Monday, September 25, 2017

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

ஆற்றில் உள்ள மணல்களை எண்ணலாம் ஆனால் அர்ஜுனன் மனைவிகளை எண்ண முடியாது

சில நாட்களாக இந்த பழமொழியை கூறிவருகின்றனர்

எனில் அர்ஜுனனுக்கு அத்தனை மனைவிகளா என்ன?

சரியாக வியாச பாரதத்தின் படி அர்ஜுனனுக்கு நான்கு மனைவிகள் மட்டுமே (பாஞ்சாலி, சுபத்திரை, சித்ராங்கதை, உலூபி)

1.இங்கு பாஞ்சாலியை அர்ஜுனன் குறியை அடித்து மணப்பார்

2.உலூபி
      இதில் அர்ஜுனன் உலூபியை தேடி செல்லவில்லை கடத்தியது உலூபியே ஆனால் பெண்ணிடம் வீரத்தை காட்ட வேண்டாமென அர்ஜுனன் ஏதும் செய்யமாட்டார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html?m=1

   பலர் அறியாத விசயம் உலூபி ஒரு விதவை ஆவாள்
     
  அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம்{உலூபியிடம்} பெறப்பட்டவனாவான்.கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான்

http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-091.html?m=1

3.சித்ராங்கதை
              இவர் பாண்டியனின் மகள் பாண்டியன் உடனான உடன்படிக்கையின் படி இவர்களுக்கு பிறக்கும் குழந்தையை பாண்டியனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்புகிறார்

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section217.html?m=1

4.சுபத்திரை
               இவர் அர்ஜுனனின் அத்தை மகள் ஆவார் இருவருமே முன்னமே ஒருவரை ஒருவர் கேள்விபட்டு காதல் கொண்டனர் அர்ஜுனன் சுபத்திரையை கண்டவுடன் இந்த விருப்பத்தை கிருஷ்ணரிடம் சொன்னார் அதேபோல சுபத்திரையும் ரிஷியானவர் அர்ஜுனன் என உணர்ந்த உடனே காதல் வெளிப்படுத்தினாள் சரியாக சொல்ல வேண்டுமானால் ருக்மணி கண்ணன் மீது கொண்ட காதல்போல அர்ஜுனனை பற்றி கேள்வியுற்றே காதலிக்க தொடங்கினாள்

முறையே நான்கு மனைவிகளுக்கும் ஒவ்வொரு மகன்களாக மாவீரர்கள் நால்வர் ஜெனித்தனர்

இவர்கள் நால்வர் மட்டுமே அர்ஜுனனின் பாரியைகள் இவர்களில் திரௌபதி மற்றும் சுபத்திரை மட்டுமே இந்திரபிரஸ்தம் வருவர்

பல பேர் அர்ஜுனனின் மனைவிகள் என குறிப்பிடப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் இல்லை அவை புதினங்களே

🌸 அர்ஜுனனின் தவம்

            பாரதர்களில் சிறந்த, வலிமை மிக்க கரங்கள் கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்தான். கரங்களை உயர்த்தி, எதன் மீதும் சாயாமல், கால் கட்டைவிரல் நுனியில் நின்று கடும் தவத்தைத் தொடர்ந்தான். தொடர்ந்து குளித்துக் கொண்டே இருந்ததால், அந்த சிறப்பு வாய்ந்த வீரனின் முடி மின்னலைப் போன்றும், தாமரையைப் போன்றும் நிறம் கொண்டன.


பிறகு பெரும் முனிவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிநாகம்க் கொண்ட தேவனிடம் {சிவனிடம்} சென்று, பிருதை மகனின் {அர்ஜுனனின்} கடும் தவம் குறித்து சொல்வதற்காகச் சென்றனர். அந்த தேவர்களுக்குத் தேவனை {சிவனை} வணங்கி, அர்ஜுனனின் தவத்தைக் குறித்து சொல்வதற்காக, "பெரும் சக்தி கொண்ட இந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்}, தவங்களில் கடுமையான தவத்தை இமயத்தின் மார்பில் செய்து கொண்டிருக்கிறான். ஓ தேவர்களுக்குத் தேவா {சிவனே}, அவனது தவத்தின் வெப்பத்தால், பூமியெங்கும் புகையை வெளியேற்றுகிறது. அவனது இந்தக் கடுந்தவத்திற்கான காரணத்தை நாங்கள் அறியவில்லை. இருப்பினும், அவன் எங்களுக்கு வலியை உண்டாக்குகிறான். அவனது செயலை நிறுத்தும்" என்றனர். ஆன்மாவை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அனைத்து உயிர்களின் தலைவனும் உமையின் கணவனுமானவன் {சிவன்}, "பல்குனனைக் {அர்ஜுனனைக்} குறித்து நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் நீங்கள் எங்கிருந்த வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள். அர்ஜுனனின் இதய விருப்பத்தை நான் அறிவேன். சொர்க்கமோ, செழிப்போ, நீண்ட ஆயுளோ அவனது விருப்பம் இல்லை. அர்ஜுனன் விரும்புவதை அவனுக்கு நான் இன்றே கொடுப்பேன்" என்றார் {சிவன் பெருமான்}.

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section38.html?m=1

🌸 அர்ஜுனனின் விரதம்
          பிரம்மசிரா அஸ்திரத்தை திரும்ப பெறுவதென்பது சாதாரணம் இல்லை அதற்கான விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியது கடினமானது இதனால் தான் அஸ்வதாமரால் கூட அவ்வஸ்திரத்தை பின்வாங்க இயலவில்லை

Having said these words Dhananjaya withdrew his weapon. The withdrawal of that weapon by the gods themselves in battle is exceedingly difficult. Not excepting the great Indra himself, there was nobody save the son of Pandu, who was capable of withdrawing that high weapon after it had once been let off. That weapon was born of Brahma energy. No person of uncleansed soul can bring it back after it is once let off. Only one that leads the life of a brahmacari can do it. If one who has not practised the vow of brahmacarya seeks to bring it back after having shot it, it strikes off his own head and destroys him with all his equipments. Arjuna was a brahmacari and an observer of vows. Having obtained that almost unobtainable weapon, he had never used it even when plunged into situations of the greatest danger. Observant of the vow of truth, possessed of great heroism, leading the life of a brahmacari, the son of Pandu was submissive and obedient to all his superiors. It was for this that he succeeded in withdrawing his weapon.

http://www.sacred-texts.com/hin/m10/m10015.htm

கும்பகோண பதிப்பு (தமிழில்)

https://drive.google.com/file/d/0BwtAdTS664FARWRWc3AwYTNmSk0/view?usp=drivesdk

அர்ஜுனனின் தவம் பெரும் பலம் கொண்டது மேலும் மேலும் அவர் கடைபிடித்த விரதமும் அவ்வாறே

இதனால் தேவலோக அப்சரஸான ஊர்வசியையும்

http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section46b.html?m=1

விராடன் மகள் உத்தரையையும் ஏற்காதவன் விஜயன்

ஊர்வசியை ஏற்காதலால் சாபம் பெற்றதை அனைவரும் அறிவோம்

சரியாக மூன்று முறை விஜயன் திக் விஜயம் செல்வார் இதில் எந்த நாட்டு பெண்னையும் மணக்கவில்லை

அப்படி பார்த்தால் திருதராஷ்டிரருக்கே மொத்தம் 110 மனைவிகள் உண்டு
எனில் இந்த பழமொழி எவ்வாறு சரியென நான் அறியேன்

