Friday, September 3, 2021

🏹 #தேவலோகத்தில்_அர்ஜுனன்_பெற்ற_ஆயுதங்கள் 🏹

 🏹 #தேவலோகத்தில்_அர்ஜுனன்_பெற்ற_ஆயுதங்கள் 🏹 


         🏹 விரித்திராசுரனின் மீது இருந்த பயத்தினால் தேவர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும் #இந்திரனுக்கு அளித்தனர்.


         🙏இந்திரனிடம் ஒன்றாக இருக்கும் அவ்வாயுதங்கள் அனைத்தையும் தவத்தின் மூலம் அடைய வேண்டும் என யுதிஷ்டிரன் கூற தவமேற்க செல்கிறார் அர்ஜுனன்.


         💘 அர்ஜுனன் மட்டுமே #வீரத்தின் காரணமாகவும், #தவத்தின் காரணமாகவும் தேவர்களை #காணும் தகுதி படைத்தவர்.


         🔥ஏற்கனவே காண்டவ தகனத்தில் இந்திரனிடம் அனைத்து ஆயுதங்களையும் வரமாக கேட்டவர் தான் இருப்பினும்,

         🔱 " மஹாதேவர் உன்னில் எப்போது #மனநிறைவு அடைவாரோ அப்போது எனது அனைத்து ஆயுதங்களையும் உனக்கு தருவேன் " என்று இந்திரன் வாக்களித்து இருந்தார்.


         🔱அர்ஜுனனின் கடும் தவத்தில் மகிழ்ந்த ஈசன் #பாசுபதாஸ்திரத்தை அளித்து " இந்திரலோகம் செல் " என கட்டளையிடுகிறார்.  


         🔱ஈசனின் பாசுபதத்தை பெற்றபின்னர் #லோக_பாலகர்கள் தங்கள் ஆயுதங்களை தானாக வந்து அளிக்கின்றனர்.

         

💘யமன் - காலதண்டம்

💘வருணன் - வருணபாசம் 

💘குபேரன் - அந்தர்த்தானாயுதம்


         🛕இதன்பின்பு இந்திரலோகம் செல்கிறார் அர்ஜுனன். அங்கு வரத்தின் படியும் #மஹாதேவரின் ஆசியினாலும் தேவர்களின் அனைத்து ஆயுதங்களையும் பெறுகிறார். 


     🛕ஏற்கனவே அங்கு பெற்ற ஆயுத விளக்கம் பற்றி போன பதிவில் பார்த்தோம் 



         🏹 இறுதியில் இந்திரன் அஸ்திரங்கள் அளித்ததற்காக #குரு_தட்சணை கேட்க நிவாதகவசர்களையும், காலகேயர்களையும் கருவறுக்கிறார் அர்ஜுனன் .


         🏹 தேவர்களின் அனைத்து ஆயுதமும் இந்திரனிடம் இருந்தது. #அவையனைத்தையும் அர்ஜுனன் பெற்றார்.


         🏹 தேவர்கள் ஒவ்வொருவரின் முக்கியமான  ஆயுதங்களையும் பார்க்கலாம். 

        🏹 ஆனால் அது பதிவின் நீளத்தை மட்டுமே அதிகரிக்கும் ஆகையால் தேவலோகத்தில் பெற்ற சில முக்கிய ஆயுதங்கள் பற்றி மட்டும் பார்ப்போம்.. 


#வைஷ்ணவாஸ்திரம் 


         🐚 விரித்திரனை எதிர்த்த இந்திரனுக்கு தன் சக்தியில் ஒரு பாகத்தை அளித்தார் மஹாவிஷ்ணு அதுவே வைஷ்ணவாஸ்திரம்.

வைஷ்ணவாஸ்திரத்தை பொறுத்தவரை மஹாவிஷ்ணுவை தவிர வேறு எவராலும் தடுக்க முடியாதது .


#வஜ்ரம் 


         💪ததீசி முனிவரின் எலும்பில் செய்யப்பட்ட #வஜ்ரம் ஈடு இணையற்ற ஆயுதம் ஆகும். அர்ஜுனன் இதை நிவாதகவசர்களின் யுத்தத்தில் உபயோகித்தார் .

         💪போரில் அர்ஜுனனின் தேர்ச்சக்கரத்தையும்  குதிரைகளையும் பூமிக்கடியிலிருந்து நகர விடாமல் பிடித்த நிவாதகவசர்கள் பெரும் பாறைகளால் அவர்களை மூடி கொல்ல முயன்றனர் .

         💪 அர்ஜுனன் வஜ்ரத்தை ஏவியதால் அர்ஜுனனின் அம்புகள் வஜ்ரத்தின் சக்தியை பெற்று நிவாதகவசர்களின் #மாயத்தையெல்லாம் அழித்து அவர்களை கொன்றது .


#யமனின்_காலதண்டம் 


          💥யமனின் காலதண்டத்தை #எவராலும் தடுக்க முடியாது. யமனின் #சக்தி வாய்ந்த ஆயுதம் என்றபோதே இது தெரிந்து இருக்கும் 

          💥இராவணன் மீது இதை யமன் உபயோகிக்க தயாராக பிரம்மதேவரே நேரில் தோன்றி காலதண்டம் இராவணனை கொல்லும் சக்தி படைத்தது ஆனால்,

           💥நான் அளித்த வரம் #பொய்யாகி விடும் என்றதால் யமன் காலதண்டத்தை உபயோகிக்காமல் அவ்விடத்தில் இருந்து மறைகிறார்.

(உத்தர காண்டம், இராமாயணம்)


#வருண_பாசம் 


         🌧️வருண பாசத்தை வைத்து #யமனையே கூட கட்டலாம் இதிலிருந்து ஒருவரால் கூட தப்பிக்க முடியாது. 

         🐍இராம-லட்சுமணர்களை கட்டிய நாக பாசத்தை கூட கருடன் வந்தால் செயலிழக்க செய்யலாம் ஆனால் வருணப்பாசத்திற்கு அப்படி #பலவீனம் எதும் இல்லை 


#ஐந்திரிய_மாதவ_மற்றும்_மகேந்திராஸ்திரம் 


         ♐ மூன்றுமே அம்பு மழைபொழியும் அஸ்திரங்கள் தான் ஆனால் மூன்றையும் #தடுக்கும் அஸ்திரங்கள் இல்லை


#கந்தர்வஸ்திரம் 


         💘இதை அர்ஜுனன் தும்புரு என்ற கந்தர்வர்னிடம் பெற்றார். அர்ஜுனனிடம் இருந்து அபிமன்யு பெற்றார்.

