ஒரு கட்டுகடங்காத சக்தி நம் அனைவருக்குள்ளும் உள்ளது ஆனால் நாம் அனைவருமே அதை சிறுவயதிலேயே நமக்குள்ளே ஒரு கூண்டு கட்டி அடைத்துவிட்டு பதின்பருவத்தால் அதை கரிந்து கொட்டியது உண்டு
வான்தாண்டி நிலவை அடையும் விண்கலத்தை
உடைத்து பிரித்து வீட்டிற்கு கூரை மேய்வதுபோல
நாம் அனைவரும் செயலிலக்க வைத்த அந்த சக்தியே
" மனிதனின் மனம் "
மனதின் சக்தி எல்லையில்லாதது ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் அதை அறிய தவறிவிட்டோம்
ஆனால் நம் முன்னோர்கள் அறிய தவறவில்லை அவர்களில் முனிவர்களை எடுத்துகாட்டாக்கி சிலவற்றை பார்க்கலாம்
இன்றைய அறிவியலில் ESP அதாவது Extra sensory preception என்ற தலைப்பில் மனதின் பலதரப்பட்ட சக்திகளை படிக்கிறோம் அவைகளில் சில
Telepathy : ஒருவர் மனதில் நினைப்பது நமக்கு தெரியும்
( பல முனிவர்கள் வேண்டியவர்கள் நினைத்த நேரத்தில் காட்சி அளித்துள்ளனர் அவர்களில் முக்கியமானவர் வியாசராவார் மஹாபாரதத்தில் ஒருவர் குழம்பி வியாசரை நினைக்கும் போது பிரசன்னமாவார் ஒருவர் நினைப்பதை அறிந்து கொள்வதே டெலிபதி அவ்வாறே பல மைல் தூரத்திற்கு அப்பாலும் வியாசரால் அறிய முடிந்ததே )
Clear vision : எங்கோ ஒரு இடத்தில் நடப்பதை இங்கிருந்தே மனதால் பார்ப்பது
(இங்கு நான் கூறவேண்டிய அவசியமே இல்லை சஞ்சயனே சிறந்த எடுத்துகாட்டு மேலும் ஒவ்வொரு அவதாரமும் விஸ்வரூபமும் நிகழும்போது முனிகள் அனைவரும் காண்பார்கள் )
Precognition : எதிர்காலத்தை அறிவது
(கல்கி அவதாரம் பற்றி உரைத்தவர்களே சிறந்த உதாரணமாவர் )
Retrocognition : கடந்த காலத்தை அறிவது
(கடந்த காலம் மட்டுமல்ல ஜென்மங்களேயே கூறியுள்ளனர் )
Psychometry : ஒருவரை அல்லது ஒரு பொருளை தொடுவதின் மூலம் அவர்கள் பற்றிய தகவல்களை அறிவது
(பார்வையே போதுமானது )
intuition : ஒரு விசயம் பற்றிய உண்மைகள் திடீரென மனதில் தோன்றும்
(பல முனிவர்கள் குரு இல்லாமல் பல வித்யைகளை கற்றது இவ்வாறே )
மேற்கூறியவற்றில் Telepathy தவிர மற்ற எதையும் நிகழ்காலத்தில் எவரும் செயல் படுத்தவில்லை
எனில் முனி புங்கவர்கள் மனதின் சக்தியை சரியாக பயன்படுத்தினார்களா என்றால் ஆம் தங்களின் கடின தவங்களால் அடைந்த மனவளர்ச்சியை செவ்வனே பயன்படுத்தினர் என்பதே உண்மை
இன்று மனிதர்கள் அடைந்த உச்சமானது என்னவென்றால் காற்றில் உள்ள சக்தியை பிரித்தெடுத்து மற்ற மனிதனுக்கு உள்ள சிறிய உடல்நல குறைபாடுகளை (காய்ச்சல், சோர்வு முதலியவை ) போக்குவதே சுற்றுபுறம் அனைத்திலும் அதிக அளவு சக்தி இருப்பவை மனிதன் தற்போதே உணர தொடங்கியுள்ளான் ஆனால் நம் முன்னோர்களால் சுற்றி உள்ள சக்தியை ஒன்றினைத்து ஒருவரை பஸ்மமாக்க கூட முடிந்தது
வெளியில் உள்ள சக்திக்கே இப்படி என்றால் இன்று பார்க்கும் யுரேனியத்தின் சக்தி போன்ற பெரும் சக்திகளால் அவர்கள் அஸ்திரங்களை உருவாக்கி இருக்கலாம்
பராசரரை பொறுத்த வரை வியாசரின் பிறப்பின் போது சுற்றி இருந்த இடத்தை பனிமூட்டத்தால் மூடினார் எனில் அங்கு அவர் கால சூழ்நிலையையே மாற்றினார் அவ்வகையில் சுற்றியுள்ள வெப்பத்தையும் சூரிய ஒளியின் மூலம் பனி மூட்டம் கலையாத அளவு கட்டுபாட்டுக்குள் வைத்தார்
இதன் தார்ப்பரியம் என்னவெனில் சுற்றியுள்ள சூழ்நிலையையே ஒருவரால் மாற்றமுடியும் அறிவியல்படி காற்றில் உள்ள அணுக்களை விருப்பப்படி மாற்றுவது. இதன் ஆழம் யோசித்தால் விளங்கும் (விஸ்வாமித்ரரால் நட்சத்திரங்களையும் உருவாக்க முடிந்தது)
அவ்வளவு ஏன் முனிவர்களை விடுங்கள் பீஷ்மர் மற்றும் துரோணரே தங்கள் பிராணனை தாங்களே வெளியேற்றவும் செய்தனர்
மேலும் அஷ்டசித்திகளுக்கும் இப்படி அறிவியல் பின்னணி உண்டு வானில் பறப்பது முதல் யாகத்தில் சக்தியை உருவாக்குவது வரை அனைத்தையும் யோசித்தால் விளங்குவது இதுவே
தினமும் செய்யும் 2 நிமிட தியானத்திற்கே எவ்வளவு திறன் உள்ளது என்பதை நாம் அறிவோம் அவ்வகையில் அவர்களின் வருடக்கணக்கான தவத்திற்கு உள்ள சக்தியே இது
இப்பொழுது அல்ல இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இச்சக்தியை நமது விஞ்ஞானத்தால் இதை அறிய இயலாது
மேற்கூறிய அனைத்து கருத்துகளுமே எனது சொந்த கருத்துகளே தவறாக இருப்பின் மன்னிக்கவும்
அறிவியல் ரீதியில் தபோ பலத்திற்கான விளக்கமே மேற்கூறியது
Super.. Thanks for the information.
ReplyDelete