பார்த்தன் பிரம்மதேவர் உருவாக்கிய காண்டீப வில்லையும் இரு அம்பறாத்தூணிகளையும் கொண்டவன்
அவன் வில்லில் இருந்து புறப்படும் கணைகள் ஒன்றையொன்று தொட்டுகொண்டு செல்லும்

http://mahabharatham.arasan.info/2015/07/Mahabharatha-Udyogaparva-Section168.html

http://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section63.html?m=1

மேலும் சவ்யசச்சின் ஒரே இழுவையில் 500, 600 அம்புகளுக்கும் மேலாக விட வல்லவன்

http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section90.html?m=1

http://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-090.html?m=1

குடகேசனின் வேகத்தை தேவர்களும் பார்க்க முடியாதவர்கள் ஆவர் வெட்டிய ஜெயத்ரதனின் தலையை அம்புகளை கொண்டே கீழே விழாமல் எல்லையில் இருந்த சிந்து ராஜனின் தந்தை மடியில் விழ வைத்தவன்

http://mahabharatham.arasan.info/2016/09/Mahabharatha-Drona-Parva-Section-145.html?m=1

அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம்

என்பது போல மாற்றப்பட்ட பழமொழியே இது

உண்மையான பழமொழி

#ஆற்று_மணலை_கூட_எண்ணலாம்_ஆனால்_அர்ஜுனனின்_கணைகளை்_எண்ண_முடியாது

குறிப்பு : அனைத்தையும் ஆதாரத்துடனேயே பதிவிட்டு உள்ளேன் தேவையற்ற விவாதம் எழுப்புபவர் எவராயினும் நிச்சயம் Block செய்யப்படுவர் இங்கு நான் வேறு யாரையும் இழுக்கவில்லை அர்ஜுனரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் விவாதம் வேண்டாம் 🙏🙏🙏

💐 அஸ்திரங்களில் நிகரற்றவர் யார்


👑 மன்னராய் பிறந்து ரிஷியாகி பின் இராஜ ரிஷி பிரம்ம ரிஷி என சப்தரிஷிகளில் ஒருவரான விஸ்வாமித்ரரே அவர்

🌷 நம் அனைவருக்கும் வசிஷ்டரின் கன்றுக்காக விஸ்வாமித்ரர் சண்டையிட்டது தெரியும்

🌷 ஆனால் யுத்தம் அவ்வளவு எளிதாக முடிந்துவிட வில்லை யுத்தத்தில் கௌசிகர் விடாத அஸ்திரம் இல்லை

🌷ஆனால் அனைத்தையும் வசிஷ்டரின் பிரம்ம தண்டம் அடக்கியது இதன்பிறகே ரிஷியாகிறார்

🌷இதன் பிறகு திரிசங்கு சொர்க்கம், அரிச்சந்திரன் என இருவருக்கும் இடையே நடைபெற்ற பனிப்போரை பலரும் அறிவோம் ஆனால் எதுவும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை

💐 வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்ரரின் பங்கு இராமவதாரத்தில் இன்றியமையாததாகும்

👑 ராமபிரானுக்கு ஞானமளிப்பதில் வசிஷ்டரும்

👑 அஸ்திரமளிப்பதில் விஸ்வாமித்ரரும் தங்களின் பணியை செவ்வனே செய்தனர்

🌺 இராமருக்கு வசிஷ்டர் அளித்த ஞானம் அளவிட முடியாதது ஆகும் அதில் யோக வசிஷ்டம் மிகவும் முக்கியமாகும் இது சரியாக 32,000 ஸ்லோகங்களை கொண்டது (வால்மீகி இராமாயணம் முழுதும் கூட 24000 மட்டுமே)

🌹 தனது 16 வயதிலேயே மனித வாழ்க்கையை கண்டு விரக்தி அடையும் ஸ்ரீ ராமருக்கு வசிஷ்டரின் உபதேசமே யோக வசிஷ்டமாகும்

🌸 இதே போல அஸ்திர பயிற்சியில் விஸ்வாமித்ரரின் பங்கு அற்புதமானது

🌻 அவர் ஏற்கனவே பல அஸ்திரங்களை மன்னராய் இருக்கும் போது அறிந்ததே ஆனால் ரிஷியான பின்பும் இதை விட வில்லை

🌸 பெரும் வேள்வி நடத்துகிறார் விஸ்வாமித்ரர் அதற்கு இராவணனே நேராக வந்து தடுக்க முடியாததால் மாரிசன் மற்றும் சுபாகுவை அனுப்பி வைக்கிறான்

🍀 இவ்விருவர்களும் சாமான்யர்கள் இல்லை ராமபிரானின் தந்தையாகிய தசரதரே

🌺 " நான் மற்றும் என் நண்பர்கள் எங்களின் படையுடன் சேர்ந்து வந்து தடுத்தாலும் கூட அந்த இருவர்களில் ஒருவனை தடுப்பதே இயலாத காரியம் அவ்வாறு இருக்கையில் வெறும் பன்னிரண்டு வயதேயான என் மகன் ராமன் எவ்வாறு தடுப்பான் " என மறுக்கிறார்

🌈 இதை கேட்ட வசிஷ்டர் பொங்கி எழுகிறார்

" தசரதா

இராமன் சிறுவனாய் இருந்தால் என்ன ??

இளைஞனாய் இருந்தால் என்ன ??

தனுர்வித்தை பயின்றால் என்ன??

பயிலாமல் இருந்தால் என்ன

விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ ஏன் பயம் கொள்கிறாய் எதிர்த்து வருபவன் மரணமற்றவராக இருந்தாலும் விஸ்வாமித்ரர் உடன் இருக்கையில் நீ அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

அவரால் ஆகாத காரியம் என்று இல்லை அவரே ராமனை அழைக்கிறார் என்றார் அதில் காரணம் இருக்கிறது

இவர் தவத்திற்கு இருப்பிடம்

இவர் அறிந்த அஸ்திரங்களை இதுவரை எவரும் அறிந்ததுமில்லை

இனி எவரும் அறிய போவதுமில்லை

இவர் அறியாத அஸ்திரமில்லை மேலும் தன் பலத்தினால் புதுபுது அஸ்திரத்தினை உருவாக்கும் திறனும் கொண்டவராவார்

தக்ச பிராஜாதிபதியின் மகளான ஜயை மற்றும் ஸுப்ரபை இருவரும் க்ரிசாஸ்வரை மணந்து கொடுமையிழைத்த அசுரர்களை வதைக்க இருவரும் கடவுள்களை தவிர மற்றோரால் வெல்ல முடியாத 100 அஸ்திரங்களை பெற்றெடுத்தனர் அவை அனைத்தையும் இவர் அறிவார்

மேலும் மும்மூர்த்திகளிடம் இருந்தும் பல அஸ்திரங்களை பெற்றவர் இவருடன் இராமனை அனுப்புவதே உனக்கு தகும் மேலும் அதுவே இராமனுக்கும் நன்மை பயக்கும்
(பால காண்டம் 21வது சர்க்கம்)

⛅ பின் இராமனை அழைத்து செல்லும் விஸ்வாமித்ரர் பலா மற்றும் அதிபலா வித்யைகளை அளிக்கிறார் இந்த வித்தைகளால் பலத்தில் எவரும் இணையாக மாட்டார்கள் மேலும் பசி ,தாகம், நோய்களால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படாது

🌼 இன்னும் பற்பல விசயங்கள் இவ்விரண்டு வித்தைகளால் சாத்தியம் மேலும் இதை அறிந்தவர் விஸ்வாமித்ரர் மட்டுமே இதை பிரம்ம தேவர் விஸ்வாமித்ரர்க்கு உபதேசித்தார்

🌺 தாடகையை வதைத்த பின்வரும் தேவர்கள் இதுவே சரியான நேரம் தாம் பாதுகாத்த அஸ்திரங்களை ஸ்ரீ ராமருக்கு அளிக்க வேண்டும் என வேண்ட அவ்வாறே அளிக்கிறார்