         💘ஒரு வீரனுக்கு நினைத்து பார்க்க முடியாத #வேகத்தை இது கொடுக்கும் இதனால் எதிரிகளால் அவனை பார்க்க கூட முடியாது 


#சம்மோஹணம் 


          😴விராடத்தில் அனைவரையும் தோற்கடித்த பிறகு அர்ஜுனன் அனைவரையும் #மயங்க வைக்க உபயோகித்தது தான் இந்த சம்மோஹனம். 

         😴 இது மன்மதனின் அஸ்திரம் எவராலும் தடுக்க முடியாத அஸ்திரம். #பீஷ்மரால் மட்டுமே இதை தடுத்து மயங்காமல் இருக்க முடிந்தது. 


#சக்தியாயுதம் 


          ⚜️கர்ணனுக்கு இந்திரன் அளித்த அதே சக்தி ஆயுதம் தான் 

இந்திரனின் அனைத்து ஆயுதங்களையும் வரமாக கேட்டான் அர்ஜுனன்.                        

          ⚜️அவ்வகையில் #சக்தியாயுதமும் இதில் அடங்கும். கர்ணனிடம் சொல்லும்போதும் வஜ்ராயுதத்தை தவிர வேறு எதுவேண்டுமானாலும் கேள் என்றே இந்திரன் கூறினார்.

        ⚜️ அத்தகைய வஜ்ரத்தையே அளித்தபோது இதை கொடுத்து இருக்க மாட்டாரா என்ன??? 


    😍தன்னிடம் எண்ணிலடங்கா ஆயுதங்கள் இருந்தாலும் இந்திரனுக்கு கொடுத்த வாக்கினால் கடைசிவரை #மனிதர்கள் மீது அதை உபயோகிக்க எண்ணாத அர்ஜுனன் என்றும் போற்றப்படவேண்டியவர்🙏🙏🙏 



#பிரம்மசிரஸ்களின்_நாயகன்_பீபத்சு....

 


     🤔அதென்ன பிரம்மசிரஸ் 

    👤அதாவது சிரஸ் என்றால் தலை 

     👤பிரம்மசிரஸ் - பரப்பிரம்மனின் தலையை போல அழிக்கும் சக்தியை கொண்ட அஸ்திரம் அனைத்துமே இந்த வகையை சேர்ந்தது தான் ..

    🌏அதாவது முழு அண்டத்தையும் #கண்ணிமைக்கும் நேரத்தில் அழிக்கவல்ல அஸ்திரங்கள் .

     🙏துரோணர் கடும்தவத்திற்கு பிறகு இதை அகஸ்தியரிடம் இருந்து பெற்றார்.
     ❤அர்ஜுனனுக்கு விரும்பி கொடுத்ததை கண்ட அஸ்வதாமனும் கேட்க அஸ்வதாமனுக்கும் கொடுத்தருளினார் ....
✨✨✨✨✨✨✨✨✨✨✨
🔱 #ஈசனிடம்_பெற்ற_பிரம்மசிரஸ்கள்......
     💘இருமுறை ஈசனை சந்தித்து வரமாக அஸ்திரம் பெறுகிறார் அர்ஜுனர்.. 

     💘ஒன்று #வனவாசத்தில் தவமிருந்து கிராத வடிவில் வந்த ஈசனை மகிழ்வித்து பெறுவது

     💘மற்றொன்று அபிமன்யு கொல்லப்பட்டபின் ஜெயத்ரதனை கொல்வேன் என சபதம் எடுத்த இரவு கிருஷ்ணனுடன் #கைலாயம் சென்று வாங்குவது .

#அர்ஜுனன்_மறந்தாரா???  
       🏹அர்ஜுனர் பாசுபதத்தை மறந்தார் என எங்கும் கூறவில்லை. 
      🏹மாறாக நல்ல #நினைவுத்திறனை கொண்டவன் என்ற பாராட்டே உள்ளது .
  
      🏹துரோணர் சிறுவயதில் அளித்த பிரம்மசிரஸை சரியாக விடுத்து திரும்ப பெற்றவர்.
      🏹 ஈசன் அளித்த அஸ்திரத்தை எப்படி மறப்பார். 
ஒரு வேளை மறந்தார் என்றால் ஈசன் அளித்த வரமே #பொய்யாகிவிடும்.

🏹 #பாசுபதத்தின்_இருவகை...

      🏹இரண்டு பாசுபதம் எனில் இரண்டிற்கும் வித்தியாசம் என்ன ???

    🌺யது வம்சத்தில் பிறந்தவர்கள் எப்படி யாதவர்களோ !!
    🌺அவ்வாறே #பசுபதினாதரின் அஸ்திரம் பாசுபதம் என்ற பெயர் பெறும் .

#யுத்த_காலத்தில்_பெற்றது....

     🏹13-ம் நாள் இரவில் அர்ஜுனன் பெற்றது தான் ஈசனின் தனிப்பட்ட அஸ்திரமான பாசுபதம் .

  #இதன்_தனித்தன்மை  :
     💜அசுரர்களை அழித்தபின் வில்லுடன் சேர்த்த இதை #அமிர்தம் நிறைந்த குளத்தில் எறிகிறார் ஈசன் 

      🐍அஸ்திரமானாலும் இதன் ரூபம் #1000 தலைகளை கொண்ட நாகமாகும். அர்ஜுனன் பார்க்கும்போது அதே ரூபத்தில் இருந்தது பின் அஸ்திர ரூபமானது .

      🐍அவ்வாறே #உபமன்யு ரிஷிக்கு ஈசன் காட்சி அளித்தபோதும் 1000 தலைகளை கொண்டதாக தான் பாசுபதம் காட்சியளித்தது .

     ☝சரி இது தான் ஈசனின் தனிப்பட்ட அஸ்திரம் என்றால், வனபர்வத்தில் அர்ஜுனன் தவமிருந்து கிராத ரூபத்தில் ஈசன் தோன்றி அளித்தது என்ன அஸ்திரம்...?

🏹#வனவாசத்தில்_பெற்றது......
     💙பசுபதினாதரின் அஸ்திரம் ஆதலால் அதுவும் பாசுபதம் என்ற பெயர் கொண்டது தான் ஆனால் இதற்கு #ரௌத்திரம் என்ற பெயரும் உண்டு .
     💙ஈசனுக்கு பிடித்த அஸ்திரமாகும் ஊழிக்காலத்தில் அனைத்தையும் அழிப்பதும் இதுவே 

      💙ஆனால் பாற்கடலில் அமிர்தத்திற்கு பின் எழுந்ததே இந்த அஸ்திரம். தன் தவசக்தியால் இதை ஈசன் தன்வசப்படுத்தினார்.

From Bori..
      "It is known as Brahmashira and
Rudra obtained it after great austerities. That terrible weapon arose with the ambrosia and Savyasachi has now obtained it."

