இதனால் கோபம் கொள்ளும் பரசுராமர் விஷ்ணு தனுசில் நாணேற்ற சவால் விடுக்கிறார்

🌼 நாணேற்றிய இராமனில் பகவான் விஷ்ணுவையே காண விஷ்ணு தனுசை இராமரிடம் தருகிறார் ஆனால் அந்த தனுசை உபயோகிக்காது வருணனிடம் அதை பத்திரமாக பாதுகாக்க சொல்லி தருகிறார் இதே தனுசு பிற்காலத்தில் கிருஷ்ணருக்கு நரகாசுர வதத்தின் போது கிட்டுகிறது

🌺 கிருஷ்ணர் இதை சால்வ யுத்தத்திலும் பாணாசுர யுத்தத்திலும் மட்டுமே பயன்படுத்தியாக தெரிகிறது பிறகு பூமியை விட்டு செல்லும் வேளையில் இத்தனுசு மீண்டும் வருணனிடம் பாதுகாப்பாக வைக்க தரப்படுகிறது

<< இக்கருத்தை வைத்து பார்த்தால் ஈசன் மற்றும் விஷ்ணுவின் கையில் இருக்கும் விற்கள் பூமிக்கு வரவில்லை அவர்களுக்காக உருவாக்கப்பட்டு அவர்கள் உபயோகித்த பின் இவ்விற்களே பூமிக்கு வந்தன  >>

👑 பக்தியினால் கிடைத்த விற்கள்

🌺 இராவணன் மகன் மேகநாதனிற்கு ஈசனின் பிநாகத்திற்கு இணையான வில்லும்

🌺 விதுரர்க்கு மகாவிஷ்ணுவின் சாரங்கத்திற்கு இணையான வில்லும்

பக்தியினால் கிட்டியது

🌼 மேகநாதன் தவத்தில் ஈசனை மகிழ்வித்து பிநாகத்திற்கு இணையான வில்லை பெற்றான் இவ்வில் அஷ்ட நாகங்கள் அதாவது 8 பாம்புகள் (அனந்தன், வாசுகி, தக்ஷகன்  கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன்) இணைந்து உருவாக்கப்பட்ட வில் இந்த அஷ்ட நாகங்களின் விஷம் கொடியது மேலும் இவை அஷ்டமும் அஷ்ட அக்னியை கக்கும் வல்லமை பெற்றவை இதனால் இதிலிருந்து ஏவப்படும் அம்புகள் பிநாகத்தின் கணைகளுக்கு இணையாகின்றன

🌼 விதுரர் பக்தியில் விஷ்ணுபகவானை மகிழ்வித்ததால் விஷ்ணுபகவானே சாரங்கத்திற்கு இணையான கோவர்த்தனம் என்ற பெயருடைய வில்லை பரிசாக அளித்தார் இவ்வில்லை ஏந்தி தர்ம தேவதையான விதுரர் போரிட்டால் ஈசன் மற்றும் விஷ்ணுவை தவிர மற்றோரால் வெல்ல இயலாது இதனால் விதுரர் போரிட்டால் கிருஷ்ணரே ஆயுதம் ஏந்த வேண்டும் இக்காரணத்தால் கிருஷ்ணர் தந்திரத்தால் விதுர வில்லை விதுரரே உடைக்கும்படி செய்து விடுவார்

👑 பிரம்மவில்-காண்டீபம்

🌼 கன்வமுனிவர் தவத்தில் விளைந்த மூங்கிலில் இரு விற்களை செய்தபின் மீதமிருந்த மூங்கில்களில் தர்மத்தை காக்க பிரம்மதேவர் செய்த வில்லே காண்டீபம்

🌼 இதை முறையே பிரம்மதேவர், ஈசன், பிரஜாதிபதி, இந்திரன், சந்திரன், வருணன், அர்ஜுனன் ஆகியோர் ஏந்தியுள்ளனர் (ஆனால் ஈசன் அர்ஜுனனிடம் நீ நரனாய் இருக்கும்போது ஏந்திய வில்லே இது எனக்கூறுவார்)