👑 விஸ்வாமித்ரர் இராமபிரானுக்கு அளித்த அஸ்திரங்கள்

🌻 தண்ட சக்கரம்

🌻 தர்ம சக்கரம்

🌻 கால சக்கரம்

👑 விஷ்ணு சக்கரம்

🌻 இந்திர சக்கரம்

👑வஜ்ராயுதம்

👑 சிவனின் திரிசூலம்

👑 பிரம்மாஸ்திரம்

👑 பிரம்மசிரா

🌻 ஜஷிகாஸ்திரம்

👑 மோதகி கதாயுதம்

👑 சிகாரி கதாயுதம்

👑 தர்ம பாசம்

👑 கால பாசம்

👑 வருண பாசம்

👑 வஜ்ரத்திற்கு இணையான இரு ஆயுதங்கள்

🌻 வருணாஸ்திரம் ஆக்னேயம் மற்றும் வாயவ்யம் மற்றும் சிகாரி

👑 சிவன் மற்றும் நாராயணரின் அஸ்திரங்கள்

👑 சிவனின் சக்தியாஸ்திரம்

👑 விஷ்ணுவின் சக்தியாஸ்திரம்

👑 ஹயக்ரீவர் அஸ்திரம்

🌺 கிரௌஞ்ச அஸ்திரம்

🌻 அசுரர்களின் சக்திமிக்க தண்டமான கங்காலம், கபாலம், கங்கனம்

🌼 வைத்யதாரா அஸ்திரம்

👑 நந்தன கட்கம்

🌻 மோஹன அஸ்திரம்

👑 பிரஸ்வாப்ன அஸ்திரம் (இதை வைத்தே பரசுராமரை பிஷ்மர் வெல்வார்)

🌻 பிரஸாமனா அஸ்திரம்

🌻 வர்சனா அஸ்திரம்

🌻 சோசனா அஸ்திரம்

🌻 சந்தப்பனா அஸ்திரம்

🌻 விலாப்பனா அஸ்திரம்

🌻 மன்மத அஸ்திரம்

🌻 கந்தர்வ அஸ்திரம்

🌻 ராட்சஸர்களின் அஸ்திரமான பைசாச அஸ்திரம்

🌻 தாமச அஸ்திரம்

🌻 சௌமான அஸ்திரம்

🌻 சம்வர்த்த அஸ்திரம்

🌻 மௌசல அஸ்திரம்

🌻 சத்ய அஸ்திரம்

🌻 மாய மாயா அஸ்திரம்

👑 சூரியனின் அஸ்திரமான தேஜபிரப

👑 சந்திரனின் அஸ்திரமான சிஷிரா

👑 துவஸ்தாவின் அஸ்திரமான சுதாமன

👑 பகனின் அஸ்திரமான சிதைசு

👑 மனுவின் மானவாஸ்திரம்

👑 மேலும் க்ரிசாஸரின் மகன்களாய் பிறந்த அஸ்திரங்கள் அனைத்தையும் அளித்தார் இவர்களின் பெயர் முதற்கொண்டு வால்மீகி இராமயணத்தில் உள்ளது

(பால காண்டம் 27 மற்றும் 28-வது சர்க்கம்)

🌺 இவைகள் அனைத்துமே தெய்வீக அஸ்திரங்கள் ஆகும்

🌺 மேற்கண்டவற்றில் பிரம்மாஸ்திரம் முதலிய பல அஸ்திரங்களை தடுக்க மஹேஸ்வர அஸ்திரம் வேண்டும்

👑 ஆனால் விஷ்ணு சக்கரம் மற்றும் திரிசூலம் முதலிய சிவன் மற்றும் விஷ்ணுவின் சக்திகொண்ட அஸ்திரங்களை தடுப்பது இயலாத காரியம்

👑 ஆனால் இவற்றையெல்லாம் இராமலட்சுமணர்கள் உபயோகிக்கவே இல்லை

🌺 அதிகாயன் பிரம்மகவசத்தை வரமாக பெற்றவன் பிரம்ம கவசத்தினை கிழிக்க பிரம்மாஸ்திரம் ஒன்றே வழி இதனால் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தினை அதிகாயனை கொல்ல உபயோகிப்பார்
( யுத்த காண்டம், 71- வது சர்க்கம்)

🌺 இராவணனின் தலையை இராம பிரான் அறுக்க அறுக்க முளைக்கிறது இவ்வாறாக நூற்றியோரு முறை அறுத்தும் இராவணன் மாளவில்லை இதை கண்ட தேரோட்டி மாதலி இராமபிரானிடம் பிரம்மாஸ்திரம் விட வேண்டுகிறார்
(இராம - இராவண இறுதியுத்தத்தில் இராமபிரான் இந்திரனின் தேரில் யுத்தம் செய்தார்)

🌺 அப்போது இராமபிரான் அகஸ்தியரிடம் பெற்ற பிரம்ம அம்புகளை இராவணன் மீது பிரயோகிக்கிறார்
( யுத்த காண்டம் 108-வது சர்க்கம்)

🌼 மற்றபடி வேறு எதையும் இருவரும் உபயோகிக்கவில்லை

❄ இராவணன் மகன் மேகநாதன் யார் கண்ணிற்கும் புலப்படாமல் தன்னை மறைத்துகொண்டு அனைவரையும் பிரம்மாஸ்திரம் கொண்டு தாக்குகிறான் இதை கண்ட லட்சுமணன் பிரம்மாஸ்திரம் கொண்டு அனைத்து இராட்சஸர்களையும் கொன்று வீழ்த்துவேன் என இராமபிரானிடம் கூறுகிறார் ஆனால் இராமபிரான் அதை அனுமதிக்கவில்லை
(யுத்த காண்டம் 80-வது காண்டம்)

👑 இராமபிரான் சரியாக மூவரிடம் அஸ்திரங்களை பெற்றார்
அவர்கள் வசிஷ்டர், விஸ்வாமித்ரர் மற்றும் அகஸ்தியர் ஆவர் இங்கு விஸ்வாமித்ரர் அளித்த அஸ்திரங்களை இராமபிரான் பெரும்பாலும் உபயோகிக்கவே இல்லை

👑 அவையனைத்தும் போரை எளிதாய் முடிக்கும் திறன் கொண்டு இருந்தவை காரணம் இராவணன் ஈசனிடம் பெற்ற சந்திராசன வாளை தவிர வேறு மகாஸ்திரங்கள் இந்த அஸ்திரங்களை தடுப்பதற்கு இல்லை ஆனால் சந்திராசனமும் அதர்மத்திற்கு உபயோகப்படுமானால் என்னிடம் வந்துவிடும் என ஈசனே கூறினார்

👑 இந்த வாளை இராவணன் போரில் உபயோகிக்க வில்லை காரணம் இந்த வாள் ஜடாயுவை கொன்ற போதே ஈசனிடம் சென்று விட்டது ஜடாயு இராவணன் வில்லையும், கவசத்தையும் உடைத்து இராவணனின் இடது கைகள் அனைத்தையும் கிள்ளி எறிகிறார் ஆனால் மீண்டும் கைகள் முளைத்தபின் இராவணன் வாள் கொண்டு வீழ்த்துவான்
( ஆரண்ய காண்டம் 51 -வது சர்க்கம் )

👑 பிரம்மரிஷி விஸ்வாமித்ரர் இறுதியாக தனது அஸ்திரங்கள் அனைத்தையும் தடுத்த பிரம்ம தண்டத்தையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது


கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

https://m.facebook.com/story.php?story_fbid=250256242147332&id=100014888746843

முதலில் இங்கு பாசம் என்பது என்ன என்பதை பார்க்கலாம்

ஒருவரை கட்டிப்போட பயன்படும் அஸ்திரங்களே பாசங்களாகும் இவற்றில் பல வகையுண்டு தர்மபாசம், வருணபாசம், காலபாசம், இவைகள் இராமர் அறிந்ததே

இங்கு மேகநாதன் தொடுத்தது நாகபாசமாகும் அதாவது இது தொடுக்கப்பட்டால் கொடுமையான நாகங்கள் வெளிவந்து எதிரியை கட்டும் இவ்வாறே இராமலட்சுமணர்கள் கட்டப்பட்டனர்

நாகங்கள் கட்டியதால் பட்சிராஜன் கருடன் வந்த போது அது விலகியது

எனில் நாகபாசத்தை தடுக்க எந்த அஸ்திரத்தாலும் முடியாதா என்ன....?