( Vana parva 89 Sloka 10,11 )
  
   👆ஆனால் இதுவும் பிரம்மசிரஸ் வகையை சேர்ந்தது தான் .
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

     🙏அர்ஜுனன் பிரம்ம சிர ஆயுதத்தை வரமாக கேட்கும்போது #உற்பத்தி_செய்யும் என கூறினார் .(அஸ்வத்தாமனின் நாராயணாஸ்திரம் போல)

     ♠ஹிரண்யபுரத்தை அழிக்க இதை ஏவும்போது வானில் துவங்கி தேவர்கள், ஆவிகள் மற்றும் அசுரர்கள் வரை வெளிப்பட்டு அனைவரையும் அழித்து பின் மறைகின்றனர். 

      ♠எனில் இரண்டுமே அதாவது #அற்புத_ஆயுதங்கள் மற்றும் #அழிக்கும்_ஜீவன்கள் இரண்டுமே இவ்வஸ்திரத்தினால் சாத்தியம் ...

      🐍பாசுபதத்திற்கு 1000 தலை கொண்ட நாக ரூபம் இருப்பது போல இவ்வஸ்திரத்திற்கும் விஸ்வரூபம் உண்டு .

       ♣மூன்று தலைகள், ஒன்பது கண்கள், 6 கரங்கள் கொண்ட ரூபமே இந்த அஸ்திரம் .

(கிட்டதட்ட பாணாசுரன் யுத்தத்தில் 
கிருஷ்ணன் மீது ஈசன் விட்ட #சிவஜ்வரத்தின் ரூபமும் இது தான்
      🌟ஈசனுக்கும் கிருஷ்ணனுக்கும் நடந்த முழு யுத்தத்தை காண ....👇👇👇👇
http://seetharaman007.blogspot.com/2017/06/100.html?m=1

      🔥 ஈசனின் கருத்துப்படி இந்திரன், யமன் கூட இந்த அஸ்திரத்தை அறியமாட்டார்கள். குறைந்த பலம் கொண்ட எதிரியின் மீது இதை விட்டால் முழு அண்டத்தையும் எரித்துவிடும் ...

      🔥இவ்வளவு ஏன் அர்ஜுனன் அதை பெற்றபின்னர் அவனிடம் இவ்வஸ்திரம் சேர்ந்ததுக்கே உலகம் #நடுங்கியது. தேவர்களும் தானவர்களும் கூட அஞ்சினர் .

From Bori.........
    At that, the entire earth, with its
mountains, forests, trees, oceans, regions of groves, villages, cities and towns, began to
tremble. When the moment came, the sounds of thousands of conch shells, drums and
kettledrums were heard. A great whirlwind occurred. The gods and the demons saw the
embodied form of the blazing and terrible weapon by the side of the immensely energetic Pandava.

Vana parva 41 sloka 20-22.
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡   மேலே கூறப்பட்டுள்ள தகவல்களின் படி.....
       💘துரோணர் அளித்த பிரம்மசிரஸோடு இவ்விரண்டையும் சேர்த்து மொத்தம் #மூன்று பிரம்மசிரஸ் வகையை அறிந்தவர் அர்ஜூனரே ஆவார் .

     💘ஏற்கனவே மும்மூர்த்திகளிடம் அர்ஜுனர் பெற்ற அனைத்து அஸ்திரங்களையும் முன்பு பார்த்தோம்.. 👇👇👇👇👇👇

https://www.facebook.com/ArjunanTheGreatestWarrior/videos/271142677595442/

#சில_தவறான_புரிதல்கள் ………

1️⃣துரோணரும் பாசுபதம் விடுத்தாரா???? ...
      🔱முதல் விசயம் ஈசனே அர்ஜுனனிடம் """இந்திரனோ யமனோ இதை அறியாத போது #மனிதர்கள் எப்படி அறிவார்கள்""" என உரைத்தார்.      
      🏹 அர்ஜுனனும் பின் இதை உத்யோக பர்வத்தில் உறுதி படுத்தினார் 

👉இரண்டு இருவருக்கும் நடக்கும் போரில் எல்லாம் தாண்டியும் முடியவில்லை என்றாலே  பிரம்மாஸ்திரம் மற்றும் பிரம்மசிரஸ் போன்ற பெரும் அஸ்திரங்களை போரில் பயன்படுத்துவார்கள்.

      🍁ஆனால் இப்போரில் துரோணர் ஐந்திரம், தாஷ்டிரம், வாயவ்யம், யாம்யம் ஆகிய ஆயுதங்களோடு ஒன்றாகவே பயன்படுத்தினார் .

From Bori....
      Drona could not establish his
superiority over Pandava in any way. The one who was skilled about the motions of
weapons then invoked special weapons—aindra, pashupata, tvashtra, vayavya and
varuna. However, as soon as these were released from Drona’s bow, Dhananjaya
destroyed them. 

Drona parva 163 27 28

👉மூன்று இந்த அஸ்திரம் வெளிப்பட்டவுடனே  அதனை அர்ஜுனன் அழிக்கிறாரே தவிர வேறு எந்த பெரிய அஸ்திரத்தையும் உபயோகிக்கவும் இல்லை எந்த மாற்றமும் #இயற்கையில் வரவும் இல்லை .

      👆எனவே துரோணர் விடுத்த இந்த ஆயுதம் பாசுபதம் என்ற பெயரை கொண்ட ஒரு வகை ஆயுதம் தான் ஈசனின் அஸ்திரம் இல்லை 

2️⃣ரௌத்திரம் பற்றியது....

     🎯கண்ணன் மேன்மையான ஆயுதங்களை உபயோகிக்க சொன்னதும், அர்ஜுனன் கர்ணன் மீது ரௌத்திர அஸ்திரத்தை விட வில்லில் இணைத்த போது கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் புதைகிறது. இதனால் அர்ஜுனர் அதை திரும்ப பெற்றார்.

From Bori.....
     Kiriti united this with roudrastra and wished to shoot it. But, in that great battle, the earth swallowed up one of the wheels of Radheya’s chariot.

(karna parva 66 sloka 59)

    🎯அர்ஜுனன் ஹிரண்யபுரத்தின் மீது ஏவியபோது கண்ட ரூபம் இங்கு காணப்படவில்லை.

    🎯அவ்வாறே இதை மனிதர்களின் மீது ஏவக்கூடாது அனைத்து ஆயுதங்களும் கலங்கடிக்கப்பட்டால் ஒழிய இதை உபயோகிக்கக்கூடாது என்பது ஈசனே கூறியது.

