Thursday, June 7, 2018

கோபுரத்தையே ஈசனாக்கிய இராஜராஜ சோழன்


இராஜராஜ சோழ மன்னனின் சிவபக்தியை பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம்

நாம் எங்குமே " பஞ்ச தேக மூர்த்தி " என்ற ஒருவரை கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம் ஆனால் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டில் பஞ்சதேக மூர்த்தியை அவர் வணங்கியதற்கான கூறுகள் உள்ளன

பஞ்சதேக மூர்த்தி என்பவர் வேறு எவரும் இல்லை ஈசனின் பஞ்ச முகங்களாக கருதப்படும் பஞ்ச பிரம்மன்கள்

 சத்யோஜாதம்,

 வாமதேவர்,

 அகோர மூர்த்தி,

 தத்புருஷம்,

 ஈசானர்

 ஆகிய ஐவரும் ஒன்று சேர்ந்து ஓரே சிலையில் காட்சியளிப்பதே

இத்தகைய சிலை கிட்டதட்ட எந்த ஒரு கோவிலிலும் இல்லை என்றே கூட கூறலாம்
தற்போது இவை பெரிய கோவிலில் இருப்பதாக தெரியவில்லை ஆனால் அதை செய்யும் முறையும் அளவுகளும் கல்வெட்டில் உள்ளன

மேலும் முக்கண்ணனின் ஐந்து முகங்களில்

மேற்கு நோக்கி சத்யோஜாதம்

வடக்கு நோக்கி வாமதேவம்

தெற்கு நோக்கி அகோரம்

கிழக்கு நோக்கி தத்புருஷம்

மற்றும் மேலே வடகிழக்கு நோக்கி ஈசான முகத்தையும் கொண்டு சிருஷ்டியின் இயக்கத்தில் பங்கேற்றுகிறார்

ஐந்து ரூபங்களில் ஈசானரே அடிப்படையாகவும் ஆகாய ரூபமாகவும் காட்சித்தருகிறார்

அவ்வாறே பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தின் நாற்திசைகளிலும் முறையே
மேற்கே சத்யோஜாத ரூபமும்
வடக்கே வாமதேவரும்
தெற்கே அகோர மூர்த்தியும்
கிழக்கே தத்புருஷ ரூபமும்

சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன

ஈசானரின் முக்கியத்துவம் அறிந்து அந்த சிற்பம் அமைக்கப்படவில்லை

மேலும் அனைத்து கோவில்களிலும் கருவறையின் மேலுள்ள விமானத்தின் அமைப்பு வேறு பெரிய கோவிலில் உள்ள அமைப்பு வேறு

ஆழ்ந்து யோசித்தால் விளங்குவது ஒன்றே ஈசனையே தத்ரூபமாக லிங்க அமைப்பில் கோபுரமாக அமைத்தார் இராஜராஜ சோழன்

சர்வம் சிவார்ப்பணம்

Thanks to my temple app 

1 comment:

  1. ஈசானர் சிலை பெரிய கோயிலில் உள்ளது. பிழையான செய்திகளை வெளியிட வேண்டாம்.

    ReplyDelete