இல்லவே இல்லை நாகபாசத்திற்கு அவ்வளவு சக்தி இல்லை

எனில் ஏன் இதை இராமபிரான் தடுக்க வில்லை சற்று தெளிவாக பார்ப்போம்

இலங்கைக்கு வானர சேனை சென்றவுடனே அவைகளை எதிர்த்து இராட்சஸர்கள் வருகின்றனர்

பகல் முழுதும் நடந்த யுத்தம் இராத்திரியிலும் தொடர்கிறது

இராத்திரி யுத்தத்தில் இந்த்ரஜித்தை அங்கதன் எதிர்க்கிறான் அங்கதன் இந்த்ரஜித்தின் குதிரைகளையும் சாரதியையும் கொல்கிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 28 -வது ஸ்லோகம்)

இதனால் இந்த்ரஜித் உடனடியாக அந்த இடத்தை விட்டு மறைகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 29 -வது ஸ்லோகம்)

அங்கதனால் தோற்கடிக்கப்பட்ட இந்த்ரஜித் கோபத்துடன் தன்னை யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து கொண்டு திரும்பவும் யுத்தகளம் வருகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 35 -வது ஸ்லோகம்)

யுத்தத்தில் தன்னை மறைத்து இராம லட்சுமணர்களை தாக்குகிறான் பிறகு இராம லட்சுமணர்களிடம்
" யுத்தத்தில் நான் தன்னை மறைத்து கொண்டு வந்தால் 1000 கண்களையுடைய இந்திரனால் கூட என்னை பார்க்க முடியாது பின் மனிதர்களான உங்களால் முடியுமா என்ன " என கூறுகிறார்
(யுத்த காண்டம் 45 -வது சர்க்கம் 11 -வது ஸ்லோகம்)

எனில் மறைந்து நின்று தான் இராமலட்சுமணர்களை தாக்கினாரே தவிர நேரடியாக தாக்க வில்லை பிறகு எவ்வாறு நாகபாசத்தை இராமரால் தடுக்க முடியாது என கூறமுடியும்

இவ்வாறு தாக்கி இராமலட்சுமணர்கள் வீழ்ந்தபின் நான் அவர்களை யுத்தத்தில் கொன்று விட்டேன் என இராவணனிடம் கூறுகிறார்
(யுத்த காண்டம் 46 -வது சர்க்கம் 12 -வது ஸ்லோகம்)

இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்த்ரஜித் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்து நாகபாசத்தை விட்டான் இதை இராமபிரான் எங்ஙனம் தடுப்பது

அனைத்திற்கும் ஸ்லோகம் முதற்கொண்டு கூறப்பட்டுள்ளது இங்கு கூறியதில் ஏதேனும் பிழை இருந்தால் ஆதாரத்துடன் தெளிவாக கூறலாம்


கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

விடை : ஸ்ரீ இராமபிரான்

இராமபிரானிடம் நட்பு பூண்டதிற்கு பின்னரும் சுக்ரீவனுக்கு ராமரால் வாலியை வதைக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது

காரணம் வாலி சாமான்ய வானரமே அல்ல எதிர்த்து நிற்பவரின் பாதி பலம் கிட்டும் என்றாலும் சாதாரணமாகவே வாலியின் பலம் அளவிட முடியாதது

ஒரு முறை தேவர்கள் பாற்கடலில் சில முக்கிய ரத்தினங்களையும் புதையலையும் வேண்டி கடைந்தனர் ஆனால் அவர்களால் அதை அடைய முடியவில்லை

அதன்பிறகு வாலி தனியாளாக கடைந்து அந்த புதையலையும் இரத்தினங்களையும் பெற்றார் அப்படி தோன்றிய ஒரு இரத்தினத்தில் வந்த அப்சரஸே வாலியின் மனைவி தாரா ஆவார்

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் சண்டையில் மட்டுமே வாலிக்கு பாதி பலம் கிட்டும் ஆனால் தனியாக கடைந்ததை வைத்து பார்த்தால் வாலியின் பலம் புரியும் இவ்வாறு ஹனுமானும் வாலியையும் தவிர மற்றோரால் இயலாது

இதனாலே சந்தேகம் கொண்ட சுக்ரீவன் இராமபிரானிடம் வாலி எந்த வில்லும் இல்லாமல் தனது வெறும் கையாலேயே எறியும் பாணம் ஒரு சால மரத்தை துளைத்து வெளிவந்து மற்றொரு மரத்தை துளைத்து நிற்கும்

அவ்வாறு தமது பாணம் ஒரு சாலமரத்தை துளைத்து வெளிவந்தால் தாம் வாலியை வதைக்க வல்லவர் என நான் நம்புவதாக கூற இராம பிரானும் இசைகிறார்

இதனால் இராமபிரான் வில்லில் இருந்து தொடுக்கும் பாணம்

"" ஒரு சால மரத்தை மட்டுமல்லாது ஏழு சாலமரங்களை துளைத்து ஒரு மலையையும் துளைத்து வெளிவருகிறது பின் பூமியில் புகும் இராமபாணம் பூமியை துளைத்து வெளிவந்து பிறகு தனது இருப்பிடமான இராமபிரானின் அம்பறாத்தூணியில் அமர்கிறது ""

இதை கண்ட சுக்ரீவன் இராமனின் பாதத்தை ஒடிவந்து பிடிக்கிறார்

இக்காரணத்தாலேயே இராமபிரானுக்கு பிரசண்ட புஜ பராக்ரமன் என்ற பெயர் வந்ததாக அனுமான் உரைக்கிறார் 

👑 முப்பத்து முக்கோடி தேவர்கள்


🌷முப்பத்து முக்கோடி என்றவுடன் நம் நினைப்பது அவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்பதே ஆனால் உண்மை யாதெனில் இங்கு குறிப்பிடப்படும் கோடி என்பதன் பொருள் முக்கியமான மற்றும் தலைமையை குறிக்கிறது

🍂 சமஸ்கிருதத்தில் Trayastrimsati Koti என்ற சொல்லை மொழிமாற்றம் செய்யும்போது முப்பத்து மூன்று கோடி என செய்யப்பட்டுள்ளது ஆனால் கோடிக்கு பல பொருள்கள் உள்ளன


🌺 அதிதியின் புத்திரர்கள் ஆதித்யர்கள் பன்னிருவர்

🌺 ஈசன் படைத்த ருத்ரர்கள் பதினொருவர்

🌺 தர்மதேவதையின் மகன்கள் வசுக்கள் எட்டு பேர்

🌺 மற்றும் சூரியனின் மகன்களான அஸ்வினிதேவர்கள் இருவர்

{மன்வந்திரம் சிறு விளக்கம்

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் ஆகிய நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம்

71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்திரம்

14 மன்வந்திரங்கள் = ஒரு கல்பம் இதுவே பிரம்மதேவரின் ஒரு பகல்

2 கல்பங்கள் = பிரம்மதேவரின் ஒரு நாள்}

🌺 நாம் வாழும் இந்த மன்வந்திரத்திலேயே இந்த 33 பேர் ஆவர் இதே போல ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் இந்த தலைமை மாறும் அதாவது போன மன்வந்திரத்தில் ஐந்து கனதேவதைகள் முறையே அவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் 8 பேர்கள் இருந்தனர் ஆனால் இந்த மன்வந்திரத்தில் இந்த 33 பேர்கள் ஆவர்