🌼 108 நாண்களை கொண்ட இந்த தனுசின் கடைசி நாணை எந்த அஸ்திரத்தாலும் அறுக்க இயலாது


👑 கோதண்ட வில்

🌼 இது இராமபிரான் உபயோகித்த வில் ஆனால் இது ஏதோ சக்தி கொண்ட வில் அல்ல சாதாரண வில் மட்டுமே

🌼 பின்பு எவ்வாறு சக்திவாய்ந்தது என்றால் அதை ஏந்தும் கரம் இராமபிரானுடையது இராமபிரான் போன்ற சர்வோத்தமன் இல்லை என்பது உண்மை

🌼 எந்த இராமன் கால் பட்டதால் கல்லாய் இருந்த அகலிகை பெண்ணாய் மாறினாலோ அவ்வாறு அந்த ராமன் ஏந்திய வில் சக்தி பெற்றது என்பதே நிதர்சனம்

🌼 ஆனால் இராமபிரான் கையிலேந்திய வில்லை மிஞ்ச ஒரு தனுசும் இல்லை தர்மவழி நடந்து அதர்மத்தை வேரறுத்த உத்தமனின் தனுசின் சக்தி நிகரற்றது 

🌺 அதியற்புத மகாஸ்திரங்கள்



💮 பாசுபத அஸ்திரம்

🌼 சிவபுராணம் பிரம்மன் முதல் தாவரம் வரை அனைவருமே பசுக்கள் என்று கூறுகிறது இவர்களுக்கெல்லாம் தேவனாய் இருப்பதால் பசுபதி என்ற பெயர் ஈசனுக்கு உண்டு

🌼 பசுபதிநாதரின் அஸ்திரம் பாசுபதம் இது ஈசன் மற்றும் காளிக்கு தனிப்பட்ட அஸ்திரமாகும் இவ்வஸ்திரத்தை ஈசனிடம் இருந்து நேரடியாக மட்டுமே பெற முடியும் முருகப்பெருமான், சூரனின் குடும்பத்தினர், பரசுராமர், ராமபிரான், மேகநாதன், மற்றும் அர்ஜுனன் பெற்று இருந்ததற்கான சான்றுகளே உள்ளன இந்த அஸ்திரத்தை இந்திரன், எமன் கூட அறியமாட்டார்கள் என ஈசனே அர்ஜுனனிடம் கூறியுள்ளார்

🌼 இவ்வஸ்திரம் பெறவேண்டுவாயின் மாவீரனாக இருப்பது அவசியம் இராமபிரான் பெரும்போதும் சரி அர்ஜுனன் பெரும்போதும் சரி ஈசன் தோன்றி வீரத்தை பரிசோதித்தே அளித்துள்ளார்

🌼 இதை தனியாக ஒருவர் மீது விடும்போது அவரின் திறன் மிக முக்கியம் காரணம் இவ்வஸ்திரத்தை சக்தி குறைந்தவர் மீது பிரயோகித்தோமானால் சிருஷ்டியையே நாசம் செய்துவிடும். அர்ஜுனன் ஜெயத்ரதன் மீது பாசுபதத்தை விட்டார் என பலர் சொன்னாலும் உண்மை அதுவல்ல ஒரு வேளை அவ்வாறு விட்டு இருந்தால் சிருஷ்டியையே பாதித்து இருக்கும்

🌼 கந்தபுராணத்தில் சூரனின் மகன் பானுகோபன் மற்றும் வீரபாகு ஒருவர் மீது ஒருவர் ஏவிக்கொள்கிறார்கள்

  🌻--- இதனால் முருகப்பெருமான் மற்றும் சூரனும் கூட இவர்கள் சண்டையினால் சிருஷ்டிக்கு பாதிப்பு வருமோ என்று ஐயமுறுகிறார்கள்

  🌻--- கடைசியில் சிருஷ்டியின் நலனுக்காக இருவரும் பின்வாங்குகின்றனர்

🌼 இதுவே பாசுபதம் ஒரு படையின் மீது ஏவப்படுமேயானால் படையில் ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப பலதரப்பட்ட நச்சுகொண்ட சக்தி வாய்ந்த பற்பல தலைகள் கொண்ட உயிரினங்கள் முதல் மலைகள், கடல்கள், தேவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், அசுரர்கள், யட்சர்கள், ஆவிகள், பூதங்கள் வரை அனைத்தும் தோன்றி படையினரை அழித்து ஒழிப்பார்கள்