From Bori....
    Mahadeva told me, ‘This should never be used against humans. O
Dhananjaya! This powerful weapon should only be used if you are hard-pressed

( Vana parva 163 sloka 49,50)

     😘உண்மையில் அர்ஜுனன் 70 % க்கு மேலான அஸ்திரங்கள் #உபயோகிக்கவே இல்லை 
வஜ்ரம், வைஷ்ணவம் ஏன் துரோணர் அளித்த பிரம்மசிரஸ் கூட இருக்கையில் இவ்வஸ்திரத்தை அர்ஜுனர் நிச்சயம் விடுத்து இருக்க மாட்டார் .

       ♐பிரம்மாஸ்த்திர பயன்பாட்டிற்கு பின்னும் மேன்மையான அஸ்திரத்தை பயன்படுத்து என கிருஷ்ணன் கூறியதால் இது ஒரு வேளை #ஏகதச_ருத்ரர்களின் ஆயுதமாக இருக்க வேண்டும் மாறாக அர்ஜுனன் ஈசனிடம் பெற்ற அஸ்திரமாக இருக்க முடியாது.

      🙏ஏனென்றால் இந்திர லோகத்தில் அர்ஜுனன் ருத்ரர்களையும் சந்திக்கிறார் ...........

From Bori....
    On Indra’s command, Partha travelled along it and was
praised in every direction. The Sadhya, Vishvas,Maruts, Ashvins, Adityas, Vasus, Rudras, unblemished brahmarshis, many rajarshis, the kings led by Dilipa,Tumburu,Narada and the gandharvas Haha and Huhu were there.The descendant of the Kuru lineage showed homage to all of them in the appropriate manner.
( vana parva 44 sloka 12-15)  
( முழு பதிவு விரைவில்)...
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

     ☝ஆனால் மேல் குறிப்பிட்ட அஸ்திரங்களை தனது கொள்கையில் தவறாத அர்ஜுனன் போரில்  உபயோகிக்கவில்லை .

    🏹அஸ்வதாமனின் பிரம்மசிரஸை தடுக்க கிருஷ்ணனின் சொல்லின்படி தனது பிரம்மசிரஸை விடுகிறார் அர்ஜுனன்.
 
    💘வியாசரின் ஒரே சொல்லுக்காக அஸ்வதாமன் தனது அஸ்திரத்தை திருப்பி அழைக்க முரண்டுபிடித்தாலும்  பாண்டவர்களின் மரணத்தை பொருட்படுத்தாமல் முதல் ஆளாக தனது அஸ்திரத்தை திருப்பி அழைத்தார் தனஞ்சயன்.

     💪பிரம்மசிரஸை திரும்ப பெறுவது இந்திரனாலும் முடியாத காரியம்.
      😍ஆனால் தான் பின்பற்றிய #பிரம்மசரிய விரதத்தால் அர்ஜுனனால் திரும்ப பெற முடிந்தது என அனைவருமே அவனை போற்றுகின்றனர் .

     😍எனில் தன் உயிரை பணயம் வைத்து வியாசர் மற்றும் நாரதரின் சொல்லுக்காக பிரம்மசிரஸை திருப்பி அழைத்தார் அர்ஜுனன்

♣இதை கண்ட வியாசர் ....
        🏹"""அர்ஜுனன் பெரும் ஆபத்தான சூழ்நிலையிலும் இதை உபயோகிக்கவில்லை.
    தற்போதும் உன் அழிவிற்காக அவன் பயன்படுத்தவில்லை

      🏹 அர்ஜுனனால் உன் ஆயுதத்தை கலங்கடிக்க முடியும் ஆனாலும் #உயிரினங்களின்_நன்மை கருதி அவன் தன் ஆயுதத்தை திருப்பியழைத்தான் அவ்வாறே நீயும் உன் ஆயுதத்தை திருப்புவாய்'""" என்கிறார் 

     🤰🏻ஆனால் திருப்பமுடியாத அஸ்வதாமனின் அஸ்திரம் உத்தரையின் கர்ப்பத்தில் விழுகிறது .

     💥வஜ்ரம் உருவாக காரணமான ததிசீ முனிவரின் சக்தியிலிருந்தும் ஒரு பிரம்மசிரஸ் உருவாகியது என்றும் உள்ளது .
(சிவமஹா புராணம் மற்றும் ஸ்காந்த புராணத்தின் படி) ஆனால் அதன்பின் என்னவானது எனத்தெரியவில்லை ..

    💥இவையில்லாமல் பிரம்மசிரஸ்களில் மிச்சம் இருப்பது நாராயணாஸ்திரம் மட்டும் தான் .

     😍நாராயணனை கூட்டாளியாக கொண்ட நரனின் அவதரிப்பான அர்ஜுனனுக்கு  #நாராயணாஸ்திரம் பெறுவது ஒரு பொருட்டல்ல .

     💘ஒவ்வொரு விசயமும் இங்கு மூல நூலை ஆராய்ந்து இடைசொருகலை நீக்கி வெளியிட்ட Bori Critical edition வைத்தே சொல்லப்படுகிறது.

      💘இருப்பினும் சில முக்கிய விஷயங்களுக்கு மட்டும் தெளிவிற்காக இணைக்கப்பட்டுள்ளது.

Monday, May 17, 2021

பாகுபாடற்ற பாரதம் முடிவுரை

 #பாகுபாடற்ற_பாரதம் முடிவுரை




💐 தேவையானவை அனைத்தும் சொல்லப்பட்டது என்றே நினைக்கின்றேன்.

👑 மஹாபாரதம் ஒரு புண்ணிய காவியம் மட்டுமில்லாமல் வாழ்வியல் முறைகளைக் கூறுவதிலும் தன்னிகரற்ற ஒன்றாகும்.

இங்கு ஒரே மனநிலை, ஒரே கொள்கை கொண்டவர் என எவரும் இல்லை.

தெளிவாக ஆராய்ந்தால் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பாதை, தங்களுக்கென ஒரு கொள்கை அமைத்து வாழ்ந்து அவ்வழியில் செல்வதால் வரும் நன்மை தீமைகள் என்ன என்பதை சொல்லாமல் காட்டிவிட்டு செல்கின்றனர்.

🌻 ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியிலும் பாரதத்தை பார்த்து அதில் வரும் பிரச்சனைகள் அவர்களின் நிலைகள் குறித்து ஆராய்ந்து படிப்பது ஒருவருக்கு வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும்.

🌺 காலத்தின் போக்கில் மஹாபாரதத்திலும் வர்ண பாகுபாடு என்ற கரை படிந்தது . கதைகளை சிறப்பாக்க களத்தில் வில்லனை சேர்ப்பதை போல சில நிகழ்வுகளில் வர்ணத்தை திணித்து பேசினர். அதில் முக்கிய பங்கை தொலைகாட்சி தொடர்கள் வகித்தன!

அதை துடைத்தெறிவதற்காக எழுதப்பட்டதே இந்த தொடர்.

👑 இத்தொடரில் விளக்கப்பட்ட விஷயங்கள்...