🌻 இவர்களை பற்றியும் மேலும் சில முக்கியமானவர்களை பற்றி தற்போது பார்ப்போம்


💐 சப்தரிஷிகள்
       🌼 ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் சப்தரிஷிகளின் பொறுப்பு இன்றியமையாதது ஆகும்
       🌼 முதல் மன்வந்திரத்தில் இவர்கள் பிரம்மாவின் குமாரர்களாக அவதரித்தனர் ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தங்களின் தவத்தில் உயர்ந்தவர்கள் அடுத்த மன்வந்திரத்தில் சப்தரிஷிகளாவர்
        🌼 உண்மையில் கடவுள்களான மும்மூர்த்திகள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்
       🌼 சப்தரிஷியாக ஆகவேண்டுமானால் ஒருவர் தவத்தில் சிறந்து விளங்கி பெரும் தவபலம் பெற்று பிரம்மரிஷியாக வேண்டும்
       🌼 இவர்கள் சிரஞ்சீவிகள் போல கல்பாந்த காலம் அதாவது கல்பகாலம் முடிந்தபின் வரும் பிரளயம் வரை இருப்பர்
       🌼 ஆனால் இவர்களுக்கு ஒரு மன்வந்திர காலம் மட்டுமே சப்தரிஷி பட்டம் மற்றும் முக்கிய பொறுப்புகள் இவ்வாறாக ஒவ்வொரு மன்வந்திரமும் சப்தரிஷிகள் மாறுவார்கள்
      🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் ஆகியோர் சப்தரிகளாவர்
       🌼 இனிவரும் அடுத்த மன்வந்திரத்தில் தீப்திமான், காலவர், பரசுராமர், கிருபர், அஸ்வத்தாமன் , பாரதம் எழுதிய வியாசர், ருஷிய சிருங்கர் ஆகியோர் சப்தரிஷிகளாவர்

👑 மனு
        🌺 மனுவே மன்வந்திரத்தின் அதிகாரியாவார் இவரே முதலில் படைக்கப்பட்ட மனிதன் ஆவார் மனுவின் வம்சமாதலால் நாம் மனிதர்கள் என அழைக்கப்படுகிறோம்
        🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் சூரியனின் மகனான சிரார்த்த தேவன் மனுவாவார்

👑 இந்திரன்
       🌺 இந்திரன் மூவுலகங்களுக்கும் அதிபதி ஆவார் தேவர்கள், சொர்க்கம் மற்றும் மூவுலங்களுக்கும் இவரே தலைவர்
       👑 பொதுவாக நூறு அசுவமேத யாகங்களை செய்தவர் இந்திர பதவியை அடைவர்
       🌺 மூவுலக அதிபதி என்பதால் இந்திரனை வெற்றிகொண்டு அந்த இடத்தை பிடிக்கவே அசுரர்கள் முயல்வார்கள்
       🌼 நாம் வாழும் இந்த மன்வந்திரத்தில் அதிதியின் புதல்வரான புரந்தரன் இந்திரன் ஆவார் மேலும் அடுத்த மன்வந்திரத்திற்கு வாமனரால் பாதாள லோகத்திற்கு தள்ளப்பட்ட பலிச்சக்ரவர்த்தி இந்திரனாவார்

☀ ஆதித்யர்கள்
            ⛅ அதிதியின் புதல்வர்களாதலால் இவர்கள் ஆதித்யர்கள் என்றழைக்கப்படுகின்றனர்
            💧 இவர்கள் 12 பேரும் முறையே 12 மாதங்களுக்கு பொறுப்பாவார்கள் மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதம் சூரியனாய் இருப்பர்
            ⚡ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றுள்ளனர் செடி வளர்வதிலிருந்து கர்ப்பத்தில் குழந்தை வளர்வது வரை இவர்களுக்கு பல வேலைகள் தரப்பட்டுள்ளனர்
            🌾 புரந்தரன், வருணன் முதலியோர் ஆதித்யர்களே இவர்களின் பொறுப்பு மற்றும் சக்திகளை விளக்க ஒவ்வொரு ஆதித்யருக்கும் ஒரு பதிவு தேவைப்படும் இங்கு நான் கூறியது மிகக்குறைவே

ருத்ரர்கள்
            🍃 இவர்களை பற்றி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக சொல்லப்பட்டுள்ளது
            🌺 பிரம்மாவின் கோபத்தில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார் மேலும் பிரம்மாவின் உடலிலிருந்து ஈசனால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என்ற கதையும் உண்டு
            ☁ ஜந்து கர்மேந்திரங்களாகிய பேசுவது, கை (கையால் செய்யும் வேலைகள்), கால் (நடத்தல்), ஆசனவாய் மற்றும் உறுப்பு
            ❄ ஐந்து ஞானேந்திரங்களாகிய கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல்
            🌙 மற்றும் கர்மேந்திரமும் ஞானேந்திரமும் சேர்ந்ததாகிய யோசித்தல்
            🌋 இவை பதினொன்றையும் பதினொரு ருத்ரர்கள் கவனித்து கொள்வர்

🌌 வசுக்கள்
           🍀 தட்ச பிராஜிபதி தனது பத்து மகள்களை தர்மதேவதைக்கு மணமுடித்தார் அவர்களுக்கு பிறந்தவர்களே வசுக்கள் 8 பேர்
           🍁 இவர்கள் எண்மரும் முறையே பூமி, காற்று, ஆகாயம், அக்னி, சூரியன், சந்திரன், அண்டம் மற்றும் நட்சத்திரங்களை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுள்ளனர்
           🌺 இங்கு பீஷ்மரை பிறந்த பிரபாசன் எனும் வசுவின் புத்திரரே தேவசிற்பி விஸ்வகர்மா ஆவார்
           🌺 மன்மதனும் தர்மதேவதையின் புத்திரனே

👑 அஷ்டதிக் பாலகர்கள்
           🎆 குபேரன், எமன், இந்திரன், வருணன், ஈசானன், அக்னி, வாயு, நிருதி ஆகிய இவர்கள் எண்மரும் அஷ்டதிக் பாலகராவர்
           🌴 இவர்கள் பிரபஞ்சத்தின் எட்டு திசைக்கும் காவலராவர்

🌹 நவகிரகங்கள்
           🍃 கசியப்பரின் புதல்வரான சூரியன்
           🌼 அத்ரி மஹரிஷியின் புதல்வரான சந்திரன்
           ❄ ஈசனின் வியர்வை துளியில் பிறந்த செவ்வாய்
           🌺 சந்திரனின் புதல்வரான புதன்
           🌺 ஆங்கிரச மஹரிஷியின் புதல்வரும் தேவகுருவுமாகிய பிரகஸ்பதி
           🌺 பிருகுமுனிவரின் புதல்வரும் அசுரகுருவான சுக்ராச்சாரியார்
           🌾 சூரிய புதல்வனும் ஈசனின் சீடனுமான சனீஸ்வரர்
           🍁 அமிர்தம் உண்டவர்களும் அசுர கிரகங்களுமான ராகு-கேது
           👑 இவர்கள் ஒன்பது பேரும் நவகிரகங்களாவர் ஒரு மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்றப்படி அவர்களுக்கு பலன்களை வழங்குகின்றனர்

🌼 கந்தர்வர்கள் - இவர்கள் கசியப்பர் மற்றும் அரிஷ்டா தேவிக்கு பிறந்தவர்கள் இவர்கள் தேவர்களுக்கு உதவியாளர்களாக கருதப்படுகின்றனர்

🌼 அசுரர்கள் - இவர்களும் தேவர்களுக்கு இணையான சக்தியோடு பிறந்தவர்களே ஆனாலும் எண்ணத்தினால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்
இவர்கள் இராவணனின் தாத்தாவான புலஸ்தியரின் வம்சத்தில் வந்தவர்கள்

🌼 தைத்தியர்கள் - இவர்களும் அசுரர்கள் போலவே ஆனால் கசியப்பருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் திதியின் மைந்தர்களாதலால் இவர்களின் வம்சம் தைத்தியர்கள் என்றழைக்கப்படுகிறது