 🌻--- கந்த புராணத்தில் சூரன் முருகப்பெருமான் படையின் மீது பாசுபதத்தை ஏவ ஈசனின் கனங்களையே வீழ்த்தும் நச்சு கொண்ட உயிரினங்கள் தோன்ற முருகப்பெருமான் அதை தனது பாசுபதம் வைத்து தடுக்கிறார்

 🌻--- பாரதத்தில் மிதக்கும் நகரமான அசுரர்களின் ஹிரண்யபுரத்தின் மீது அர்ஜுனன் பாசுபதத்தை விடுகிறார்

 🌻--- இங்கு வாழும் அசுரர்கள் மொத்தம் 60,000 பேர்கள் அனைவருமே பெரும் வீரர்கள் பாசுபதத்தில் இருந்து தோன்றிய ஜீவன்கள் அவர்களை அழித்தொழித்தது

🌼 கந்தபுராணத்தின்படி ஒருவர் ஈசனை மனதார பூஜித்து இருக்கும் வேளையில் அவரின் மேல் பாசுபதத்தை விட்டால் அது ஈசனிடமே சென்றுவிடும்

💮 நாராயணாஸ்திரம்

🌼 நாராயணரின் அஸ்திரம் நாராயணாஸ்திரம் இதையும் விஷ்ணு பகவானிடம் இருந்து நேரடியாக பெற வேண்டும்

🌼 பாசுபதம் போலவே இந்த அஸ்திரமும் தனியாக ஒருவர் மீது பிரயோகிக்க அவரின் சக்தி முக்கியம் இல்லையேல் சர்வ நாசம் நிச்சயம்

🌼 அதே போல் படையின் மீது ஏவப்பட்டால் படையில் உள்ள ஒவ்வொருவரின் சக்தியை பொறுத்து அவர்களை அழிக்கும் அளவிற்கு சக்திகொண்ட அஸ்திரங்கள் தோன்றும்

 🌻--- அதாவது ஏவப்பட்டவுடன் படையில் எத்தனை பேர் உள்ளனரோ அத்தனை அஸ்திரமாக பிரியும்

 🌻--- பிறகு ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப அவர்களை அழிக்கும் அஸ்திரமாக மாறும் சாமான்யர்கள் என்றால் சாமான்ய அம்புகளாகவும் அதே அவரை அழிக்க அக்னி அஸ்திரம் தான் வேண்டுமென்றால் அக்னி அஸ்திரமாகவும் மாறும்

🌼 முழு சமர்ப்பணம் செய்தால் அன்றி வேறு வழியில்லை உடலால் சமர்ப்பணம் செய்து மனதால் துளி எதிர்த்தால் கூட பதினான்கு லோகங்களில் எங்கு சென்றாலும் இந்த அஸ்திரம் விடாது

🌼 பாரதத்தில் அஸ்வதாமன் இதை பிரயோகித்த போது கதாயுதங்கள், சக்கரங்கள், கத்திகள், முதல் தெய்வீக சக்திகொண்ட அஸ்திரங்கள் வரை தோன்றியது கிருஷ்ணரின் அறிவுரையால் அனைவரும் சமர்ப்பணம் செய்ததால் தப்பி பிழைப்பர்

👑 << பாசுபதம் மற்றும் நாராயணம் இவை இரண்டுமே ஒத்த சக்தியுடையவை. ஒன்றில் எதிரியின் சக்திகொப்ப ஜீவன்களும் மற்றொன்றில் எதிரியின் சக்திகொப்ப அஸ்திரங்களும் தோன்றும் மேலும் பக்தியினால் இவை இரண்டையும் தடுத்துள்ளனர்