வர்ணம் என்பது தொழில் சார்ந்து வந்ததே!
ஒருவன் தனது தொழில் மூலமாக வர்ணத்தை மாற்றலாம்.
சூத்திரன் பிராமணனாகலாம்
ஏன் அரசனாக கூட ஆகலாம்.

காட்டுவாசிகள் மற்றும் மலைவாசிகளில் கூட இருந்த அரசர்கள் பற்றியும் ஏகலைவனுக்கு நிகழ்ந்தது அவன் வனவாசி என்பதால் இல்லை என்பதையும்
பாஞ்சாலி சுயம்வரத்தில் நடந்தது என்ன...?
அதில் உள்ள பாரபட்சமின்மை பற்றியும்

கர்ணனின் தந்தை அதிரதன் அரசவம்சத்தை பற்றியும் கர்ணனுக்கு நிகழ்ந்தவை எதுவும் வர்ணபாகுபாட்டால் இல்லை என்பதையும் தெளிவாக பார்த்தோம்.

இந்த தெளிவுரைகள் மூலமாக நிச்சயம் மஹாபாரதத்தில் பாகுபாடு இல்லை என விளங்கி இருக்கும்.

🌷 மஹாபாரதம் இயற்றிய கிருஷ்ண துவைபாயனரே மீனவ பெண்ணிற்கு பிறந்தவரே! அம்மீனவ பெண்ணையே அரசன் சந்தனு மணந்தான் அவளின் வழிவந்ததே குரு வம்சம்.

🍀 விதுர நீதி உரைத்த விதுரனும் பணிப்பெண்ணின் மைந்தனாவான். கடைசிவரை அமைச்சராய் இருந்து அனைவராலும் மதிக்கப்படும் மனிதனானான்.

🌸 குருசேத்திரத்தில் பிழைத்த ஒரே கௌரவன் ஆன யுயுத்சு. திருதராஷ்டிரனுக்கும் பணிப்பெண்ணுக்கும் பிறந்தவனாவான். பரிட்ஷித்தையும், ராஜ்யத்தையும் அவனிடம் விட்டே பாண்டவர்கள் ஆயுளை முடிக்கச் செல்கின்றனர்.

👑 ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் மின்னி நிற்கும் ஒரு மகாகாவியம் மகாபாரதம்! பாகுபாடில்லா பாரதம்! வஞ்ச நெஞ்சன் சகுனியின் மருமகன் துரியனும், அஞ்சா நெஞ்சன் பார்த்தனின் அண்ணன் தர்மனும் விட்டுச்சென்றிருப்பதெல்லாம் என்னைப்போல் வாழ்ந்து ஒழியாதே என்றொரு கருத்தையும்... என்னைப் போல் வாழ் என்றொரு கருத்தையுமே!

மஹாபாரத காலத்தில் எங்குமே வர்ண பாகுபாடு பார்க்கப்படவில்லை ஒரு வேளை பார்க்கப்பட்டிருந்தால் அதன் தாக்கம் அந்த கதாபாத்திரத்திடம் தெரிந்து இருக்கும். அப்படி எங்கும் நிகழவில்லை எனக் கூறி இத்தொடரை முடிக்கிறேன்.

🌸 இத்தொடர் எழுத உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அந்த பரந்தாமன் காட்டிய கீதையின் வழியே வாழ்வோம்! வாழ்க வையகம்!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

பாகுபாடில்லா பாரதம் - 5

 #பாகுபாடில்லா_பாரதம் - 5


முந்தைய பதிவு


🌸 மஹாபாரதத்தில் பாகுபாடு இல்லை என்றவுடன் பலர் ஏன் வியாச பாரதம் படித்தவர்கள் கூட இழுப்பது #கர்ணனையே!

👇இப்பதிவில் கொஞ்சம் ஆழமாக இலைமறை காயாக உள்ள விஷயங்களை ஆராய்வோம்.

🙏முதலில் நீங்கள் கண்ட தொலைகாட்சித் #தொடர்களையும் உங்கள் ஆழ்மனதில் இருக்கும் #எண்ணங்களையும் கழட்டி வைத்துவிட்டு வாருங்கள். மனதில் அதை அசைபோட்டு கொண்டே இருக்கும் வரை நான் சொல்ல வருவது நிச்சயம் புரியாது....

💐 சரி விஷயத்திற்கு வருவோம்.
கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்றதாலேயே அவனுக்கு #உரிமைகள் மறுக்கப்பட்டன! என்பது பலரின் வாதம்

உண்மையில் #அதிரதன் என்பவன் யார்?

👑பேரரசன் யயாதிக்கு ஐந்து மகன்கள். அவர்கள் முறையே....

👑யது (இவரின் வழிவந்தவர்களே யாதவர்கள். அதாவது கிருஷ்ணனின் வம்சம்)

துர்வசு

அனு

திரஹ்யு

புரு (இவரின் வழி வந்தவர்களே #பௌரவர்கள். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் வம்சம்)

👑இங்கு மூன்றாம் மகனான அனுவின் வம்சத்தில் #27-வதாக வந்தவனே அதிரதன். இளமையைத் தர #மறுத்ததால் புருவை தவிர மற்ற மூவருக்கும் இராஜ்யம் இல்லை என யயாதி #புருவிற்கு அரியணை வழங்குகிறார்.

👑அனுவிற்கு பிறகு 12-வதாக வரும் பலியிடமிருந்து ஐந்து மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள் ஐவரும் முறையே #ஐந்து தேசங்களை உருவாக்குகின்றனர். அதில் ஒன்றே #அங்க தேசம்.

👑இதன்பிறகு அனுவின் வம்சத்தில் 21-வதாக வந்த #ஜயத்ரதன் என்னும் அரசன் பிராம்மணிய #சத்திரிய வம்சம் கலந்த ஸம்பூதி என்னும் பெண்ணை மணந்து விஜயன் என்பவளை பெறுகிறார். இதிலிருந்தே அவர்கள் #சூதர்கள் ஆகி இருக்க வேண்டும்.

🌷 சூதர்களின் வழியில் வந்த #சம்பன் எனும் அரசன் உருவாக்கிய நகரமே சம்பா நகரம். இந்நகரத்திலேயே குந்தி மிதக்கவிட்ட கர்ணன் கரை ஒதுங்க அவனை அதிரதன் தத்தெடுக்கிறார்.

(விஷ்ணுபுராணம் 4.18
மற்றும்
ஸ்ரீமத் பாகவதம் 9.23)

🌻 அதாவது அங்க தேசத்தின் தலைநகரத்தில் #அரசனின் வம்சாவழியிலே பிறந்த அடுத்த அரசனின் கரத்தில் கண்டெடுக்கப்பட்டான் கர்ணன். கர்ணன் கரையொதிங்கிய நேரம் #சூதனே அங்கு அரசனாக இருந்தான் என்று மஹாபாரதம் உரைக்கிறது.