🌼 தானவர்கள் - கசியப்பருக்கும் தனுவிற்கும் பிறந்தவர்கள் தனுவின் மைந்தர்களாதலால் தானவர்கள் என இவர்களின் வம்சம் அழைக்கப்படுகிறது

🌼 யட்சர்கள் - இவர்கள் பூமியில் உள்ள வளங்களை காப்பவராக கருதப்படுக்கின்றனர் குபேரனும் யட்சரே இவரே யட்சர்களின் தலைவராவார்

🌼 ராட்ஷசர்கள் - பூதங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்

👑 அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யட்சர்கள், இராட்ஷசர்கள் இவர்களை பொறுத்தவரை அனைவருமே மோசமானவர்கள் என கூறமுடியாது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் அதாவது நல்லவரும் இவர்களில் உண்டு

🌺 கிம்புருஷர் - உடலின் மேல்புறம் சிங்கமாகவும் கீழே மனிதனாகவும் இருப்பவர்கள் (நரசிம்மர் போல)

🌺 கின்னரர்கள் - உடலின் மேற்புறம் மனிதனாகவும் கீழே குதிரையாகவும் இருப்பவர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இவர்கள் அனைவருக்கும் (கிம்புருஷர்கள் மற்றும் கின்னரர் தவிர) தனித்தனி லோகங்கள் உண்டு இவர்கள் மும்மூர்த்திகளின் ஆணையின் கீழ் தங்களுக்கு அளிக்கப்பட்ட செயல்களை செய்கின்றனர்

ஆச்சரியமான விசயம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே அதாவது தேவர்களின் தலைவன் இந்திரன் முதல் கந்தர்வர்கள் வரை புவியில் மனிதர்களாய் பிறந்தவர்களே

எனில் இந்நிலையை இவர்கள் எவ்வாறு எட்டினர் என்ற கேள்வி எழுகிறதல்லவா

இவர்கள் அனைவருமே தங்கள் செய்த புண்ணியத்தாலேயே இந்த நிலையை எட்டினர் மேலும் இதன்பிறகு இறைவனிடம் சேர்வர்

இதை பல இடங்களில் அவர்களே கூட ஒத்துகொண்டுள்ளனர்

அனைத்தும் கர்மவினையே

நரகத்தில் சேர்ப்பதும் கர்மாவே
இந்திரனாய் ஆக்குவதும் கர்மாவே

👑 நர - நாராயணர்கள் ( முழுநீள பதிவு நேரம் ஒதுக்கி படிக்கவும் )


👑 மஹாபாரதத்தின் முதல் மற்றும் ஒவ்வொரு பர்வத்தின் தொடக்கத்திலும் இவர்களை வணங்கியே மஹாபாரதம் இன்றும் படிக்கப்படுகிறது

🌼 பாகவதம் இவர்களை தர்மதேவதைக்கும் தட்ச பிராஜாதிபதியின் மகளான மூர்த்திக்கும் பிறந்த மகாவிஷ்ணுவின் இரட்டை அவதாரம் என்று கூறுகிறது [1] மகாபாரதத்தில் நாராயணர் மட்டுமே தர்மதேவதைக்கு பிறந்தார் எனவும் நாராயணரின் தபோ பலத்தால் நரன் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது [2]

🌹 ஐயக்ரீவர் என்றும் வேதம் ஒதும் இடமும் சிருஷ்டியில் என்றும் அழியாததுமான பத்ரிகாஸ்ரமமே இவர்களின் இருப்பிடம்

🌹 ஒவ்வொரு யுகமும் உலக காரியங்களுக்காக நர-நாராயணர்கள் பூமியில் அவதரிக்கின்றனர் (2)

🌹 பழங்காலத்தின் தெய்வங்கள் இவர்களை யுத்தத்தில் தேவர்கள், அசுரர்கள், தானவர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் இணைந்து வந்தாலும்   வெல்லமுடியாதவர்கள் தேவர்களில் இருந்து கந்தவர்கள், அசுரர்கள், யட்சர்கள், நாகர்கள், மனிதர்கள் என அனைவராலும் வணங்கப்பட வேண்டியவர்கள் (14)

🌹 தங்களின் தவம் மூலமாக உயர்நிலையை இவர்கள் அடைந்தனர் பிரளயத்தின்போது கூட இவர்கள் அழியமாட்டார்கள்
இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஒரு மன்வந்திரமே வாழ்வு
சிரஞ்சீவிற்கு கூட ஒரு கல்ப காலமே வாழ்வாகும்
ஆனால் நர-நாராயணர்கள் பத்ரி ஆஸ்ரமத்தில் பிரம்மாவை போன்று அழியாத நித்ய வாழ்வு கொண்டு இன்றும் அகில நன்மைக்காக தவம்புரிகின்றனர்[3]

🌹 தவம்புரியும் ரிஷிகளின் சக்தி ஒப்பற்றதாகும் இந்த சக்தியை ஆதாரமாக கொண்டு சிருஷ்டியை இயக்க அவதரித்தவர்களே நர-நாராயணர்கள்

🌹 பாற்கடல் கடைந்து அமிர்தம் வெளிப்பட்டபோது நடந்த தேவாசுர போரில் அசுரர்களில் பெரும்பான்மையினரை வதைத்தவர்கள் நர-நாராயணர்களே
பிறகு இந்திரன் அமிர்தத்தை காக்கும்பொருட்டு அதை நரரிடம் தருகிறார் (4)

🌼 இருவரும் ஈருடலில் இருக்கும் ஓர் ஆன்மாவாவர் (5,6)

🌹 தவத்தை கலைக்க மன்மதன் உட்பட பல அப்சரஸ்கள் உடன்செல்ல தனது தொடையில் தட்டி ஊர்வசி எனும் அப்சரஸை உருவாக்கியவர்கள் அப்சரஸ்களே ஊர்வசியை கண்டு மயங்கினர் என்பதே உண்மை ஊர்வசி நடந்துசெல்கையில் அவள்பின்னே அனைத்து அப்சரஸ்கள் உட்பட மன்மதனே பின்னே செல்லும் அழகை உடையவள் ஊர்வசி (15)

