#பாகுபாடில்லா_பாரதம் :4
முந்தைய பதிவு
(சர்ச்சைக்குரிய #பாஞ்சாலி_சுயம்வரம்!)
கர்ணன் வில்லை எடுத்து குறி பார்த்து அடிக்கும் வேளையில் பாஞ்சாலி கூறியதாகச் சொல்லப்படும், "ஒரு சூதனை என் தலைவனாக நான் கொள்ள மாட்டேன்" என்ற ஒரு வரி தான் #குழப்பங்களுக்கெல்லாம் காரணம்.
#முரண்பட்டதாக கருதப்படும் இந்த வரியை Bori Critical edition நீக்கியது.
அது என்ன? Bori Critical edition
🌺19 ம் நூற்றாண்டின் இறுதியில், எண்ணற்ற மகாபாராத நூல்கள் இந்தியா #முழுவதும் இருந்தாலும் ஒரு சரியான பொதுவான நூல் வேண்டும் என மஹாபாரத பிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முடிவெடுக்க அப்பொறுப்பை Bhandarkar Oriental Research Institute ஏற்கிறது.
🌺அவர்கள் உலகம் முழுக்க இருந்த 1259-க்கும் மேற்பட்ட மஹாபாரத நூல்களை 50 வருடம் ஆராய்ந்து எண்ணற்ற இடைசொருகல்களை நீக்கிய பின் 22-9-1966 அன்று அன்றைய ஜனாதிபதி சர்வபள்ளி #இராதாகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்டதே இந்த Critical edition.
🌺பல காலம் #சமஸ்கிருதத்திலேயே இருந்த இந்த Critical edition 2010 ஆம் ஆண்டு பிபேக் தீப்ராய் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க துவங்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முடிவடைந்தது.
🌺இவர்கள் செய்த ஆராய்ச்சியில் திரௌபதி கூறியதாக சொல்லப்படும் #சூதனை ஏற்க மாட்டேன் முதலிய பலவரிகளை நீக்கினர்.
🌺மொத்தம் உள்ள 21 தேவநகரி ஏடுகளில் 3-ல் மட்டுமே இந்த வரி உள்ளதாகவும் அதுவும் ஆராயப்பட்டு பின்னால் சேர்க்கப்பட்டவையே என அறிவித்தனர்.
🌺வந்த மன்னர்கள் அனைவரும் #தோற்றபின்னரே அர்ஜுனன் செல்கிறார்.
இதில் கர்ணனும் அடக்கம் என்பதை பின்வரும் வரிகள் தெளிவாக உரைக்கின்றனர்.
Bori
Vaishampayana said, ‘When all the kings gave up attempting to string the bow, the great-
souled Jishnu arose from among the Brahmanas. On seeing Partha advance, with a
complexion resplendent like that of Indra’s flag, the chief Brahmanas shook their deerskins and created a loud uproar. Some of them were pleased. Others were displeased.
Others among them, who lived by their wisdom and were wise, told each other, “O Brahmanas! If #Kshatriyas like #Karna and #Shalya, who are famous in the world, have great strength and are well versed in Dhanur Veda, could not string the bow, how can this weakling Brahmana, with no knowledge of weapons, succeed?
♦முதலில் சூதன் என்பதும் #சூத்திரன் என்பதும் வேறு வேறு என்பதையும்
சூதன் என்றாலே #தேரோட்டி என்று சொல்வது தவறென்றும் அறியுங்கள்.
♦சூதனிலும் அரசர்கள் உள்ளனர். கர்ணனின் தந்தையான #அதிரதனும் ஒரு சூதர் #அரசனே. (இதை தெளிவாக அடுத்த பதிவில் காணலாம் )
♦சில அறிவிலிகளால் சேர்க்கப்பட்ட இதை வைத்தே பாகுபாடு உண்டென்று கூறுவர் பலர்....
♦இது இல்லை என கூறியாகிவிட்டது இனி அந்த சுயம்வரத்தின் பாகுபாடற்ற தன்மை குறித்து காண்போம்.
சுயம்வரத்தில் இரண்டு முறைகள் உண்டு.
1.ஒன்று பல அரசர்கள் கூடி நிற்க அதில் ஒருவரை மணப்பெண் தேர்ந்தெடுப்பாள்.
🌹விதர்ப்ப தேச இளவரசி தமயந்தி காட்டுவாசிகள் என்றழைக்கப்படும் #நிஷாதர்களின் அரசன் #நளனை தேர்ந்தெடுத்தாள்.
(கிருஷ்ணனின் மனைவியான ருக்மிணியும் விதர்ப்ப தேசமே)
2.மற்றொன்று குறிப்பிட்ட #வீரதீர சாகசம் புரிபவருக்கு பெண் மாலையிட்டு மனைவியாக வேண்டும். இதில் வீரம் மட்டுமே விஷயமே தவிர அவன் யார் என்பது #விஷயமில்லை பாஞ்சாலி சுயம்வரம் இப்படி நடைப்பெற்றதே.