அதிரதன் இல்லாதபட்சத்தில் அதிரதனின் தந்தையான #சத்தியகர்மன் அரசனாக இருந்து இருக்க வேண்டும்.

🌺 காலம் சூழல்கிறது
திக் விஜயம் சென்ற பாண்டு பல #தேசங்களை வெல்கிறார். அதில் சம்பா நகரமும் ஒன்று.

🌺பொதுவாகவே ஒரு நாட்டை தன் நாட்டோடு இணைக்கும்போது வென்ற அரசர்கள் தோற்ற அரசர்களுக்கு #பொறுப்பு அளித்து தக்க வைத்துக் கொள்வர்.

🌺திருதராஷ்டிரனின் நண்பனான அதிரதன் அப்படி தேரோட்டி ஆக்கப்பட்டவராக தான் இருக்க வேண்டும்.
🌺ஏனெனில் #தேரோட்டுவது மிகப்பெரிய கலை. அதனால் தான் அத்தனை பேர் இருந்தும் #கிருஷ்ணனும் சல்லியனும் தேர் ஓட்டினர்.

🌺அங்க தேசம் #குருக்களின் கீழ் இருந்ததால் தான் அவ்வளவு எளிதாக அதற்கு ஒரு அரசனை(கர்ணனை ) துரியனால் நியமிக்க முடிந்தது.

ஆகட்டும் முக்கிய விடயத்திற்கு வருவோம்......
👇👇👇👇👇👇👇👇👇👇👇
🌹 #அரங்கேற்ற_களத்தில் நடந்தது என்ன?

🌟குருகுலப் பயிற்சி முடிந்து இளவரசர்கள் தங்கள் #திறமையைக் காட்டுவதற்காய் கூடி நின்ற வேளையில், மற்றொரு இளைஞன் இளவரசனிடம் #யுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கிறான்.

🌟முதலில் அனைவரும் தங்கள் #விற்திறமையை காட்டுகின்றனர். பிறகு பீமனும் துரியனும் கதையுடன் நுழைகிறார்கள். உடனே மக்கள் இருவரின் பக்கமும் பிரிந்து நின்று உற்சாகப்படுத்துகின்றனர்.

🌟குருவல்லவா துரோணர்!
இருவரை பற்றியும் நன்கு அறிந்து வைத்து இருந்தார். நிச்சயம் இது #சண்டைக்கு வழி வகுக்கும் என இருவரையும் அஸ்வதாமன் மூலமாய் தடுக்கிறார்.

(முதலில் பீமனுக்கும் துரியனுக்குமே அங்கே யுத்தம் #நடக்கவில்லை என்பதைத் தெளிவாகப் படித்தால் விளங்கும். )

#அர்ஜுனன்_திறனை காட்டியவுடன் யுத்தத்திற்கான அறைகூவல் வருகிறது.

🌹 யுத்தம் துவங்கப் போகிறது...

💘அர்ஜுனன் பக்கம் பாண்டவர்கள் துரோணர் நிற்க, கர்ணன் பக்கம் துரியோதனனும் அவன் சகோதரர்களும் நிற்கின்றனர்.

👉நன்றாக கவனியுங்கள். கர்ணன் ஒரு சூதன் என்பதால் நீ இளவரசனை #எதிர்க்ககூடாது என எவரும் தடுக்கவில்லை. ஆனால் இளவரசனை எதிர்க்க நீ யார்? உன் குலம் எது? என கிருபர் தொடங்குகிறார்.

👉இங்கு அரசனில்லை என்பது மட்டுமே பிரச்சனை என்பதால் தான் துரியன் உடனே கர்ணனை #அரசனாக்குகின்றான்.
👉வீரம் ஒன்றே அரசனுக்கான தகுதி என்பதே துரியனின் வாதம்.
(ஜராசந்தனும் வீரத்தில் வியந்ததால் தான் கர்ணனுக்கு மாலினி நகரைக் கொடுத்தான்)

☀யுத்தம் துவங்கும் நேரத்தில் சூரிய நாராயணர் அஸ்தமனமாகிறார்.

#முதல்_விசயம் .....

♣குருகுல இளவரசர்கள் தங்கள் திறனைக் காட்டுவதற்காக கட்டிய #அரங்கேற்ற களத்தில் கர்ணனின் திறனைக் காட்ட எவரும் தடுக்கவில்லை.... துரோணரின் அனுமதியுடன் தன் திறனைக் காட்டுகிறான்.

#இரண்டாவது ....

♣அது அரங்கேற்ற களம் ... யார் யாருடன் வேண்டுமானாலும் மோதும் #போட்டி அல்ல...
♣கர்ணன் தன் திறனைக் காட்ட மட்டும் அங்கு வரவில்லை... அர்ஜுனனிடம் #மோதவும் வந்து இருந்தான்.
♣யாரும் அங்கு #யுத்தத்திற்காக கூடவில்லை. ஆயினும் இளவரசனை யுத்தத்திற்கு அழைக்கிறான் ஒருவன்.
♣இருந்தாலும் கிருபர் தவிர மற்ற அனைவரும் யுத்தத்தை #ஆமோதிப்பது போலவே இருவர் பக்கமும் பிரிகின்றனர்.

♣கிருபரும் நீ ஒரு சூதன் அதனால் அனுமதி இல்லை போ என்று #உரைக்கவில்லை நீ யார்? உன் குலம் என்ன? என்று கேட்கிறார்.

உடனே துரியன் ...

🌺" பல்குனன் {அர்ஜுனன்} அரசனாக இல்லாத ஒருவனிடம் போர் புரிய விரும்பவில்லை என்றால், நான் கர்ணனை அங்க தேசத்தின் மன்னனாக்குகிறேன் " என கர்ணனை அரசனாக்கிறான்.

💢அரசன் ஆனவுடன் போட்டி துவங்கும் நிலையில் சூரியன் #அஸ்தமிக்கிறார் மாறாக யாரும் தடுக்கவில்லை.

🌻 தெளிவாக ஆராய்ந்தால் கிடைக்கும் விஷயங்கள் இவையே.. ...

♈ஒன்று கர்ணனை உன் திறனைக் #காட்டக்கூடாது என எவரும் தடுக்கவில்லை.

♉இரண்டு கர்ணன் #அரசனாவதையும் யாரும் தடுக்கவில்லை.

♈மூன்று அரசன் ஆனபின் அவன் #அர்ஜுனனுடன் யுத்தம் செய்வதையும் யாரும் தடுக்கவில்லை.