👑 பிரகலாதனுக்கு அருள்புரிந்த கதை (வாமன புராணம்) [7]
      🌻 உலகில் சிறந்த தீர்த்தம் எதுவென பிரகலாதன் கேட்கையில் நைமிசாரண்யமே சிறந்தது என அறிய அங்கு நீராட செல்கிறார் அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது
      🌻 அங்கு ஒரு மரத்தில் எள் அளவு கூட இடைவெளியில்லாமல் அம்புகளால் துளைக்கப்பட்டிருந்தது ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான அம்புகள் குத்திநின்ற காட்சி அவரை திகைப்பிற்கு உள்ளாக்கியது இதை கண்டு யாரென தேடுகையில் நர நாராயணர்கள் நிறைந்த அம்பறாத்தூணியுடனும் திவ்ய தனுசுடனும் தவம்புரியும் காட்சியை கண்டார்
      🌻 அவரின் பார்வையில் அவர்கள் வில்லுடன் இருந்ததால் போலித்துறவிகளாக தெரிந்தனர் தவம்செய்யும் முனிவர்கள் அனைத்தையும் துறந்தவர்கள் அவர்களுக்கு ஏன் ஆயுதமென எண்ணினார் இதனால் நர - நாராயணர்களிடம் கேட்க இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை யுத்தமாகியது
      🌻 முதலில் நரனுடன் யுத்தம் தொடங்குகிறது
பிரகலாதன் ஏவும் அனைத்து பாணங்களும் நரனின் பாணத்தால் செயலற்றதாகின்றன இதை கண்ட பிரகலாதன் இவர்கள் சாமான்யர் இல்லை என்பதால் பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கிறார் நரன் இதை நாராயண அஸ்திரம் கொண்டு எளிதாக தடுக்கிறார்
               🌻 இதை அடுத்து சக்தி வாய்ந்த ஆக்நேயத்தை பிரகலாதன் விட ஈசனின் நெற்றிக்கண்ணின் சக்திகொண்ட மஹேஸ்வர அஸ்திரத்தை கொண்டு தடுக்கிறார் அச்சமயத்தில் சூரியன் அஸ்தமனமாக நரன் யுத்தத்தை நிறுத்துகிறார்
               🌻 அடுத்த நாள் யுத்தம் தொடங்க தற்போது நாராயணர் யுத்தகளம் வர யுத்தம் தொடங்குகிறது பாணங்கள் பயனற்று போக தனது கதாயுதத்தை எடுத்து நாராயணரின் தலையில் அடிக்க அது சுக்குநூறாகிறது
               🌻 இதுகண்டு அதிர்ச்சியடைந்த பிரகலாதன் பகவான் விஷ்ணுவை தியானிக்கிறார் பக்தியின் தூண்டுதலால் அங்குதோன்றிய பரந்தாமனிடம் என்னால் ஏன் இவர்களை வெல்லமுடியவில்லை எனக்கேட்க
" இவர்களை என் அம்சமென்றறிவாய் அவர்களை யுத்தத்தில் வெல்லமுடியாது பக்தியினால் மட்டுமே வெல்ல முடியும் " எனக்கூறுகிறார்
              🌻 இதைகேட்ட பிரகலாதன் ஆட்சியின் பொறுப்பை அந்தகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவியை காட்டிற்கு வந்து பிரார்த்திக்கிறார் இதனால் மகிழ்ந்த அவர்கள் தோன்ற " தான் அவர்களை ஏசியதையும் யுத்தம் செய்ததையும் பொறுத்தருள வேண்ட அவர்கள் அவ்வாறே ஏற்று வரம் வேண்ட கூற உங்ளையும் மகாவிஷ்ணுவையும் எக்காலத்திலும் மறவா வரம் கேட்கிறார்
              🌻 அரசனை காணாது அந்தகன் காடு வந்து மீண்டும் அரசாள வேண்ட அதை மறுக்கும் பிரகலாதன் எனக்கு எதுவும் வேண்டாமென இராஜ்யத்தை அந்தகனிடம் அளித்துவிட்டு வனம்செல்கிறார்

👑 ஈசனின் திருவிளையாடல் (8)
              ⚡ தட்ச பிராஜாதிபதியின் யாகம் நடந்த இடத்தையே அழித்த பின் ஈசனின் திரிசூலம் பத்ரிகாஸ்ரமம் நோக்கி வருகிறது
              ⚡ நாராயணரின் மார்பில் திரிசூலம் தாக்க அதை தவவலிமை கொண்டு தடுத்த நாராயணர் மறுபடியும் ஈசனின் கைக்கே திருப்புகிறார் இதனால் நாராயணரை நோக்கி ஈசன் வர படபடப்பாக வந்த ஈசனின் கழுத்தை பிடிக்கிறார் இதனால் அவர் கழுத்து நிறம் மாறுகிறது
              ⚡ இதனால் நரர் தர்ப்பையை எடுத்து அதை கோடாலியாக்கி ஈசனின் மேல் விட அது சுக்குநூறாகிறது இதனால் ஈசனுக்கு கண்டபரசு என்ற பெயர் உண்டு
              ⚡ இந்த யுத்தத்தால் பிரபஞ்சமே நடுங்க பிரம்மதேவர் தோன்றி இருவரையும் தடுக்கிறார் இந்த சண்டை தவத்தின் சக்தியை காட்ட நிகழ்ந்ததாக கருதப்படுகிறது
              ⚡ ஈசனின் திரிசூலம் தாக்கியதால் நாராயணரின் மார்பில் ஸ்ரீ வத்சம் என்ற மச்சமும்
              ⚡ நாராயணரின் கையால் பிடிக்கப்பட்டதால் ஈசனின் கழுத்தின் நிறம் மாறியது இவ்வாறு இருவரும் தங்களுக்குள் அடையாளத்தை உண்டு பண்ணிகொண்டனர்
              ⚡ மகாதேவனான ஈசனை பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் நர - நாராயணர்களை தவிர தேவர்களாலோ, சித்தர்களாலோ, கந்தர்வர்களாலோ கூட அவ்வளவு எளிதாக காணமுடியாது இவர்கள் நால்வர் மட்டுமே ஈசனை எளிதில் காணக்கூடியவர்களாக உள்ளனர் (9)

              ⚡ பாசுபதம் தரும்போது கூட ஈசன் அர்ஜுனனின் முன்ஜென்மத்தை பற்றி தெளிவாக உரைக்கிறார் உன்னால் நான் யுத்தத்தில் திருப்தி செய்யப்பட்டேன் என ஈசனே கூறுவார் மேலும் அர்ஜுனனின் தவத்தை மெச்சி வாரியணைப்பார் (17)
              ⚡இதனால் ஈசனே ஜயத்ரதனுக்கு வரம்அளிக்கும்போது அர்ஜுனன் தவிர்த்து மற்ற நால்வரை உன்னால் தடுக்க முடியும் என்றே கூறி வரம் அளித்தார் (10)
              ⚡ மூவுலகிலும் இவர்களுக்கு இணையானவர்கள் இல்லை அண்டத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு கொண்டவர்கள் பழமையிலும் பழமையானவர்கள் முனிவர்களில் சிரேஷ்டர்கள் நர-நாராயணர்களை ஆட்சி செய்பவர் எவரும் இல்லை அவர்களே அனைத்தையும் ஆட்சிசெய்கிறார்கள் இவர்களின் கோபம் பேரழிவை தரவல்லது (13)
              ⚡ ஈசன் சர்வத்தையும் நாசம்செய்யவல்ல பாசுபதத்தை நர-நாராயணர்கள் மீது விட அவர்கள் தங்களின் தவபலத்தால் தன்னுள் அடக்கியதாகவும் விக்கிபீடியா முதலிய பலவற்றில் கூறப்பட்டாலும் நான் தேடியவரை அதற்கான ஆதாரம் கிட்டவில்லை

🌼 நாரதருக்கு உபதேசம்

🌼 நாரதருக்கு மகாவிஷ்ணுவை காணும் வழியை எடுத்துரைத்தவர்கள் நர-நாராயணர்களே இதனால் தரிசனம் கிட்டியவுடன் நாரதர் வந்தது நர நாராயணர்களிடமே அங்கு அவருக்கு ஞானோபதேசம் வழங்கப்பட்டது ஆயிரம் வருடங்கள் அங்கு இருந்த பின்னே அவர் அவருடைய ஆஸ்ரமம் சென்றார்

👑 தம்போத்பவனின் செருக்கை அடக்குதல் (11)
                   🌺 தம்போத்பவன் எனும் அரக்கன் உலகில் அனைத்து அரசர்களையும் வென்று தனக்கு நிகரானவன் இல்லை என இருமாந்து இருந்தான்
                   🌺 ஒரு முறை ஒரு பிராமணனிடம் தம்போத்பவன் தன்னைவிட சிறந்தவர் உண்டோ எனகேட்க பிராமணன் நர - நாராயணர்களை விட சிறந்தவர்கள் இல்லை எனக்கூற தம்போத்பவன் தன் படையுடன் அவர்கள் ஆஸ்ரமம் சென்று அவர்களை யுத்தத்திற்கு அழைக்கிறான்
                   🌺 நர-நாராயணர்கள் எவ்வளவு மறுத்தும் தம்போத்பவன் விடுவதாக இல்லை இதனால் நரன் கைநிறைய புற்கூச்சிகளை எல்லாம் சேர்த்துவைத்து கொண்டு தம்போத்பவனை யுத்தத்திற்கு அழைக்கிறார் தம்போத்பவன் தனது ஆறுவகை படைகளுடன் நரனை வீழ்த்த விரைகிறார்
                   🌺 ஆனால் நரனிடம் அது பலிக்கவில்லை நரனின் புற்குச்சிகள் படையை நாசம்செய்ததோடல்லாமல் தம்போத்பவனையும் வீழ்த்தியது இதனால் தம்போத்பவன் நரனின் பாதத்தில் விழ அவர் அறிவுரை கூறி அனுப்பிவைக்கிறார்

