கர்ணன் தனக்கு கிருஷ்ணனை போன்ற சாரதி வேண்டும் என்று கேட்டதால் துரியன் சல்லியனிடம் வேண்டுகிறான்
திரிபுராசுரர்களை அழித்த கதை மற்றும் பரசுராமரின் கதையை சொல்லி வாசுதேவரை எடுத்துக்காட்டியும் சல்லியன் கர்ணனுக்கு சாரதியாக இருப்பது சரியே என விளக்குகிறார்
அதற்கு சல்லியனோ ஒரு வேளை அர்ஜுனன் கொல்லப்படுவானாகில் வாசுதேவன் தானே யுத்தகளம் புகுவான் அவ்வாறு நேர்ந்தால் உனது சேனையில் அவரை எதிர்க்க ஒருவரும் நிற்க மாட்டார் இதை உணர்வாய் என்று கூறி சல்லியன் தேரோட்ட சம்மதிக்கிறார் (அந்த ஆதாரத்தை இணைத்துள்ளேன்)
இதுவே உண்மையாகும் ஆனால் அனைத்தும் அவன் லீலையே என்பது வேறு உண்மையில் அர்ஜுனன் எவ்வழியிலாவது வதைக்கப்பட்டு இருப்பானாகில் கிருஷ்ணர் யுத்தத்தை நடத்தி இருப்பார்.
அர்ஜுனன் ஜயத்ரதனை வதைக்கும் போது கூட கௌரவ சேனையில் பலர் அர்ஜுனன் வெற்றி பெறவேண்டும் என்றே பிரார்த்தித்தனர் ஆச்சரியமாக உள்ளது அல்லவா? ?
காரணம் யாதெனில் அன்று கிருஷ்ணரின் தேரோட்டியான தாருகன் கிருஷ்ணரின் ஆணையின் பேரில் கிருஷ்ணரின் ரதத்தை யுத்தத்திற்கு ஆயத்தமாக கிருஷ்ணரின் ஆணையை நோக்கி காத்திருந்தார் ஒருவேளை அர்ஜுனன் மடிவானாகில் கிருஷ்ணன் யுத்தத்தை நடத்துவதே திட்டம் (இதற்கான ஆதாரமும் இணைத்துள்ளேன்)
No comments:
Post a Comment