🌸 துரோணர் சூதன் என்ற முறையில் கர்ணனிற்கு வித்தை #அளிக்கமாட்டேன் என கூறவில்லை.
🌸துரோணரின் குருகுலத்திலேயே கர்ணன் கல்வி பயின்றான். மாறாக பிரம்மாஸ்திரம் அளிக்கமாட்டேன் எனக் கூறினார்.
🌸 ஏற்கனவே அஸ்தினாபுரத்திற்கு #அடிமையாகி இருக்கும் தேசத்தின் அடுத்த வாரிசிற்கு எப்படி பிரம்மாஸ்த்திரம் அளிக்க முடியும்?

🌟மேலும் பிரம்மாஸ்திரத்தின் சக்தி அளப்பரியது. அதனை அவ்வளவு எளிதில் #யாருக்கும் அளிக்க முடியாது.

🌟இதனால் தான் அத்தனை மன்னர்கள் போரிட்ட பாரத போரில் கூட வெறும் #6 பேர் மட்டும் தான் பிரம்மாஸ்திரத்தை உபயோகித்தனர்.

🌸 பரசுராமரும் கர்ணன் சூதன் என்ற காரணத்தால் #சாபம் வழங்கவில்லை.
🌸மாறாக தான் சூதன் என்பதை #மறைத்ததால் சாபம் அளிக்கிறார்.
🌸சத்திரியர்களை #வெறுப்பவரிடம் ஒரு அரச வம்சத்தை சேர்ந்தவன் தான் பிராமணன் என்று கூறி #பிரம்மாஸ்த்திரத்தை பெற்றான் என்றால் எப்படி சும்மா இருப்பார்?

(உடனே அவர் அவதாரம் தானே எப்படி தெரியாமல் போகும் என்ற கேள்வி வரும்.
பரசுராமர் #சக்தி ஆவேச அவதாரம்... இங்கு ஆவேச அவதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலுக்காக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒருவரின் உள்ளே பகவான் #விஷ்ணுவின் சக்தி பிரவேசிக்கும் )

🌷 சுயம்வரம் பற்றி ஏற்கனவே போன பதிவில் பார்த்தோம்



🌸 குருசேத்திர களத்தில் கூட சூதன் என்ற காரணத்தால் கர்ணனை பீஷ்மர் போரில் #பங்கேற்க கூடாது எனக்கூறவில்லை.பீஷ்மர் இருக்கும் வரை #யுத்தம்_புரியமாட்டேன் என்று கூறியது கர்ணனே.
🌸 பல மன்னர்கள் பங்கேற்ற போரில் சேனாதிபதி ஆவதும் #சாமான்யம் அல்ல. காரணம் போரில் அத்தனை மன்னர்களுக்கும் #தலைவன் சேனாதிபதி தான்.

🌸கர்ணன் சேனாதிபதி ஆக்கப்படுவதை யாராவது சூதன் என்ற காரணத்தால் #தடுத்தார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.
🌸துரோணரின் மகன் அஸ்வதாமனே கர்ணனை சேனாதிபதியாக வழிமொழிகிறான்.

👑 மேற்கூறியவைகள் மூலம் கர்ணன் #துன்பமெல்லாம் படவே இல்லை என்று #சொல்வதற்கில்லை. அவன் பிறந்த உடன் ஆற்றில் விடப்பட்டான். துரியனின் #நட்பால் நாசமடைந்தான்.

👉ஆனால் கர்ணன் பிறப்பால் தோன்றிய பாகுபாட்டினால் எதையும் #இழக்கவில்லை என்பதே உண்மை. அங்கு பாகுபாடு காட்டப்படவில்லை என்பதே சத்தியம்.

பாகுபாடில்லா பாரதம் - 4

 #பாகுபாடில்லா_பாரதம் :4


முந்தைய பதிவு


(சர்ச்சைக்குரிய #பாஞ்சாலி_சுயம்வரம்!)

கர்ணன் வில்லை எடுத்து குறி பார்த்து அடிக்கும் வேளையில் பாஞ்சாலி கூறியதாகச் சொல்லப்படும், "ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்" என்ற ஒரு வரி தான் #குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.

#முரண்பட்டதாக கருதப்படும் இந்த வரியை Bori Critical edition நீக்கியது.

அது என்ன? Bori Critical edition

🌺19 ம் நூற்றாண்டின் இறுதியில், எண்ணற்ற மகாபாராத நூல்கள் இந்தியா #முழுவதும் இருந்தாலும் ஒரு சரியான பொதுவான நூல் வேண்டும் என மஹாபாரத பிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முடிவெடுக்க அப்பொறுப்பை Bhandarkar Oriental Research Institute ஏற்கிறது.

🌺அவர்கள் உலகம் முழுக்க இருந்த 1259-க்கும் மேற்பட்ட மஹாபாரத நூல்களை 50 வருடம் ஆராய்ந்து எண்ணற்ற இடைசொருகல்களை நீக்கிய பின் 22-9-1966 அன்று அன்றைய ஜனாதிபதி சர்வபள்ளி #இராதாகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டதே இந்த Critical edition.

🌺பல காலம் #சமஸ்கிருதத்திலேயே இருந்த இந்த Critical edition 2010 ஆம் ஆண்டு பிபேக் தீப்ராய் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துவங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முடிவடைந்தது.

🌺இவர்கள் செய்த ஆராய்ச்சியில் திரௌபதி கூறியதாக சொல்லப்படும் #சூதனை ஏற்க மாட்டேன் முதலிய பலவரிகளை நீக்கினர்.

🌺மொத்தம் உள்ள 21 தேவநகரி ஏடுகளில் 3-ல் மட்டுமே இந்த வரி உள்ளதாகவும் அதுவும் ஆராயப்பட்டு பின்னால் சேர்க்கப்பட்டவையே என அறிவித்தனர்.

🌺வந்த மன்னர்கள் அனைவரும் #தோற்றபின்னரே அர்ஜுனன் செல்கிறார்.
இதில் கர்ணனும் அடக்கம் என்பதை பின்வரும் வரிகள் தெளிவாக உரைக்கின்றனர்.

Bori

Vaishampayana said, ‘When all the kings gave up attempting to string the bow, the great-
souled Jishnu arose from among the Brahmanas. On seeing Partha advance, with a
complexion resplendent like that of Indra’s flag, the chief Brahmanas shook their deerskins and created a loud uproar. Some of them were pleased. Others were displeased.

Others among them, who lived by their wisdom and were wise, told each other, “O Brahmanas! If #Kshatriyas like #Karna and #Shalya, who are famous in the world, have great strength and are well versed in Dhanur Veda, could not string the bow, how can this weakling Brahmana, with no knowledge of weapons, succeed?

♦முதலில் சூதன் என்பதும் #சூத்திரன் என்பதும் வேறு வேறு என்பதையும்
சூதன் என்றாலே #தேரோட்டி என்று சொல்வது தவறென்றும் அறியுங்கள்.