👑 புவியில் அவதரித்த நர - நாராயணர்கள் (12)
          🌼 ஒருமுறை பிரம்மதேவரை தரிசிக்க பிரகஸ்பதி மற்றும் சுக்ராச்சாரியர் மற்றும் இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் செல்கையில் அந்த இடத்தில் அனைவரின் சக்தியையும் இழுப்பது போல் தேஜசுடன் நர - நாராயணர்கள் அந்த இடத்தை விட்டு சென்றனர்
          🌼 இதைகண்ட தேவர்களின் குருவானவர் பிரம்மதேவரிடம் தங்களை வணங்காமல் இங்கிருந்து செல்லும் இவர்கள் யாரென கேட்க அதற்கு பரமபிதா தவத்தகுதியுடையவர்களும், தங்கள் பேரொளி மற்றும் அழகால் சுடர்விட்டு, பூமி, சொர்க்கம் ஆகிய இரண்டுக்கும் ஒளியூட்டுபவர்களும், பெரும் வலிமை கொண்டவர்களும், அனைத்திலும் ஊடுருவி, அனைத்தையும் கடந்திருப்பவர்களுமான இந்த இருவரும், வேறு உலகத்தில் இருந்து வந்து, தற்போது இங்கே வசித்து வரும் நரனும், நாராயணனும் ஆவார்கள். பெரும் வலிமையும் ஆற்றலும் உடைய அவர்கள், தங்கள் சொந்த தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் அசுரர்களின் அழிவுக்காகவே இவர்கள் நிலைத்திருக்கிறார்கள் எனக்கூறுகிறார்
          🌼 இதைகேட்ட இந்திரன் பிரகஸ்பதி உடன்சென்று நர-நாராயணர்களிடம் அசுரர்களின் அழிவை வரமாக கேட்கிறான்
          🌼 நர-நாராயணர்கள் அவ்வாறே வரம் அளிக்கின்றார்கள் அவ்வாறே வாசுதேவன் எண்ணற்ற அசுரர்களை வேரறுக்கிறார் அர்ஜுனன் நிவாதகசர்கள் காலகேயர்கள் மற்றும் பூமியில் அவதரித்த அசுரர்களையும் வீழ்த்தினார்
          🌼 பூதேவியின் பாரம்குறைக்க கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்ததுவே அவ்வாறே பல வரங்களால் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதே

👑 பத்ரிகாஸ்ரமம் (16)
            👑 இன்றைய பத்ரிநாத் கோவிலே பத்ரியாஸ்ரமம் ஆகும் இங்கே இன்றும் நர-நாராயணர்கள் தவம்செய்வதாக நம்பப்படுகிறது
            👑 வைஷ்ணவத்தில் இத்தலம் வைகுண்டமாக கருதப்படுகிறது வாழ்நாளில் ஒருமுறையேனும் வரவேண்டும் என நினைக்கும் ஸ்தலம்
            👑 ஸ்காந்த புராணத்தின்படி பத்ரிகாஸ்ரமம் சொல்லமுடியாத அளவு பெருமை உடையது சத்ய யுகத்தில் இங்கு வந்தாலே இறைவனை காணலாம்
            👑 சாலக்கிரமத்தினால் பிரம்மா உருவாக்கிய சிலையே மூலவராவர்
            👑 மூலவருக்கு இடது பக்கத்தில் நின்ற கோலத்தில் நர-நாராயணர்கள் அங்கு காட்சி தருகின்றனர்
            👑 இமயத்தில் உள்ள பத்ரிகாஸ்ரமமே நரன் மலை மற்றும் நாராயணர் மலை என்றழைக்கப்படும் இரு பனிசூழ்ந்த மலைகளுக்கு நடுவில் தான் உள்ளது
            👑 நரன் மலை அரிய பொக்கிஷங்கள் நிறைந்ததால் குபேர மலையெனவும் அழைக்கப்படுகிறது
            👑 இன்றளவும் நர-நாராயணர்கள் சிருஷ்டி நலனுக்காக இங்கே தவம்புரிவதாக ஐதீகம் கலியுகத்தில் இவர்களை காண்பது இயலாது
            👑 பிரம்மாவின் கூற்றுப்படி இவர்கள் வேறு இடத்தில் இருந்தனர் ஆனால் பூலோகத்திற்கு வரவேண்டிய அவசியம் இருந்ததால் புனிதமான இடமான பத்ரிகாஸ்ரமத்தை அமைத்தனர்
            👑 இங்கு தான் வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் மஹாபாரதத்தை எழுதிய இடமும் உள்ளது
            👑 மேலும் பாண்டவர்கள் அவதரித்த இடமும் இங்கே தான் மேலும் சொர்க்கம் சென்றது இவ்வழியில் தான்
       
👑 மேற்கூறியவை ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கீழ் தரப்பட்டுள்ளன
A = கும்பகோண பதிப்பு
B = கங்குலி மொழிப்பெயர்ப்பு
C = Bori critical edition (சமஸ்கிருதம்)

1.
http://bhagavata.org/canto11/chapter4.html

2.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZWk1tOUZKN3UtREk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2016/12/Mahabharatha-Drona-Parva-Section-202.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs07172.htm

3.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZUmdxNTRqV3pJNUk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section97.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05095.htm

4.
A.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZeW9lZktuZ1BrYWs/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section19.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs01017.htm

5.
A.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZYXNKNU41S3R5ems/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05048.htm

6.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZYXNKNU41S3R5ems/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section12b.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03013.htm


7.
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZV2JmRE9HQ1lZeXM/view?usp=drivesdk


https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZckNYSHFzSlgzZEk/view?usp=drivesdk

8.
A:
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZMXNiYmxCVC1HbVE/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZQ0ppSjJmdmg5SnM/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZU2JSUEJYeTFBSGM/view?usp=drivesdk

B.
http://www.sacred-texts.com/hin/m12/m12c042.htm#fn_293

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs12330.htm


9.
B.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section111.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05109.htm

10.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6Zd1lKZ1ByQVhsWU0/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section270.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03256.htm

11.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZNksxRWFPZzIzTVU/view?usp=drivesdk

B.
http://mahabharatham.arasan.info/2015/05/Mahabharatha-Udyogaparva-Section96.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05094.htm

12.
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZUWxoTVhjS1FSOEU/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZVlMzMjFFSWxXa2M/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2015/03/Mahabharatha-Udyogaparva-Section49.html?m=1

C.
http://www.sacred-texts.com/hin/mbs/mbs05048.htm

13
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZZE9sNnZZdzIzMVk/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-87.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs08063.htm

14
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZeWlDNmtQWWFwaDg/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Adiparva-Section230.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs01219.htm

15
https://books.google.co.in/books?id=UDCMCgAAQBAJ&pg=PT325&lpg=PT325&dq=urvashi+birth+bhagavata&source=bl&ots=87RQyWKrQI&sig=7sMtxFfAgFyf9e6Xi87hzjWrp0I&hl=ta&sa=X&ved=0ahUKEwiv_b26yY3WAhVBUbwKHYCXDR44ChDoAQgfMAI#v=onepage&q=urvashi%20birth%20bhagavata&f=false

16
http://www.thesacredjourneys.com/badrinath/

17
A
https://drive.google.com/file/d/0B7hshjEkGO6ZZlJzMllZOURlY2c/view?usp=drivesdk

B
http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section40.html?m=1

C
http://www.sacred-texts.com/hin/mbs/mbs03041.htm