அதே போல் இரண்டையும் அம்புகளால் மட்டும் இல்லை மனம் மற்றும் கண்ணால் கூட செலுத்த முடியும் (மற்ற அஸ்திரங்களை மனத்தாலோ இல்லை கண்ணாலோ ஏவ இயலாது)

 இவ்விரு அஸ்திரங்களில் ஒன்றை ஒருவர் பெற்றாலும் அவர் தேவருக்கும் மேலானவராக கருதப்படுகிறார் காரணம் இந்த அஸ்திரங்களையும் பெறுவது சாமான்யம் இல்லை சிவன் அல்லது விஷ்ணுவை மகிழ்வித்து பெற வேண்டும்>>

💮 ருத்ர அஸ்திரம்

🌼 இவ்வஸ்திரம் 11 ருத்ரர்களின் சக்தியை பெற்றதாகும் சிவபெருமானே அன்றி வேறு எவராலும் தடுக்க முடியாத அஸ்திரமாகும் இது

🌼 சிவகவசத்தை ருத்ர அஸ்திரம் கொண்டே செயலிழக்க செய்ய முடியும் வேறு அஸ்திரங்கள் கொண்டு பிளக்க இயலாது

🌼 சிவகவசம் இந்திரனை காக்க ஈசன் அளித்த கவசமாகும் பாரதத்தில் துரோணர் மற்றும் அர்ஜுனன் இக்கவசத்தை பூட்டும் மந்திரம் அறிவர் ஜெயத்ரதனை கொல்ல அர்ஜுனன் வருகையில் துரோணர் இதை துரியனுக்கு பூட்டி அவனை காப்பார்

💮 வைஷ்ணவ அஸ்திரம்

🌼 பகவான் விஷ்ணுவின் அஸ்திரம் இது விஷ்ணுவை தவிர வேறு எவராலும் தடுக்க முடியாத அஸ்திரமான இது பகவான் விஷ்ணுவின் சக்தியை கொண்டது

🌼 தாய் பூமா தேவி தன் மகன் நரகாசுரன் மற்றவர்களால் பாதிக்காமல் இருக்க இவ்வஸ்திரத்தை  வேண்டுவார்

🌼 எவரானலும் ஏன் தேவர்களே ஆனாலும் அழித்துவிடும்

💮 மகேஷ்வர அஸ்திரம்

🌼 ஈசனின் நெற்றிக்கண் சக்தியே மகேஷ்வர அஸ்திரம் ஆகும்

🌼 14 லோகங்களையும் கண் சிமிட்டும் நேரத்தில் பஸ்பமாக்க வல்லது

🌼 இதை பெறுவதற்கும் ஈசனை மகிழ்விக்க வேண்டும் தேவாதி தேவர்கள் ஏன் சில கடவுள்களை கூட பஸ்பமாக்க வல்லது

🌼 இந்த அஸ்திரத்தை ஈசனின் அஸ்திரம் மற்றும் விஷ்ணுவின் அஸ்திரம் கொண்டு தடுக்கலாம் என்ற குறிப்பு உள்ளது (ஆனால் எந்த அஸ்திரம் என்று இல்லை)

💮 பிரம்மாண்ட அஸ்திரம்

🌼 பிரம்மாஸ்திரம் எந்த ஒரு திவ்ய அஸ்திரத்தை தடுக்க வல்லது மேலும் இதன் சக்தியும் அளப்பறியது

  🌻--- பிரம்மதேவரின் ஒரு தலையின் சக்தியை பிரம்மாஸ்திரம் ஆகும்

  🌻--- அதேபோல் பிரம்மதேவரின் நான்கு தலைகளின் சக்தியை பெற்ற அஸ்திரம் பிரம்மசிரா

  🌻--- பிரம்மதேவரின் ஐந்து தலைகளின் சக்தி கொண்டதே பிரம்மாண்ட அஸ்திரம்

🌼 இந்த பிரம்மாண்ட அஸ்திரம் பிரபஞ்சத்தையே அழிக்க வல்லது

🌼 இதை பாசுபதம் மற்றும் நாராயணாஸ்திரம் கொண்டு தடுக்கலாம்

🌼 இதைவிட பிரம்ம அம்புகள் என்றொரு சஸ்திரம் உண்டு இதில் பிரம்மதேவரின் முழு சக்தியும் அடங்கியுள்ளது இதை பிரம்மாஸ்திரத்தின் தலைவரான அகஸ்தியர் மற்றும் இராமபிரானை தவிர வேறு எவரும் அறியார்