♦சூதனிலும் அரசர்கள் உள்ளனர். கர்ணனின் தந்தையான #அதிரதனும் ஒரு சூதர் #அரசனே. (இதை தெளிவாக அடுத்த பதிவில் காணலாம் )

♦சில அறிவிலிகளால் சேர்க்கப்பட்ட இதை வைத்தே பாகுபாடு உண்டென்று கூறுவர் பலர்....

♦இது இல்லை என கூறியாகிவிட்டது இனி அந்த சுயம்வரத்தின் பாகுபாடற்ற தன்மை குறித்து காண்போம்.

சுயம்வரத்தில் இரண்டு முறைகள் உண்டு.

1.ஒன்று பல அரசர்கள் கூடி நிற்க அதில் ஒருவரை மணப்பெண் தேர்ந்தெடுப்பாள்.

🌹விதர்ப்ப தேச இளவரசி தமயந்தி காட்டுவாசிகள் என்றழைக்கப்படும் #நிஷாதர்களின் அரசன் #நளனை தேர்ந்தெடுத்தாள்.
(கிருஷ்ணனின் மனைவியான ருக்மிணியும் விதர்ப்ப தேசமே)

2.மற்றொன்று குறிப்பிட்ட #வீரதீர சாகசம் புரிபவருக்கு பெண் மாலையிட்டு மனைவியாக வேண்டும். இதில் வீரம் மட்டுமே விஷயமே தவிர அவன் யார் என்பது #விஷயமில்லை பாஞ்சாலி சுயம்வரம் இப்படி நடைப்பெற்றதே.

👉கீழுள்ள விஷயங்களை சற்று உற்று நோக்குங்கள். சுயம்வரம் முடிந்தவுடன் நடந்த விசயங்கள் அதன் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர் (ஆதி பர்வம் 193 - 197)

💐 முதலில் அர்ஜுனன் அங்கே #அரசகுமாரானாக வரவில்லை. #மான் தோல் அணிந்து அவன் அர்ஜுனனா என என அத்தனை அரசர்கள் ஏன் கர்ணனாலேயே கூட கண்டுபிடிக்க முடியாத அளவு #விகாரமாக வந்தார்.

♠போட்டியில் வென்றபின் அர்ஜுனனை அவன் யார்? எந்த #குலம்? என கூட யாரும் கேட்கவில்லை. #வென்றதும் பாஞ்சாலியுடன் செல்கிறார்.

♠துருபதனை விடுங்கள்! #பாஞ்சாலியே அர்ஜுனனை யார் என கேட்கவில்லை. மாறாக அவன் அணிந்த மான்தோலை பிடித்துகொண்டு அர்ஜுனன் உடன் மகிழ்வாக செல்கிறார்.

♠துருபதனின் சொற்படி திருஷ்டதுய்மன் அவர்கள் யாராக இருப்பார்கள் என மறைந்திருந்து கேட்டு அறிய முற்படுகிறான்.
♣பெண்ணின் சகோதரன் என்ற முறையில் ஏன் நேரடியாக அவன் கேட்கவில்லை? எனில் #வென்றவர்களிடம் அவர்களின் #குலம்_அல்லது_எதை_வைத்தும்_பாகுபாடு பார்க்ககூடாது என்பதே #தர்மம். அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அதை கேட்க கூட கூடாது.

♠மறைந்திருந்து விவரம் அறியச் சென்ற திருஷ்டதுய்மனிடம் பதை பதைத்தவாறே துருபதன்,

பாஞ்சாலியை #வென்றவன்

சூத்திரனா?
இழிந்த பிறவியை சேர்ந்தவனா?
கப்பம் கட்டும் வைசியனா?
சத்ரியனா? இல்லை பிராமணா? என வினவுகிறான்.

எனில் ஒரு #சூத்திரன், இழிந்த பிறப்பை கொண்டவனுக்கு கூட சுயம்வரத்தில் பங்கேற்க #அனுமதியுண்டு அதை துருபதனாலும் #தடுக்க முடியாது என அர்த்தம்.

♠மேலும் தனது புரோகிதரை வைத்து இதை அறிய விரும்புகிறான் துருபதன். இதை புரோகிதர் யுதிஷ்டிரரிடம் கேட்டவுடன்

👉" அவன் என்ன வர்ணம்,
என்ன குலம், என்ன தொழிலாக இருந்தால் என்ன? போட்டியில் வென்றான் திரௌபதியை அடைந்தான் "
என புரோகிதரை கடிந்துரைக்கிறார் யுதிஷ்டிரன்.

♠பின்னர் அவர்களை பற்றி அறிய முடியாததால் தூதுவன் மூலம் விருந்திற்கு ஏற்பாடு செய்கிறான் துருபதன். அந்த விருந்தில் அவர்களை பற்றி அறிய அனைத்து தொழில் புரிபவர்களின் #இயந்திரங்களையும் விளையாட்டு பொருட்களையும் ஒவ்வொரு குலத்தின் முறைப்படி திருமண முறைகளையும் அமைக்கிறார்.
♠ இதில் பாண்டவர்கள் #வீரர்களாதலால் போர் #தளவாடங்களை ஆர்வத்துடன் பார்க்கும் வேளையில் வேறு வழியில்லாமல் கேட்டே விடுகிறான் துருபதன். அதன் பின்னே தனது #அடையாளத்தை உரைக்கிறார் யுதிஷ்டிரன்.

உண்மையில் இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்கள்.

அவ்வாறு குயவன் இல்லத்தில்
பாண்டவர்கள் பிச்சை எடுத்து வந்த உணவை சரியாக பங்கு பிரித்து மகிழ்வாக உண்டு, இல்லத்தில் #இடமில்லாததால் பாண்டவர் #தலைப்பக்கத்தில் குந்தி தேவி படுத்துறங்க #குசப்புற்கள் மீது மான் தோல் விரித்து பாண்டவர்கள் #கால்மாட்டில் படுத்துறங்கிய அன்னை பாஞ்சாலியின் பெருமை சொல்லி மாளாது.

😡TRP Rating-க்காக தொலைகாட்சி தொடரில் காட்டப்படும் #உணர்வுகளைத் தூண்டும் காட்சிகளை வைத்து பல காலங்களாக #இந்தியாவில் ஏன் #தமிழகத்தில் கூட பல இடங்களில் கோவில் கட்டி வணங்கிய திரௌபதி தேவியை விமர்சிப்பது முட்டாள்தனமாகும்.

அடுத்த பதிவில் கர்ணனுக்கு நிகழ்ந்த விஷயங்கள் பிறப்பினால் வந்த பாகுபாட்டினாலா என்பதைத் தெளிவாகக் காணலாம்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!🙏🙏🙏