Monday, September 25, 2017

கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

கேள்வி : பிரஸன்ன புஜ பராக்ரமன் என்று பெயர்பெற்றவர் யார் ?

விடை : ஸ்ரீ இராமபிரான்

இராமபிரானிடம் நட்பு பூண்டதிற்கு பின்னரும் சுக்ரீவனுக்கு ராமரால் வாலியை வதைக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது

காரணம் வாலி சாமான்ய வானரமே அல்ல எதிர்த்து நிற்பவரின் பாதி பலம் கிட்டும் என்றாலும் சாதாரணமாகவே வாலியின் பலம் அளவிட முடியாதது

ஒரு முறை தேவர்கள் பாற்கடலில் சில முக்கிய ரத்தினங்களையும் புதையலையும் வேண்டி கடைந்தனர் ஆனால் அவர்களால் அதை அடைய முடியவில்லை

அதன்பிறகு வாலி தனியாளாக கடைந்து அந்த புதையலையும் இரத்தினங்களையும் பெற்றார் அப்படி தோன்றிய ஒரு இரத்தினத்தில் வந்த அப்சரஸே வாலியின் மனைவி தாரா ஆவார்

இங்கு கவனிக்க வேண்டிய விசயம் சண்டையில் மட்டுமே வாலிக்கு பாதி பலம் கிட்டும் ஆனால் தனியாக கடைந்ததை வைத்து பார்த்தால் வாலியின் பலம் புரியும் இவ்வாறு ஹனுமானும் வாலியையும் தவிர மற்றோரால் இயலாது

இதனாலே சந்தேகம் கொண்ட சுக்ரீவன் இராமபிரானிடம் வாலி எந்த வில்லும் இல்லாமல் தனது வெறும் கையாலேயே எறியும் பாணம் ஒரு சால மரத்தை துளைத்து வெளிவந்து மற்றொரு மரத்தை துளைத்து நிற்கும்

அவ்வாறு தமது பாணம் ஒரு சாலமரத்தை துளைத்து வெளிவந்தால் தாம் வாலியை வதைக்க வல்லவர் என நான் நம்புவதாக கூற இராம பிரானும் இசைகிறார்

இதனால் இராமபிரான் வில்லில் இருந்து தொடுக்கும் பாணம்

"" ஒரு சால மரத்தை மட்டுமல்லாது ஏழு சாலமரங்களை துளைத்து ஒரு மலையையும் துளைத்து வெளிவருகிறது பின் பூமியில் புகும் இராமபாணம் பூமியை துளைத்து வெளிவந்து பிறகு தனது இருப்பிடமான இராமபிரானின் அம்பறாத்தூணியில் அமர்கிறது ""

இதை கண்ட சுக்ரீவன் இராமனின் பாதத்தை ஒடிவந்து பிடிக்கிறார்

இக்காரணத்தாலேயே இராமபிரானுக்கு பிரசண்ட புஜ பராக்ரமன் என்ற பெயர் வந்ததாக அனுமான் உரைக்கிறார் 

No comments:

Post a Comment