👉கீழுள்ள விஷயங்களை சற்று உற்று நோக்குங்கள். சுயம்வரம் முடிந்தவுடன் நடந்த விசயங்கள் அதன் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர் (ஆதி பர்வம் 193 - 197)
💐 முதலில் அர்ஜுனன் அங்கே #அரசகுமாரானாக வரவில்லை. #மான் தோல் அணிந்து அவன் அர்ஜுனனா என என அத்தனை அரசர்கள் ஏன் கர்ணனாலேயே கூட கண்டுபிடிக்க முடியாத அளவு #விகாரமாக வந்தார்.
♠போட்டியில் வென்றபின் அர்ஜுனனை அவன் யார்? எந்த #குலம்? என கூட யாரும் கேட்கவில்லை. #வென்றதும் பாஞ்சாலியுடன் செல்கிறார்.
♠துருபதனை விடுங்கள்! #பாஞ்சாலியே அர்ஜுனனை யார் என கேட்கவில்லை. மாறாக அவன் அணிந்த மான்தோலை பிடித்துகொண்டு அர்ஜுனன் உடன் மகிழ்வாக செல்கிறார்.
♠துருபதனின் சொற்படி திருஷ்டதுய்மன் அவர்கள் யாராக இருப்பார்கள் என மறைந்திருந்து கேட்டு அறிய முற்படுகிறான்.
♣பெண்ணின் சகோதரன் என்ற முறையில் ஏன் நேரடியாக அவன் கேட்கவில்லை? எனில் #வென்றவர்களிடம் அவர்களின் #குலம்_அல்லது_எதை_வைத்தும்_பாகுபாடு பார்க்ககூடாது என்பதே #தர்மம். அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அதை கேட்க கூட கூடாது.
♠மறைந்திருந்து விவரம் அறியச் சென்ற திருஷ்டதுய்மனிடம் பதை பதைத்தவாறே துருபதன்,
பாஞ்சாலியை #வென்றவன்
சூத்திரனா?
இழிந்த பிறவியை சேர்ந்தவனா?
கப்பம் கட்டும் வைசியனா?
சத்ரியனா? இல்லை பிராமணா? என வினவுகிறான்.
எனில் ஒரு #சூத்திரன், இழிந்த பிறப்பை கொண்டவனுக்கு கூட சுயம்வரத்தில் பங்கேற்க #அனுமதியுண்டு அதை துருபதனாலும் #தடுக்க முடியாது என அர்த்தம்.
♠மேலும் தனது புரோகிதரை வைத்து இதை அறிய விரும்புகிறான் துருபதன். இதை புரோகிதர் யுதிஷ்டிரரிடம் கேட்டவுடன்
👉" அவன் என்ன வர்ணம்,
என்ன குலம், என்ன தொழிலாக இருந்தால் என்ன? போட்டியில் வென்றான் திரௌபதியை அடைந்தான் "
என புரோகிதரை கடிந்துரைக்கிறார் யுதிஷ்டிரன்.
♠பின்னர் அவர்களை பற்றி அறிய முடியாததால் தூதுவன் மூலம் விருந்திற்கு ஏற்பாடு செய்கிறான் துருபதன். அந்த விருந்தில் அவர்களை பற்றி அறிய அனைத்து தொழில் புரிபவர்களின் #இயந்திரங்களையும் விளையாட்டு பொருட்களையும் ஒவ்வொரு குலத்தின் முறைப்படி திருமண முறைகளையும் அமைக்கிறார்.
♠ இதில் பாண்டவர்கள் #வீரர்களாதலால் போர் #தளவாடங்களை ஆர்வத்துடன் பார்க்கும் வேளையில் வேறு வழியில்லாமல் கேட்டே விடுகிறான் துருபதன். அதன் பின்னே தனது #அடையாளத்தை உரைக்கிறார் யுதிஷ்டிரன்.
உண்மையில் இராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்கள்.
அவ்வாறு குயவன் இல்லத்தில்
பாண்டவர்கள் பிச்சை எடுத்து வந்த உணவை சரியாக பங்கு பிரித்து மகிழ்வாக உண்டு, இல்லத்தில் #இடமில்லாததால் பாண்டவர் #தலைப்பக்கத்தில் குந்தி தேவி படுத்துறங்க #குசப்புற்கள் மீது மான் தோல் விரித்து பாண்டவர்கள் #கால்மாட்டில் படுத்துறங்கிய அன்னை பாஞ்சாலியின் பெருமை சொல்லி மாளாது.
😡TRP Rating-க்காக தொலைகாட்சி தொடரில் காட்டப்படும் #உணர்வுகளைத் தூண்டும் காட்சிகளை வைத்து பல காலங்களாக #இந்தியாவில் ஏன் #தமிழகத்தில் கூட பல இடங்களில் கோவில் கட்டி வணங்கிய திரௌபதி தேவியை விமர்சிப்பது முட்டாள்தனமாகும்.
அடுத்த பதிவில் கர்ணனுக்கு நிகழ்ந்த விஷயங்கள் பிறப்பினால் வந்த பாகுபாட்டினாலா என்பதைத் தெளிவாகக் காணலாம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!🙏🙏🙏