  🌻--- இராவணனின் வயிற்றிலுள்ள அமிர்தத்தை வற்ற வைத்து இராவணனை வதைக்க இராமபிரான் இதையே செலுத்தினார் என்று கூறப்படுகிறது

💮 ஓம்கார அஸ்திரம்

🌼 மும்மூர்த்திகளின் சக்தியாக கருதப்படுகிறது இந்த அஸ்திரம்

🌼 இதைப்பற்றிய குறிப்புகள் அதிகம் கிட்டவில்லை ஆனால் ஒருவேளை  பிரணவத்தின் சக்தியாக இருக்க வேண்டும்

💮 பிரம்ம தண்டம்

🌼 இது சப்தரிஷிகள் உருவாக்கியது சஸ்திர வகையை சார்ந்தது

🌼 விஸ்வாமித்ரரின் பாசுபதம், நாராயணாஸ்திரம் மற்றும்  பிரம்மாஸ்திரத்தையே வசிஷ்டர் பிரம்ம தண்டத்தை வைத்து தடுத்து விடுவார் எனில் இதன் சக்தியை நீங்களே யூகிக்கலாம்

🌼 நாம் இருக்கும் ஏழாவது மன்வந்திரத்தின் சப்தரிஷிகளில் பரத்வாஜரும் ஒருவர் இவ்வகையில் துரோணருக்கு இந்த பிரம்ம தண்டம் கிடைக்கும் ஆனால் அவர் அதை பிரயோகிக்க என்னுகையில் சப்தரிஷிகளால் தோன்றாமல் போகும்

💮 தர்மம் எனும் அஸ்திரம்

🌼 இராவணன் மகன் மேகநாதன் பெரும் வீரன் மற்றும் மாயாவி நிகும்பலா யாகம் நடத்தி விட்டால் மேகநாதனை வெல்வது நடவாது ஒன்று

🌼 நிகும்பல யாகம் நடத்திய பிறகு அதிலிருந்து தேர் மற்றும் குதிரைகள் வெளிப்படும் அந்த தேரை பிரம்மசிரா அஸ்திரம் கொண்டு மேலும் சக்தியை கூட்டி ஒரே நாளில் 6,700 லட்ச வானரங்களை வதைத்தெரிந்தவன்

🌼 லட்சுமணனுக்கும் மேகநாதனுக்கும் நடந்த கடைசி யுத்தம் அது

  🌻--- பிரம்மதேவரின் பிரம்மாண்ட அஸ்திரத்தை லட்சுமணன் மீது விடுகிறார் மேகநாதன் ஆனால் அதி சக்திவாய்ந்த அவ்வஸ்திரம் லட்சுமணனை தொடகூட செய்யாமல் பிரம்மதேவரிடம் சென்றடைகிறது

   🌻--- இதனால் அடுத்து சிவபெருமானின் மகாஸ்திரமான பாசுபதத்தை விடுகிறார் மேகநாதன் ஆனால் அதுவும் அவ்வாறே தொடகூட செய்யாமல் சிவபெருமானை அடைகிறது

   🌻--- பிறகு விஷ்ணு பகவானின் அஸ்திரமான வைஷ்ணவ அஸ்திரத்தை விட அவ்வற்புத அஸ்திரமோ லட்சுமணனை தீண்டாமல் இருந்ததோடு லட்மணனை வலம் வந்து சென்றுவிட்டது

🌼 காரணம் தர்மத்தை ஸ்தாபிக்க மட்டுமே இந்த மஹா அஸ்திரங்கள் பயன்படும்

🌼 அதாவது சிருஷ்டியின் அச்சாரமே தர்மம் ஆகும்

👑 இக்காரணங்களால் தர்மம் எனும் அஸ்திரமே அனைத்தையும் விட சக்தி வாய்ந்தது 😇😇