Monday, September 25, 2017

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

சில நாட்களாக இந்த பழமொழியை கூறிவருகின்றனர்

எனில் அர்ஜுனனுக்கு அத்தனை மனைவிகளா என்ன?

சரியாக வியாச பாரதத்தின் படி அர்ஜுனனுக்கு நான்கு மனைவிகள் மட்டுமே (பாஞ்சாலி, சுபத்திரை, சித்ராங்கதை, உலூபி)

1.இங்கு பாஞ்சாலியை அர்ஜுனன் குறியை அடித்து மணப்பார்

2.உலூபி
      இதில் அர்ஜுனன் உலூபியை தேடி செல்லவில்லை கடத்தியது உலூபியே ஆனால் பெண்ணிடம் வீரத்தை காட்ட வேண்டாமென அர்ஜுனன் ஏதும் செய்யமாட்டார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html?m=1

   பலர் அறியாத விசயம் உலூபி ஒரு விதவை ஆவாள்
     
  அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம்{உலூபியிடம்} பெறப்பட்டவனாவான்.கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான்

http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-091.html?m=1

3.சித்ராங்கதை
              இவர் பாண்டியனின் மகள் பாண்டியன் உடனான உடன்படிக்கையின் படி இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை பாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புகிறார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section217.html?m=1

4.சுபத்திரை
               இவர் அர்ஜுனனின் அத்தை மகள் ஆவார் இருவருமே முன்னமே ஒருவரை ஒருவர் கேள்விபட்டு காதல் கொண்டனர் அர்ஜுனன் சுபத்திரையை கண்டவுடன் இந்த விருப்பத்தை கிருஷ்ணரிடம் சொன்னார் அதேபோல சுபத்திரையும் ரிஷியானவர் அர்ஜுனன் என உணர்ந்த உடனே காதல் வெளிப்படுத்தினாள் சரியாக சொல்ல வேண்டுமானால் ருக்மணி கண்ணன் மீது கொண்ட காதல்போல அர்ஜுனனை பற்றி கேள்வியுற்றே காதலிக்க தொடங்கினாள்

முறையே நான்கு மனைவிகளுக்கும் ஒவ்வொரு மகன்களாக மாவீரர்கள் நால்வர் ஜெனித்தனர்

இவர்கள் நால்வர் மட்டுமே அர்ஜுனனின் பாரியைகள் இவர்களில் திரௌபதி மற்றும் சுபத்திரை மட்டுமே இந்திரபிரஸ்தம் வருவர்

பல பேர் அர்ஜுனனின் மனைவிகள் என குறிப்பிடப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை அவை புதினங்களே

🌸 அர்ஜுனனின் தவம்

            பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.


பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, "பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்" என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, "பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்" என்றார் {சிவன் பெருமான்}.

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section38.html?m=1

🌸 அர்ஜுனனின் விரதம்
          பிரம்மசிரா அஸ்திரத்தை திரும்ப பெறுவதென்பது சாதாரணம் இல்லை அதற்கான விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியது கடினமானது இதனால் தான் அஸ்வதாமரால் கூட அவ்வஸ்திரத்தை பின்வாங்க இயலவில்லை

Having said these words Dhananjaya withdrew his weapon. The withdrawal of that weapon by the gods themselves in battle is exceedingly difficult. Not excepting the great Indra himself, there was nobody save the son of Pandu, who was capable of withdrawing that high weapon after it had once been let off. That weapon was born of Brahma energy. No person of uncleansed soul can bring it back after it is once let off. Only one that leads the life of a brahmacari can do it. If one who has not practised the vow of brahmacarya seeks to bring it back after having shot it, it strikes off his own head and destroys him with all his equipments. Arjuna was a brahmacari and an observer of vows. Having obtained that almost unobtainable weapon, he had never used it even when plunged into situations of the greatest danger. Observant of the vow of truth, possessed of great heroism, leading the life of a brahmacari, the son of Pandu was submissive and obedient to all his superiors. It was for this that he succeeded in withdrawing his weapon.

http://www.sacred-texts.com/hin/m10/m10015.htm

கும்பகோண பதிப்பு (தமிழில்)

https://drive.google.com/file/d/0BwtAdTS664FARWRWc3AwYTNmSk0/view?usp=drivesdk

அர்ஜுனனின் தவம் பெரும் பலம் கொண்டது மேலும் மேலும் அவர் கடைபிடித்த விரதமும் அவ்வாறே

இதனால் தேவலோக அப்சரஸான ஊர்வசியையும்

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section46b.html?m=1

விராடன் மகள் உத்தரையையும் ஏற்காதவன் விஜயன்

ஊர்வசியை ஏற்காதலால் சாபம் பெற்றதை அனைவரும் அறிவோம்

சரியாக மூன்று முறை விஜயன் திக் விஜயம் செல்வார் இதில் எந்த நாட்டு பெண்னையும் மணக்கவில்லை

அப்படி பார்த்தால் திருதராஷ்டிரருக்கே மொத்தம் 110 மனைவிகள் உண்டு
எனில் இந்த பழமொழி எவ்வாறு சரியென நான் அறியேன்

பார்த்தன் பிரம்மதேவர் உருவாக்கிய காண்டீப வில்லையும் இரு அம்பறாத்தூணிகளையும் கொண்டவன்
அவன் வில்லில் இருந்து புறப்படும் கணைகள் ஒன்றையொன்று தொட்டுகொண்டு செல்லும்

http://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section168.html

http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section63.html?m=1

மேலும் சவ்யசச்சின் ஒரே இழுவையில் 500, 600 அம்புகளுக்கும் மேலாக விட வல்லவன்

http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section90.html?m=1

http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-090.html?m=1

குடகேசனின் வேகத்தை தேவர்களும் பார்க்க முடியாதவர்கள் ஆவர் வெட்டிய ஜெயத்ரதனின் தலையை அம்புகளை கொண்டே கீழே விழாமல் எல்லையில் இருந்த சிந்து ராஜனின் தந்தை மடியில் விழ வைத்தவன்

http://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-145.html?m=1

அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்

என்பது போல மாற்றப்பட்ட பழமொழியே இது

உண்மையான பழமொழி

#ஆற்று_மணலை_கூட_எண்ணலாம்_ஆனால்_அர்ஜுனனின்_கணைகளை்_எண்ண_முடியாது

குறிப்பு : அனைத்தையும் ஆதாரத்துடனேயே பதிவிட்டு உள்ளேன் தேவையற்ற விவாதம் எழுப்புபவர் எவராயினும் நிச்சயம் Block செய்யப்படுவர் இங்கு நான் வேறு யாரையும் இழுக்கவில்லை அர்ஜுனரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் விவாதம் வேண்டாம் 🙏🙏🙏

2 comments:

  1. அதி அற்புதமான விளக்கம்

    ReplyDelete
  2. மிகவும் அற்புதமான விளக்கம் அனைவருக்கும் புரியும் படியாக உள்ளது

    ReplyDelete