Monday, September 25, 2017

கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

கேள்வி : இத்தனை அஸ்திரங்கள் இராமபிரான் அறிந்திருந்தும் ஏன் இராவணன் மகன் இந்த்ரஜித் தொடுத்த நாகபாசத்தை தடுக்கவில்லை.....??

https://m.facebook.com/story.php?story_fbid=250256242147332&id=100014888746843

முதலில் இங்கு பாசம் என்பது என்ன என்பதை பார்க்கலாம்

ஒருவரை கட்டிப்போட பயன்படும் அஸ்திரங்களே பாசங்களாகும் இவற்றில் பல வகையுண்டு தர்மபாசம், வருணபாசம், காலபாசம், இவைகள் இராமர் அறிந்ததே

இங்கு மேகநாதன் தொடுத்தது நாகபாசமாகும் அதாவது இது தொடுக்கப்பட்டால் கொடுமையான நாகங்கள் வெளிவந்து எதிரியை கட்டும் இவ்வாறே இராமலட்சுமணர்கள் கட்டப்பட்டனர்

நாகங்கள் கட்டியதால் பட்சிராஜன் கருடன் வந்த போது அது விலகியது

எனில் நாகபாசத்தை தடுக்க எந்த அஸ்திரத்தாலும் முடியாதா என்ன....?

இல்லவே இல்லை நாகபாசத்திற்கு அவ்வளவு சக்தி இல்லை

எனில் ஏன் இதை இராமபிரான் தடுக்க வில்லை சற்று தெளிவாக பார்ப்போம்

இலங்கைக்கு வானர சேனை சென்றவுடனே அவைகளை எதிர்த்து இராட்சஸர்கள் வருகின்றனர்

பகல் முழுதும் நடந்த யுத்தம் இராத்திரியிலும் தொடர்கிறது

இராத்திரி யுத்தத்தில் இந்த்ரஜித்தை அங்கதன் எதிர்க்கிறான் அங்கதன் இந்த்ரஜித்தின் குதிரைகளையும் சாரதியையும் கொல்கிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 28 -வது ஸ்லோகம்)

இதனால் இந்த்ரஜித் உடனடியாக அந்த இடத்தை விட்டு மறைகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 29 -வது ஸ்லோகம்)

அங்கதனால் தோற்கடிக்கப்பட்ட இந்த்ரஜித் கோபத்துடன் தன்னை யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து கொண்டு திரும்பவும் யுத்தகளம் வருகிறான்
(யுத்த காண்டம் 44 -வது சர்க்கம் 35 -வது ஸ்லோகம்)

யுத்தத்தில் தன்னை மறைத்து இராம லட்சுமணர்களை தாக்குகிறான் பிறகு இராம லட்சுமணர்களிடம்
" யுத்தத்தில் நான் தன்னை மறைத்து கொண்டு வந்தால் 1000 கண்களையுடைய இந்திரனால் கூட என்னை பார்க்க முடியாது பின் மனிதர்களான உங்களால் முடியுமா என்ன " என கூறுகிறார்
(யுத்த காண்டம் 45 -வது சர்க்கம் 11 -வது ஸ்லோகம்)

எனில் மறைந்து நின்று தான் இராமலட்சுமணர்களை தாக்கினாரே தவிர நேரடியாக தாக்க வில்லை பிறகு எவ்வாறு நாகபாசத்தை இராமரால் தடுக்க முடியாது என கூறமுடியும்

இவ்வாறு தாக்கி இராமலட்சுமணர்கள் வீழ்ந்தபின் நான் அவர்களை யுத்தத்தில் கொன்று விட்டேன் என இராவணனிடம் கூறுகிறார்
(யுத்த காண்டம் 46 -வது சர்க்கம் 12 -வது ஸ்லோகம்)

இதையெல்லாம் வைத்து பார்த்தால் இந்த்ரஜித் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்து நாகபாசத்தை விட்டான் இதை இராமபிரான் எங்ஙனம் தடுப்பது

அனைத்திற்கும் ஸ்லோகம் முதற்கொண்டு கூறப்பட்டுள்ளது இங்கு கூறியதில் ஏதேனும் பிழை இருந்தால் ஆதாரத்துடன் தெளிவாக கூறலாம்


No comments:

Post a Comment